March 7, 2012

ஜெங்கிஸ் கான்

சல்மான் கான், அமீர் கான், ஷாருக் கான், ஜாகிர் கான் தெரியும்...யாரிந்த ஜெங்கிஸ் கான், நாம ஏன் இவன பத்தி இப்போ பாக்க போறோம்..முழுசா மேட்டருகுள்ள போறதுக்கு முன்னாடி..இவன பத்தி கொஞ்சம் தெரிஞ்சுப்போம்

இந்த ஜெங்கிஸ் கான் ஒரு மிக பெரிய மங்கோலிய பேரரசர், சீனா காரன் இந்தாளுக்கு பயந்து, அடிக்கடி வந்து அடிச்சுப்போட்டுட்டு போற இவன தடுக்குரதுக்காக எதாவது பண்ணனும்னு நெனைச்சு என்ன பண்ணனும்னு தெரியாம எதையோ கட்டினாங்க..அது தான் சீனா பெருஞ்சுவர்..அப்படியும் அத எகிறி குதிச்சி போய் அங்க இருந்த `கின்` இன ராஜாவ இவன் மடக்கிட்டான்,அந்த ராஜா இவன் கால்ல விழுந்து எங்கள விட்டுடு அப்படின்னு கெஞ்சி இருக்கான், இப்படி கோவமா வந்த எடத்துல இவன் நம்ம கிட்ட சரணடைஞ்சத பார்த்து ஜெங்கிஸ் கன்பியுஸ் ஆனாலும், நாங்க கோவமா வந்துருக்கோம், உன் நாட்டு இளவரசர்பேர், 500 இளம் வீரர்கள் & யங் லேடீஸ், 3000  குதிரை, 1000  ஒட்டகம் குடு உன்ன மன்னிச்சு விட்டுடறேன் அப்படின்னு சொல்லி, அத வாங்கிட்டும் போனானாம்,மதிக்க மறுத்த ஆப்கானிஸ்தான் மன்னர் அஹமத் ஷாவ நல்லா காய்ச்சுன வெள்ளிய கண், காது, தொண்டைன்னு ஊத்தி கொடுமை படுத்தி இருக்கான்.சரி இவனுங்கலாவது அதர் கண்ட்ரீஸ் பரவால்ல, தன் சொந்த சிப்பாய்களுக்கு இவனுடைய டார்கட் தினமும் 100  மைல் கடக்கணும்..தாகனும்னு கூட வழில எங்கயும் நிக்க கூடாது, எடுத்தா கத்திய வெச்சு குதிரையோட கழுத்த கீறி அந்த இரத்தத்த குடிக்கனும்னு கட்டளை.ரெஸ்ட் எடுத்தா டைம் வேஸ்ட் ஆகுதுன்னு சொல்லி 25 எருதுகள வெச்சு பூட்டி ஒரு மொபைல் கூடாரத்த கட்டி அதுல பயணம் செஞ்சு, சண்டைக்கு பிளான் போடறது, வீரர்கள கவனிக்கிறது இப்படி கொஞ்சம் டெக்னிகலான சைக்கோ வில்லன்..

