March 12, 2012

காதலில் சொதப்பியது எப்படி - 2

நெட்ல ஒரு ஜோக் பாத்தேன்..இந்த ப்ளாக்பெர்ரி & ஆப்பிள் பழங்களா இருக்குற வரைக்கும் மனுஷன் நிம்மதியா இருந்தான் அப்படின்னு, அது மாதிரி தான் எனக்கு அப்போ நோக்கியா 1100 ஒரு பெரிய மாடல், ஆனா இப்போ C7  வாங்கிட்டு சே என்ன டா இது `டச்` சரி இல்லையே...இப்படி சிம்பயான் போன் வாங்கிட்டோமே கொஞ்சம் வெயிட் பண்ணி Android  வாங்கி இருக்கலாம் டா.அப்படின்னு தோணுது......எங்கப்பா 10 ரூபா கொடுப்பாரு TVS பஸ் ஸ்டாப்ல இருந்து ஜாம் பஜார் மார்க்கெட் வரைக்கும் நடந்தே போய் அரியர் வெச்ச Organic Chemistry பாஸ் பண்ணனும்னு நியூ காலேஜ் ப்ரொபசர் கிட்ட கிளாசுக்கு போவேன்..(இன்னைக்கு தேதியில 10 ரூபா வெச்சுட்டு க்ரோம்பேட்ல இருந்து  பக்கத்துல இருக்குற பல்லாவரத்துக்கு கூட போக முடியாது..புரட்சி தலைவியின் புரட்சி.).. இப்போ `டேய் நேரம் போகல டா வா போய் City Diamond ல பிரியாணி சாப்ட்டு வருவோம்`, `வா ப்ளூ சீ போய் டீ சமோசா சாப்பிடுவோம்` அப்படின்னு அதுக்கெல்லாம் 10 , 15 கிலோ மீட்டர் பஸ்ல போய் டீ  கடைல மட்டும் 100 ரூபா செலவு செய்றேன்..ஆப்ஷனே இல்லாம கெடைச்சத வெச்சு குதூகலமா இருந்த காலமெல்லாம் இப்படி பொலம்பும்போது தான் அது எவ்ளோ நல்லா இருந்துதுன்னு நமக்கு புரியும்..அப்போ கெடைச்ச ஒருத்திக்காக பெத்தவங்க முதற் கொண்டு அத்தன பேரையும் மரியாதை இல்லாம பேசினாலும் ஒன்னையும் மனசுல வெச்சுக்காத நெறைய பேர் என் கூட இப்போவும் இருக்குறதால, ஒரிசாவா இல்ல தமிழ் நாடான்னு அப்படின்னு செலக்ட் பண்ற ஆப்ஷன் கெடைக்குற அளவுக்கு நமக்கு இப்போ வசதின்னாலும் , மனுஷனோட முக்கியத்துவம் தெரிஞ்சு,புரிஞ்சு நடந்துக்குறேன்...  சரி விஷயத்துக்கு போவோம்...

காலேஜ் முடிஞ்சு ஒரு ஒன்னரை வருஷம் சும்மா வெட்டியா சுத்திட்டு இருந்தேன்..அப்போ சினிமால அசிஸ்டன்ட் கேமராமேன் ஆக முயற்சி செஞ்சு எங்க ஏரியால ஒருத்தர புடிச்சு `பார்த்திபன் கனவு` டைரக்டர் கரு.பழனியப்பன் அவரோட ஆஸ்தான கேமராமேன் (இப்போ அவரு இல்ல) திவாகரன் கிட்ட சேர்ந்தேன் (ஒரு 20 நாளைக்கு தான்..படம்: சதுரங்கம்) என் கண்ணுக்கு அவங்க 2 பேரும் மணிரத்னம், P . C . ஸ்ரீராம் மாதிரி தெரிஞ்சாங்க..அப்போ பழனியப்பன் அவரோட மலையாள காதலி பத்தி பேசினத கேட்டு புல்லரிச்சு போய்...``ஓஹ் நீங்க மலையாளமா,நான் தெலுங்கு அப்படின்னு இம்ப்ரெஸ் ஆகி நான் எழுதின டைலாக் எல்லாத்தையும் இவங்க கிட்ட யூஸ் பண்ணனும்னு சொல்லி ப்ரிபேர் பண்ணி வெச்சுருந்த அத்தனையும் மறந்து..உளறி கொட்டினது தான் ஆட்டோக்கு முன்னாடி நின்னு அவங்க கிட்ட பேசினது..