சரி இப்போ கற்கால பிளாஷ்பேக்ல இருந்து நிகழ்காலத்துக்கு வந்ருவோம், வந்து ஒரு கம்பெனில இருக்குற சில கட்டுபாடுகள ( ரூல்ஸ்) பாப்போம்.
அதாவது காலைல 8 .30  இருந்து சாயந்தரம் 7 .30 மணிக்குள்ள இருக்குற இடைப்பட்ட 11 மணி நேரத்துல நீங்க 8 .30 மணி நேரம் உங்க சீட்ல கம்ப்யுட்டருக்கு முன்னாடி உக்காந்து இருக்கணும்,சாப்ட போறது, டீ குடிக்க போறது, அவ்ளோ ஏன் பாத்ரூம் போறது கூட இந்த Swipe Out பண்ணிட்டு தான் வெளில போகணும், நீங்க போன அந்த நேரம் நீங்க சீட்ல இருக்க வேண்டிய 8 .30 மணி நேர கணக்குல வராது (தல சுத்துதா..), ஒரு வருஷத்துக்கு மொத்தமா 21 நாள் லீவ் இருக்கும்ல அதுல மொத்தம் 12 Earned  லீவ், 5 Casual Leave , 4 Sick  Leave இத எப்படி விளக்கமா சொல்றதுன்னு எனக்கு கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு இருந்தாலும் சொல்றேன்....இந்த லீவெல்லாம் எப்படி மொத்தமா கொடுக்காம மாசத்துக்கு ஒரு earned leave அப்படின்னு மொத்தம் 12 மாசத்துக்கு 12 லீவ்...கணக்கு வந்துச்சா..மிச்சம் இருக்குற Casual , Sick leave ரெண்டும் நாற்பத்தஞ்சு நாளைக்கு ஒரு தரம் சேர்ப்பாங்க..மாசத்துக்கு ஒண்ணுனு ஒரு Earned லீவ் சேரும்..அப்போ நீங்க அந்த லீவ் எடுதுடீங்கன்னா அவ்ளோ தான்,  அதுக்கப்புறம் நீங்க லீவ் போட்டா பரவால்ல, ஆனா உங்களுடைய ஒரு நாள் சம்பளம் அது பாட்டுக்கு LOP ( LOSS of  PAY ) அப்படின்ற பேர்ல தானே புயல் நிவாரண நிதிக்கு போய்டும்..சரிப்பா நான் லீவே போடாம எல்லாத்தையும் சேர்த்து வெச்சுப்பேன்..அப்படி சமாளிப்பேன்.அப்படின்னு சொல்றவங்களுக்கும் ஒரு செக் இருக்கு..ஒரு கால் நீங்க ஆபீஸ் வர வழில அடி பட்டாலோ இல்ல திடிர்னு உடம்புக்கு முடியாம வர முடியாம போனாலோ முடிஞ்சுது சோலி..அடுத்த நாள் நீங்க ஆபீசுக்கு வந்து earned & casual லீவ் அப்ளை பண்ண முடியாது..சிக் லீவ் இருந்தா மட்டுமே அப்ளை பண்ண முடியும்..அது இல்லனா..எத்தன  லீவ் போட்டீங்களோ அத்தன நாளைக்கு உண்டான சம்பளம் ஆடோமேடிக்கா தானே நிவாரண நிதிக்கு போய்டும்..(LOP )...இதுல வெள்ளி மற்றும் திங்கட் கிழமை நீங்க லீவ் போட்டீங்கன்னா இன்னும் விசேஷம்..நடுவுல இருக்குற சனி & ஞாயிறு கணக்குல சேர்ந்துரும்..(சூப்பர்ல...)..இன்னொரு முக்கியாமான விஷயம் இந்த லீவ் பாலிசி எல்லாம் ஏப்ரல் டு மார்ச் தான், அதுக்கப்புறம் உங்களுக்கு லீவ் மிச்சம் இருந்தா அது கான்சல் ஆகிடும்..ஆத்திர அவசர காலத்துக்கு இந்த பெர்மிஷன் அப்படினெல்லாம் சொல்வங்கல்ல அப்படின்னா என்னனே தெரியாத கம்பெனி..திடிர்னு நமக்கோ இல்ல வீட்ல இருக்குரவங்களுக்கோ.....உடம்புக்கு முடியாம போச்சுன்னா ஒன்னு லீவு போடு..இல்ல நிவாரண நிதிக்கு பண கொடு...இது மட்டும் தான் பதில்..இது போக இங்க நடக்குற Annual Appraisal , மத்த விஷயங்கள் எல்லாம் எப்படி இருக்கும்னு நீங்களே யூகிச்சு இருப்பீங்க..

மேல சொன்ன விதிமுறைக்கும், ஜெங்கிஸ் கான் கதைக்கும் என்ன சம்பந்தம்..நான் பாக்குறது மொபைல் கேமிங் சம்பந்தமான வேலன்றதால.கிட்ட திட்ட ஆயிர கணக்குல எங்க கிட்ட இந்த மாதிரி கேம்ஸ் இருக்கும்...அதுல ஒரு கேம் தான் இந்த ஜெங்கிஸ் கான்..அந்த பேர விளையாட்டா நான் வேல பாக்குற கம்பெனி MD க்கு வெச்சேன்...ஆனா அதுக்கப்புறம் அவர் நடந்துட்ட விதம் உண்மையான ஜெங்கிஸ் கான் எனக்கு ரொம்ப நல்லவனா தெரிஞ்சான்..Naukari . com கூட தன்னோட Resume  பதிவு பண்ணாம 11 வருஷம் இந்த கம்பனிக்காக உழைச்ச ஒருத்தர வேல செய்ற அத்தன பேர் முன்னாடியும் `கழுத்த புடிச்சு வெளில தள்ளுங்கடா அவன` அப்படின்னு கத்துற அளவுக்கு ஒரு மனிதாபிமானி தான் நம்ம ஜெங்கிஸ் கான். இத்தனைக்கும் நடந்த தப்புக்கும் வெளில போனவருக்கும் சம்பந்தமே இல்லாம...இது நடந்தது...இதே தப்ப அவர் சார்ந்த சமூகத்த ( பச்சையா சொல்லனும்னா `ஜாதி` )யாரவது ஒருத்தன் இப்படி பண்ணி இருந்த கண்டிப்பா இப்படி நடந்துருக்க மாட்டான் நம்ம கான்...நானே ஊருக்கு வரணும்னா என்னோட பாஸ் கிட்ட லீவ் கேக்கனுமேன்னு துளி கூட பயந்தது இல்ல..ஆனா கிளம்பி குறைஞ்சபட்சம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்(அது ஒன்னு இருக்கு, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரம் ஆபீஸ்ல இருக்கணும் 7.59 நிமிஷம் இருந்தாலும் உங்க பைசா நிவாரண நிதிக்கு போய்டும் )கவர் பண்ணி லீவ் இல்லாம, LOP  இல்லாம நல்ல படியா ஊருக்கு  போகனும்னு வேண்டிப்பேன்..இப்படி ஒரு சாத்தான் எங்களுக்கெல்லாம் வேதம் ஓதிட்டு இருந்தது பத்தாதுன்னு..இந்த சாத்தனுக்கே வேதம் மற்றும் புது புது விதிமுறைகள சொல்லி கொடுக்க புது சாத்தான் ஒன்னு அப்புறாம வேலைக்கு சேர்ந்துது..HR  அப்படின்ற ரூபத்துல..ஏற்கனவே முள்ளு மேல உக்காந்துட்டு இருந்த எங்களுக்கு அதுல இன்னும் கொஞ்சம் ஆசிட் ஊத்தின மாதிரி இது வந்து சேர்ந்துது..

இந்தியால இருக்குற லேபர் லா எல்லாத்துக்கும் சவால் விடற வகைல இருக்குற இந்த லா பத்தி எந்த பத்திரிகை, டிவியும் கண்டுக்கல அப்படின்றது எனக்கு கொஞ்சம் வருத்தம்..

`அதோ அவனுக்கு டைபாய்ட் வந்துருக்கு, 2  லீவ் தான் இருக்கு, என்ன பண்றது` அப்படின்னு என்னோட பாஸ் எனக்காக போய் லீவ் கேட்டப்ப `அந்த ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு மிச்சத்துக்கு LOP போக சொல்லு` அப்படின்னு சொல்லி நெல்சன் மண்டேலாக்கு அடுத்தபடியா சிறந்த மனிதாபிமானியா என் மனசுல இருக்காரு இந்த ஜெங்கிஸ் கான்..இப்படி டைபாய்ட், தங்கச்சி கல்யாணம் அப்படி இப்படின்னு நானே மொத்தமா ஒரு 6000 க்கு மேல காச எழந்துருக்கேன்...(இத எழுதிட்டு இருக்கப்போ கூட 614 போச்சு)  

உண்மையான  ஜெங்கிஸ் கான் செத்தப்போ மொத்த மங்கோலிய மக்களும் கூடி நின்னு அழுதாங்களாம், ஏன்னா அவன் மத்தவங்கள படுத்தி எடுத்தாலும்..தன் மக்களை நல்ல படியா பாத்துகிட்ட்டான்..ஆனா அது இங்க நடக்குமான்னு தெரில..