சாயந்தரம் 7 . 30 மணி. வழக்கம் போல பஸ் ஸ்டாண்ட். இப்போ கொஞ்சம் டீசண்டா டிரஸ் பண்ணி இருந்தேன்...ரிசல்ட் வர போகுதுல்ல..அவங்க வந்தாங்க...ஒன்னும் பேசாம...ஒரு 5 நிமிஷம் கழிச்சு நானே ஆரம்பிச்சேன்..``அப்புறம்...ஆபீஸ் எப்படி போச்சு இன்னைக்கு``...அங்க இருந்து பதில்``எப்படி நல்லா போகும்..``ஆஹா போச்சா அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சிட்டே இருந்தேன்..திருப்பியும் அங்க இருந்து..``உங்களுக்கெல்லாம் நேரம் காலமே கிடையாதா..போற நேரத்துல டென்ஷன் பண்ணிட்ட..சுத்தமா வேல ஓடல..(`இல்லனா மட்டும் கிழிசிருவீங்களா` அப்படின்னு கேக்கலாம்னு நினைச்சேன்..விளைவுகள் பயங்கரமா இருக்கும்னு விட்டுடேன்) `சரி சொன்னியே..அதுக்கப்புறம் ஒரு போன் இல்ல ஒரு மெசேஜ்.எதுவும் பண்ணனும்னு தோணலியா உனக்கு`. செல் போன் அப்படீன்ற வார்த்தையே எனக்கு காஸ்ட்லியா காதுல விழுந்த காலம்,எங்கப்பாவோட டாட்டா இண்டிகாம், அப்புறம் பக்கத்து வீட்டு தியாகுவோட மொபைல் இது தான் என்னோட மொபைல் சோர்ஸ். ஒருத்தர் வேலைக்கு போயிட்டாரு , இன்னொருத்தன் காலேஜ் போய்ட்டான்.இப்போ மாதிரி ஆபீஸ் லேப்டாப் வெச்சுகிட்டு Facebook ல மூச்சு விட்றத எல்லாம் Status Update போடற அளவுக்கு நான் அப்போ இல்ல..``என்ன தான் பண்ணிட்டு இருந்த சொல்லு``அப்படின்னு கேட்டாங்க..``இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஹைலைட்ஸ் பாத்தேன், ரேஷன் கடைக்கு போனேன்.அப்புறம்...``...``அப்புறம் என்ன சுரேஷ் வீட்டுக்கு போனியா``....``ஆமா..``...``ஒரு ரோஸ் கொடுக்கணும்னு கூடவா உனக்கு தோணல``அப்படின்னு கேட்டவுடனே தான் அப்பாடா உறுதி ஆயுடுச்சு டா..அப்படின்னு நிம்மதி பெரு மூச்சு விட்டேன்..ஆனாலும் கொஞ்சம் நேரம்.வசை பாடுதல் தொடர்ந்தது..ஓகே ஆன சந்தோஷம் தல கால் புரியாம கொஞ்ச நாள் சுத்தினேன்.உடனடியா அவங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு வீட்ல ஜிம் சேர்ந்தேன் (நாங்க முன்னாடி குடி இருந்த வீடு) வெயிட் எதுவும் போடாம வெறும் இரும்பு ராட்லையே ஷோல்டர், பைசெப்ஸ் போடறது..(அப்போ என்னால வெயிட் தூக்க முடில), பதிலுக்கு அவங்க பங்குக்கு வீட்டுக்கு வெளில வந்து தலை வாருவது, பல் விளக்குவது,வெங்காயம் அறிவது, வெள்ளை பூண்டு உரிப்பது என வீட்டுக்குள் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் ரோடிலே செய்தார்..(கூட வந்த தியாகு கிட்ட பாரதிராஜா மாதிரி கைலையே frame  பிக்ஸ் பண்ணி ``அங்க பாரு டா, பொண்ணுங்க மட்டும் தான் டா நைட்  ட்ரெஸ்ல கூட செம அழகா இருப்பாங்க..``..``நீங்க ஜிம்முக்கு நானும் வரேன்னு சொல்லும்போதே டௌட் ஆனேன்னா நான்.``அப்படின்னு எனக்கு பஞ்ச் கொடுத்தான்..).``சரி நீ பரதநாட்டியம் டான்ஸ் ஆடுவல்ல எப்படி வணக்கம் வெப்பாங்க வெச்சு காமி`` நான் கேட்டதுக்கு அபிநயம் புடிச்சாங்க, அதுக்கு என்னமோ பத்மா சுப்ரமணியம் மாதிரி டான்சே ஆடிட்டாங்கன்னு நான் புகழ்ந்து தள்ளினேன்..(என் தங்கை கர்நாடக சங்கிதம் கத்துகிட்டு மூணு மணி நேரம் மூச்சு விடாம பாடுவா ஒரே ஒரு தரம் கூட நான் புகழ்ந்ததில்ல)அதுக்கப்புறம் அவங்களுக்கு பிடிச்ச விஜய் என் வாய்ல மாட்டிட்டு முழிச்சாரு, ஏன்னு கேள்வி கேட்ட அப்பா வில்லன் ஆனாரு,.....ஓகே ஆன மூணாவது நாளே அட்வைஸ் ஆரம்பிச்சுருச்சு..எப்போ அரியர் க்ளியர் பண்ண போற, இப்படியே சினிமா சினிமான்னு சுத்திட்டு இருக்க போறியா, ஏன் உன் பிரெண்ட்ஸ் எல்லாரும் அப்படி இருக்காங்க..(என்னமோ இவங்க பிரெண்ட்ஸ் அத்தன பேரும் த்ரிஷா, இலியானா ரேஞ்சுக்கு இருக்குற  மாதிரி.).சரி அரியர்க்கு படிக்க ஆரம்பிச்சாச்சு, `சினிமா வேணும்னா நான் வேணாம்னு முடிவு பண்ணுனு சொன்னாங்க`.சரி சும்மா இருந்த காலத்துல Medical  transcription படிச்சேன்.அத வெச்சு ஒரு 2 மாசம் 3  கம்பனில வேல பாத்தேன்..அப்புறம் ஒரு ஷேர் மார்க்கெட் கம்பெனி , அப்புறம் அப்பா மூலமா மெடிக்கல் ரெப், சொந்தகாரன் ஒருத்தன் மூலமா Nittany Desicions  இப்படின்னு மரத்துக்கு மரம் அவங்களுக்காக் தாண்டி...கடைசியா CAMS  ல செட்டில் ஆனேன்..ரொம்ப சந்தோஷமா போச்சு ஓகே இனிமே நாம உருபட்டுடுவோம் அப்படின்னு `நம்பி` சுத்திட்டு இருந்தேன்..Day Shift ல வேலைய முடிச்சிட்டு போய் ஸ்டேஷன்ல நிக்கிறதும், நைட் ஷிப்ட்ல இருந்து வரும்போது தகதகன்னு வர அவங்க முன்னாடி தூங்கின முகத்தோட..முன்னாடி போய் நிக்குரதும்னு போயிட்டு இருந்துது வாழ்க்க..