உலகம் இந்த ஹிட்லர், முசோலினி, இடி அமீன் இப்படி எத்தனையோ சர்வாதிகாரிகள பாத்துருக்கு..சிகாடிலோ, டாமர், `சிகப்பு ரோஜாக்கள் ` கமல் ஹாசன், அமுதன்,இளமாறன் மாதிரி நிறைய சைக்கோ கொலைகாரங்கள பாத்துருக்கு...இதுல எதுலயுமே சேராம..ஒரு புது விதமான சாடிஸ்ட் & சைக்கோ தான் நம்மாளு..(கூடவே பணம், பதவி, அதிக்கார திமிரும்) ...

நான் போற இடத்துல எல்லாம் இந்த மாதிரி ஆளுங்க எப்படியும் இருப்பாங்க, ஓரளவுக்கு கோபமா, இல்ல முடிஞ்ச அளவுக்கு காமடியா அவங்களுக்கு பதில் சொல்லி இருக்கேன், முறைச்சு இருக்கேன்..(பின்னாடி அவஸ்தையும்  பட்டு இருக்கேன்)..இந்தாளு ரொம்ப பெரிய இடம், ஜாதி பின்னணி, ஒரு பெரிய அரசியல்  வாரிசோட  மிக நெருங்கிய நண்பன்.....நான் என்ன, எவனும் அந்தாள ஒன்னும் பண்ண முடியாது..இப்போதைக்கு...அதான் அந்த இயலாமை, ஆற்றாமை, கோபம் இதெல்லாம் இருக்கு..ஆனா ஒன்னும் பண்ண முடியல..அதுக்கான வடிகால் தான் இது...

இப்போ மட்டும் எப்படி டா உனக்கு இந்த தைரியம் வந்துது அப்படின்னு கேக்க கூடாது...ஏன்னா இந்த மார்ச் மாசத்தோட நான் இங்கே இருந்து கெளம்புறேன்..இவன் ஒருத்தனால ரொம்ப நெருங்கியவங்க கிட்ட இருந்து பிரிய வேண்டியதா போச்சு... 

இப்படி பட்ட ஆளுங்கள ( பெரியவனோ, சின்னவனோ) இனிமே நான் எங்கயும் பாக்க கூடாதுன்னு - இருக்குதா , இல்லையான்னு தெரியாத அந்த கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.

1 comment:

  1. Enna thalaivare, thidinrnu oru kunda thooki podureengaley!..........

    ReplyDelete

March 7, 2012

ஜெங்கிஸ் கான்

சல்மான் கான், அமீர் கான், ஷாருக் கான், ஜாகிர் கான் தெரியும்...யாரிந்த ஜெங்கிஸ் கான், நாம ஏன் இவன பத்தி இப்போ பாக்க போறோம்..முழுசா மேட்டருகுள்ள போறதுக்கு முன்னாடி..இவன பத்தி கொஞ்சம் தெரிஞ்சுப்போம்

இந்த ஜெங்கிஸ் கான் ஒரு மிக பெரிய மங்கோலிய பேரரசர், சீனா காரன் இந்தாளுக்கு பயந்து, அடிக்கடி வந்து அடிச்சுப்போட்டுட்டு போற இவன தடுக்குரதுக்காக எதாவது பண்ணனும்னு நெனைச்சு என்ன பண்ணனும்னு தெரியாம எதையோ கட்டினாங்க..அது தான் சீனா பெருஞ்சுவர்..அப்படியும் அத எகிறி குதிச்சி போய் அங்க இருந்த `கின்` இன ராஜாவ இவன் மடக்கிட்டான்,அந்த ராஜா இவன் கால்ல விழுந்து எங்கள விட்டுடு அப்படின்னு கெஞ்சி இருக்கான், இப்படி கோவமா வந்த எடத்துல இவன் நம்ம கிட்ட சரணடைஞ்சத பார்த்து ஜெங்கிஸ் கன்பியுஸ் ஆனாலும், நாங்க கோவமா வந்துருக்கோம், உன் நாட்டு இளவரசர்பேர், 500 இளம் வீரர்கள் & யங் லேடீஸ், 3000  குதிரை, 1000  ஒட்டகம் குடு உன்ன மன்னிச்சு விட்டுடறேன் அப்படின்னு சொல்லி, அத வாங்கிட்டும் போனானாம்,மதிக்க மறுத்த ஆப்கானிஸ்தான் மன்னர் அஹமத் ஷாவ நல்லா காய்ச்சுன வெள்ளிய கண், காது, தொண்டைன்னு ஊத்தி கொடுமை படுத்தி இருக்கான்.சரி இவனுங்கலாவது அதர் கண்ட்ரீஸ் பரவால்ல, தன் சொந்த சிப்பாய்களுக்கு இவனுடைய டார்கட் தினமும் 100  மைல் கடக்கணும்..தாகனும்னு கூட வழில எங்கயும் நிக்க கூடாது, எடுத்தா கத்திய வெச்சு குதிரையோட கழுத்த கீறி அந்த இரத்தத்த குடிக்கனும்னு கட்டளை.ரெஸ்ட் எடுத்தா டைம் வேஸ்ட் ஆகுதுன்னு சொல்லி 25 எருதுகள வெச்சு பூட்டி ஒரு மொபைல் கூடாரத்த கட்டி அதுல பயணம் செஞ்சு, சண்டைக்கு பிளான் போடறது, வீரர்கள கவனிக்கிறது இப்படி கொஞ்சம் டெக்னிகலான சைக்கோ வில்லன்..