இதுக்கு நடுவுல அவங்க வீட்ட காலி பண்ணனும்னு முடிவு பண்ணாங்க..இனிமே சுவர் எகிறி குதிக்க வேண்டிய அவசியம் இல்ல அப்படின்னு நினைச்சிட்டு `நம்ம தெருல ஒரு வீடு காலியா இருக்கு உங்கப்பாவ வந்து பாக்க சொல்லு..முடிச்சிரலாம்..அப்படின்னு தேனொழுக பேசி எங்க தெருவுக்கு கூட்டிட்டு வந்தாச்சு..இத அவங்கப்பா எங்க நைனா கிட்ட சொல்ல அவரு க்ரோம்பேட் டு சென்ட்ரல் வரைக்கும் ரயில்ல எல்லாரும் பாக்குற மாதிரி லெக்சர் கொடுக்க... இந்த நண்பன் விஜய் சொல்லுவாரே `என் வாழ்க்கைல மறக்க முடியாத 20 நிமிஷம்` அது மாதிரி என் வாழ்கைலேயே மறக்க முடியாத 45 நிமிஷ அதான்...

என்ன தான் டா ஆச்சு சொல்லி தொலையேன் டா..கேக்குது..நீங்க கேக்குறது கேக்குது...ஸ்கூல்,காலேஜ், பழக்கம்,சுற்று வட்டாரம் இப்படி என்ன சுத்தி எப்பவும் பசங்க மட்டும் தான் இருந்தாங்க,இப்போவும் அப்படி தான், முதல்ல இருந்து இப்போ வரைக்கும் நான் ரொம்ப க்ளோசா இருந்தது 2  பொண்ணுங்க கிட்ட மட்டும் தான்,ஒன்னும் என் மம்மி, இன்னொன்னு பாச மலர் தங்கை..இவங்க 2 பேரும்..தலைல முடி நெறைய இருக்குறவங்க, ரொம்ப மேக் அப் அதெல்லாம் பண்ணாதவங்க, அப்பா ஆபீஸ் ல இருந்து வரும்போது எடுத்துட்டு வர  லக்கேஜ வாங்கிட்டு வந்து உள்ள வெக்குரவங்க..இப்படி இவங்கள பாத்துட்டு பொண்ணுங்கன்னா இப்படி தான் இருப்பாங்க போலருக்கு..அப்படின்னு கற்பனை பண்ணது தப்பு..நம்மாளு நல்லா லெங்க்த் இருந்த தலை முடிய கட் பண்ணிட்டா.., கைல இருக்குற 10 விரலுக்கும் 10 விதமான நைல் பாலிஷ்,அப்படி இப்படின்னு நெறைய சேஞ்சஸ்..அவங்கள தப்பு சொல்லல..இது எதுக்கும் நான் மறுப்பு & எதிர்ப்பு எதுவும் சொன்னதில்ல.. (இதெல்லாம் ஒரு விஷயமாடா அப்படின்னு தோணும்..ஆனா நான் அப்போ அப்படி தான் இருந்தேன்)..அப்போ நான் வேல செஞ்ச இடங்களும் அப்படி தான்..எல்லாரும் என் கண்ணுக்கு குடும்ப பொண்ணுங்க மாதிரியே தெரிஞ்சாங்க..ஜீன்ஸ் போட்ட பொண்ண பாக்குறது..இளையதளபதி விஜய் - அன்பே சிவம் கமல் மாதிரி நடிக்கிறத பாக்குற மாதிரி...அபூர்வம்...(இப்போ ரோட்லேயே தம்மு , தண்ணி அடிக்கிற பொண்ணுங்கள இங்க பாத்து சலிச்சு போச்சு..) எனக்கு எங்க அப்பா அம்மாவை பிடிக்கல, மெட்ராஸ் பிடிக்கல,அப்படி, இப்படின்னு ஏகப்பட்ட பிடிக்கலை இருந்துது...(நல்ல வேல அப்போ என்ன பிடிக்லைன்னு சொல்லல)..திடிர்னு ஒரு நாள் பொண்ணுங்க வழக்கமா போட்ற ஒரு குண்டோடு என் கிட்ட வந்தாங்க, எனக்கு மாப்ள பாக்குறாங்கன்னு சொன்னங்க..நானும் விளையாட்டு தனமா நல்ல இருக்கானுங்களா அப்படின்னு கேட்டேன்.``மாப்ளைங்க எல்லாம் என்ன GRO  ல இருந்து கேட்டாக  , விப்ரோ ல இருந்து கேட்டாக ``.அப்படின்னு சொல்லிட்டு ``நீ எங்க வொர்க் பண்ற CAMS ஆ அது பேரென்ன `` அப்படின்னு கேட்டதும் அதுவரைக்கும் சுருண்டு கிடந்த சுயமரியாதை சுருக்குன்னு அலெர்ட் ஆச்சு...இங்க தான் ஆரம்பிச்சுது..

ஒரு வருஷம் டைம் கேட்டேன், அவங்க வீட்ல கஷ்டம்னாங்க, திடுதிப்புன்னு ஜாதி வேற வந்துருச்சு ( 4 வருஷமா வராதது திடிர்னு எப்படி வந்துதுன்னு இன்னும் யோசிக்கிறேன்)...வேற மாதிரி எதாவது செய்யலாம்னு கூட நான் தின்க் பண்ணேன்..பெத்தவங்களுக்காக இல்லாட்டியும் குறைஞ்ச பட்சம் எனக்கப்புறம் இருக்குற தங்கச்சிக்காக இத செய்ய வேண்டாம்னு முடிவு பண்ணேன்..சண்டை அப்படீன்ற வார்த்தை என்னனே தெரியாத எங்களுக்கு, நாங்க போட்ட முதல் சண்டையே கடைசி சண்டையா மாறும்னு அவங்க நினைச்சாங்களா இல்லையான்னு தெரில, ஆனா நான் நினைக்கல..``நீ மட்டும் தான் பொண்ணா..உன்ன மாதிரியே வெள்ளையா ஒரு பொண்ண எங்கம்மாவ பாக்க சொன்னா முடிஞ்சுரும்..ரொம்ப ஓவரா  பண்ற நீ``அப்படின்னு சொல்லிட்டு வழக்கமா போய் நிக்குற மளிகை கடைல போய் நின்னுட்டேன்..அடுத்த நாள் அங்கேயே நின்னுட்டு சைட் அடிச்சிட்டு இருக்கும்போது..வந்தாங்க..``நேத்து அவ்ளோ பேசினியே..கொஞ்சம் கூட பீல் பண்ணாம அங்க நின்னு சிரிச்சு பேசிட்டு இருக்க..``...``நானா எதுவும் பேசல நீங்க கேட்டதுக்கு நான் பதில் தான் சொன்னேன்`` அப்படின்னு சொன்னதும் வீட்டுக்கு போய்ட்டாங்க..அது தான் கடைசி....இந்த முகத்த தான் முதல் முதல்ல போட்டோ புடிக்கணும்னு வாங்கின சோனி போன் ஒன்னு வாங்கினேன் கடைசி வரைக்கும் ஒரு போட்டோ கூட எடுக்கல...(காமெடி என்னன்னா அந்த போனோட கேமரா 1 .3 MP அதுல படம் புடிச்சா இந்த Voter  ID ல இருக்கும் பாதீங்களா நம்ம போட்டோ, அது மாதிரியே இருக்கும்)..அவங்க வாங்கினப்பவும் என்ன படம் புடிக்க அனுமதிக்கல..( பின்ன நைட் 8  மணிக்கு எடுத்தா எப்படி இருக்கும், எதாவது ஒரு பக்கம் வெளிச்சமா இருக்கணும், 2 பக்கமும் இருட்ட இருந்தா எப்படி..).. ஒரு 10 நாளா கால் பன்னால, மீட் பண்ண ட்ரை பண்ணாலும் நடக்கல..ரொம்ப வெக்ஸ் ஆகி அப்படியே ஒரு வாக் போகலாம்னு நடந்தேன்..(ஆபீஸ் லீவ் போட்டுட்டு தான்)..அப்போ அந்த CAMS  விட்டு வந்து Sify ல சேர்ந்தாச்சு...அப்போ வாத்தியாரோட `அடிமை பெண்` போஸ்டர் பாத்தேன்..நம்ம கவலைய போக்குற ஒரே மருந்து வாத்தியார் கிட்ட தான் இருக்குன்னு போய் டிக்கெட் வாங்கிட்டு உள்ள உக்காந்தேன்..படம் ஆரம்பிச்சுது, பாத்தா பிரகாஷ் ராஜும், ப்ரித்விராஜும்  கீபோர்ட் வாசிச்சிட்டு இருந்தாங்க..``யார்ரா நீங்க வாத்தியார பாக்கலாம்னு வந்தா நீங்க என்ன டா பண்றீங்க இங்க`` அப்படின்னு யோசிச்சேன்,ஒரு வேலை ` அடிமை பெண்` படத்த ரீமேக் பண்ணிட்டாங்களோ..அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கும் போது அது `மொழி` அப்படின்னு புரிஞ்சுது..கால் வந்துது...கட் பண்ணிட்டு மெசேஜ் மட்டும் பண்ணேன்..`I  am  in theatre , watching  Mozhi ` ரிப்ளை..`ok ` இது தான் நாங்க காதலர்களா கடைசியா பேசிக்கிட்டது..