சரி இப்போ கற்கால பிளாஷ்பேக்ல இருந்து நிகழ்காலத்துக்கு வந்ருவோம், வந்து ஒரு கம்பெனில இருக்குற சில கட்டுபாடுகள ( ரூல்ஸ்) பாப்போம்.
அதாவது காலைல 8 .30  இருந்து சாயந்தரம் 7 .30 மணிக்குள்ள இருக்குற இடைப்பட்ட 11 மணி நேரத்துல நீங்க 8 .30 மணி நேரம் உங்க சீட்ல கம்ப்யுட்டருக்கு முன்னாடி உக்காந்து இருக்கணும்,சாப்ட போறது, டீ குடிக்க போறது, அவ்ளோ ஏன் பாத்ரூம் போறது கூட இந்த Swipe Out பண்ணிட்டு தான் வெளில போகணும், நீங்க போன அந்த நேரம் நீங்க சீட்ல இருக்க வேண்டிய 8 .30 மணி நேர கணக்குல வராது (தல சுத்துதா..), ஒரு வருஷத்துக்கு மொத்தமா 21 நாள் லீவ் இருக்கும்ல அதுல மொத்தம் 12 Earned  லீவ், 5 Casual Leave , 4 Sick  Leave இத எப்படி விளக்கமா சொல்றதுன்னு எனக்கு கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு இருந்தாலும் சொல்றேன்....இந்த லீவெல்லாம் எப்படி மொத்தமா கொடுக்காம மாசத்துக்கு ஒரு earned leave அப்படின்னு மொத்தம் 12 மாசத்துக்கு 12 லீவ்...கணக்கு வந்துச்சா..மிச்சம் இருக்குற Casual , Sick leave ரெண்டும் நாற்பத்தஞ்சு நாளைக்கு ஒரு தரம் சேர்ப்பாங்க..மாசத்துக்கு ஒண்ணுனு ஒரு Earned லீவ் சேரும்..அப்போ நீங்க அந்த லீவ் எடுதுடீங்கன்னா அவ்ளோ தான்,  அதுக்கப்புறம் நீங்க லீவ் போட்டா பரவால்ல, ஆனா உங்களுடைய ஒரு நாள் சம்பளம் அது பாட்டுக்கு LOP ( LOSS of  PAY ) அப்படின்ற பேர்ல தானே புயல் நிவாரண நிதிக்கு போய்டும்..சரிப்பா நான் லீவே போடாம எல்லாத்தையும் சேர்த்து வெச்சுப்பேன்..அப்படி சமாளிப்பேன்.அப்படின்னு சொல்றவங்களுக்கும் ஒரு செக் இருக்கு..ஒரு கால் நீங்க ஆபீஸ் வர வழில அடி பட்டாலோ இல்ல திடிர்னு உடம்புக்கு முடியாம வர முடியாம போனாலோ முடிஞ்சுது சோலி..அடுத்த நாள் நீங்க ஆபீசுக்கு வந்து earned & casual லீவ் அப்ளை பண்ண முடியாது..சிக் லீவ் இருந்தா மட்டுமே அப்ளை பண்ண முடியும்..அது இல்லனா..எத்தன  லீவ் போட்டீங்களோ அத்தன நாளைக்கு உண்டான சம்பளம் ஆடோமேடிக்கா தானே நிவாரண நிதிக்கு போய்டும்..(LOP )...இதுல வெள்ளி மற்றும் திங்கட் கிழமை நீங்க லீவ் போட்டீங்கன்னா இன்னும் விசேஷம்..நடுவுல இருக்குற சனி & ஞாயிறு கணக்குல சேர்ந்துரும்..(சூப்பர்ல...)..இன்னொரு முக்கியாமான விஷயம் இந்த லீவ் பாலிசி எல்லாம் ஏப்ரல் டு மார்ச் தான், அதுக்கப்புறம் உங்களுக்கு லீவ் மிச்சம் இருந்தா அது கான்சல் ஆகிடும்..ஆத்திர அவசர காலத்துக்கு இந்த பெர்மிஷன் அப்படினெல்லாம் சொல்வங்கல்ல அப்படின்னா என்னனே தெரியாத கம்பெனி..திடிர்னு நமக்கோ இல்ல வீட்ல இருக்குரவங்களுக்கோ.....உடம்புக்கு முடியாம போச்சுன்னா ஒன்னு லீவு போடு..இல்ல நிவாரண நிதிக்கு பண கொடு...இது மட்டும் தான் பதில்..இது போக இங்க நடக்குற Annual Appraisal , மத்த விஷயங்கள் எல்லாம் எப்படி இருக்கும்னு நீங்களே யூகிச்சு இருப்பீங்க..

மேல சொன்ன விதிமுறைக்கும், ஜெங்கிஸ் கான் கதைக்கும் என்ன சம்பந்தம்..நான் பாக்குறது மொபைல் கேமிங் சம்பந்தமான வேலன்றதால.கிட்ட திட்ட ஆயிர கணக்குல எங்க கிட்ட இந்த மாதிரி கேம்ஸ் இருக்கும்...அதுல ஒரு கேம் தான் இந்த ஜெங்கிஸ் கான்..அந்த பேர விளையாட்டா நான் வேல பாக்குற கம்பெனி MD க்கு வெச்சேன்...ஆனா அதுக்கப்புறம் அவர் நடந்துட்ட விதம் உண்மையான ஜெங்கிஸ் கான் எனக்கு ரொம்ப நல்லவனா தெரிஞ்சான்..Naukari . com கூட தன்னோட Resume  பதிவு பண்ணாம 11 வருஷம் இந்த கம்பனிக்காக உழைச்ச ஒருத்தர வேல செய்ற அத்தன பேர் முன்னாடியும் `கழுத்த புடிச்சு வெளில தள்ளுங்கடா அவன` அப்படின்னு கத்துற அளவுக்கு ஒரு மனிதாபிமானி தான் நம்ம ஜெங்கிஸ் கான். இத்தனைக்கும் நடந்த தப்புக்கும் வெளில போனவருக்கும் சம்பந்தமே இல்லாம...இது நடந்தது...இதே தப்ப அவர் சார்ந்த சமூகத்த ( பச்சையா சொல்லனும்னா `ஜாதி` )யாரவது ஒருத்தன் இப்படி பண்ணி இருந்த கண்டிப்பா இப்படி நடந்துருக்க மாட்டான் நம்ம கான்...நானே ஊருக்கு வரணும்னா என்னோட பாஸ் கிட்ட லீவ் கேக்கனுமேன்னு துளி கூட பயந்தது இல்ல..ஆனா கிளம்பி குறைஞ்சபட்சம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்(அது ஒன்னு இருக்கு, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரம் ஆபீஸ்ல இருக்கணும் 7.59 நிமிஷம் இருந்தாலும் உங்க பைசா நிவாரண நிதிக்கு போய்டும் )கவர் பண்ணி லீவ் இல்லாம, LOP  இல்லாம நல்ல படியா ஊருக்கு  போகனும்னு வேண்டிப்பேன்..இப்படி ஒரு சாத்தான் எங்களுக்கெல்லாம் வேதம் ஓதிட்டு இருந்தது பத்தாதுன்னு..இந்த சாத்தனுக்கே வேதம் மற்றும் புது புது விதிமுறைகள சொல்லி கொடுக்க புது சாத்தான் ஒன்னு அப்புறாம வேலைக்கு சேர்ந்துது..HR  அப்படின்ற ரூபத்துல..ஏற்கனவே முள்ளு மேல உக்காந்துட்டு இருந்த எங்களுக்கு அதுல இன்னும் கொஞ்சம் ஆசிட் ஊத்தின மாதிரி இது வந்து சேர்ந்துது..

இந்தியால இருக்குற லேபர் லா எல்லாத்துக்கும் சவால் விடற வகைல இருக்குற இந்த லா பத்தி எந்த பத்திரிகை, டிவியும் கண்டுக்கல அப்படின்றது எனக்கு கொஞ்சம் வருத்தம்..

`அதோ அவனுக்கு டைபாய்ட் வந்துருக்கு, 2  லீவ் தான் இருக்கு, என்ன பண்றது` அப்படின்னு என்னோட பாஸ் எனக்காக போய் லீவ் கேட்டப்ப `அந்த ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு மிச்சத்துக்கு LOP போக சொல்லு` அப்படின்னு சொல்லி நெல்சன் மண்டேலாக்கு அடுத்தபடியா சிறந்த மனிதாபிமானியா என் மனசுல இருக்காரு இந்த ஜெங்கிஸ் கான்..இப்படி டைபாய்ட், தங்கச்சி கல்யாணம் அப்படி இப்படின்னு நானே மொத்தமா ஒரு 6000 க்கு மேல காச எழந்துருக்கேன்...(இத எழுதிட்டு இருக்கப்போ கூட 614 போச்சு)  

உண்மையான  ஜெங்கிஸ் கான் செத்தப்போ மொத்த மங்கோலிய மக்களும் கூடி நின்னு அழுதாங்களாம், ஏன்னா அவன் மத்தவங்கள படுத்தி எடுத்தாலும்..தன் மக்களை நல்ல படியா பாத்துகிட்ட்டான்..ஆனா அது இங்க நடக்குமான்னு தெரில..

உலகம் இந்த ஹிட்லர், முசோலினி, இடி அமீன் இப்படி எத்தனையோ சர்வாதிகாரிகள பாத்துருக்கு..சிகாடிலோ, டாமர், `சிகப்பு ரோஜாக்கள் ` கமல் ஹாசன், அமுதன்,இளமாறன் மாதிரி நிறைய சைக்கோ கொலைகாரங்கள பாத்துருக்கு...இதுல எதுலயுமே சேராம..ஒரு புது விதமான சாடிஸ்ட் & சைக்கோ தான் நம்மாளு..(கூடவே பணம், பதவி, அதிக்கார திமிரும்) ...

நான் போற இடத்துல எல்லாம் இந்த மாதிரி ஆளுங்க எப்படியும் இருப்பாங்க, ஓரளவுக்கு கோபமா, இல்ல முடிஞ்ச அளவுக்கு காமடியா அவங்களுக்கு பதில் சொல்லி இருக்கேன், முறைச்சு இருக்கேன்..(பின்னாடி அவஸ்தையும்  பட்டு இருக்கேன்)..இந்தாளு ரொம்ப பெரிய இடம், ஜாதி பின்னணி, ஒரு பெரிய அரசியல்  வாரிசோட  மிக நெருங்கிய நண்பன்.....நான் என்ன, எவனும் அந்தாள ஒன்னும் பண்ண முடியாது..இப்போதைக்கு...அதான் அந்த இயலாமை, ஆற்றாமை, கோபம் இதெல்லாம் இருக்கு..ஆனா ஒன்னும் பண்ண முடியல..அதுக்கான வடிகால் தான் இது...

இப்போ மட்டும் எப்படி டா உனக்கு இந்த தைரியம் வந்துது அப்படின்னு கேக்க கூடாது...ஏன்னா இந்த மார்ச் மாசத்தோட நான் இங்கே இருந்து கெளம்புறேன்..இவன் ஒருத்தனால ரொம்ப நெருங்கியவங்க கிட்ட இருந்து பிரிய வேண்டியதா போச்சு... 

இப்படி பட்ட ஆளுங்கள ( பெரியவனோ, சின்னவனோ) இனிமே நான் எங்கயும் பாக்க கூடாதுன்னு - இருக்குதா , இல்லையான்னு தெரியாத அந்த கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.

1 comment:

  1. Enna thalaivare, thidinrnu oru kunda thooki podureengaley!..........

    ReplyDelete