ஒரு நாலஞ்சு மாசம் கழிச்சு...ஒரு சனிகிழமை வீட்ல மல்லாக்க படுத்து விட்டத்த பாத்துட்டு இருந்தேன்..அப்போ கால் வந்துது..மூஞ்சில பிரகாசமா  `பல்பு`  எரிய..எடுத்து அட்டென்ட் பண்ணேன்.. `நான் தான்`அப்படின்னாங்க  `சொல்லுங்க தெரியுது` அப்படின்னு சொன்னேன்..`வீட்லையா` `ஆமா`.....`அப்போ கொஞ்சம் வெளில வாங்க` எழுந்து அரக்க பறக்க ஓடினேன்...(கொஞ்சம் சந்தோஷமா தான்)இத பாத்த என் மம்மி டெர்ரர் ஆயிட்டாங்க..போய் பாத்தா நம்மாளு தெரு முனைல நின்னுட்டு இருந்தாங்க..சந்தோஷமா, ஆனா அத காட்டிக்காம கிட்டக்க போனேன்..

``இந்தாங்க அவசியம் வரணும் ``அப்படின்னு கல்யாண பத்திரிகைய நீட்டினாங்க,...கிழிச்சு அப்படியே மூஞ்சில எறியணும் போல இருந்துது. என்ன பண்ண `மனிதன் ஒரு சமூக மிருகம்` அப்படின்னு Aristotle சொல்லி இருக்காரு.அந்த சமுதாயத்துக்காக நம்ம மிருகம் மெஜாரிட்டி நேரம் தூங்குது..`` இந்த ஏரியவுலேயே உசரமான குழந்தைன்னு பிறந்தா அநேகமா அது உங்க குழந்தையா தான் டா இருக்கும்னு`` முன்னாடி சொன்ன மளிகை கடைகாரரு, என்னமோ அவருக்கு தான் இது நடந்த மாதிரி கண் கலங்க ஆரம்பிச்சுட்டாரு..பத்தரிகைய வாங்கிட்டு அவர் கிட்ட போனேன்..``என்னடா நடக்குது  இங்க`` அப்படின்னு கேட்டாரு ..``விடுங்கண்ணே..அப்புறமா சொல்றேன்`` அப்படின்னு சொல்லிட்டு எந்த தெரு முனைல ஆரம்பிச்சுதோ அதே தெரு முனைல கத முடிஞ்சுது..ப்ராகாசமான `பல்பு` மாதிரி போன நான்..ப்யூஸ் போன மாதிரி `பல்பு` வாங்கிட்டு திருப்பியும் என் வீட்ட பாத்து எந்த சுவரையும் எகிறி குதிக்காம அமைதியா நடந்து வந்தேன்.. போலியோ ட்ராப்ஸ் மாதிரி இடது பக்கமும், வலது பக்கமும் சொட்டு சொட்டா தண்ணி வந்துது..இமேஜ் ஸ்பாயில் ஆயுடுமேன்னு வீட்டுக்கு வெளிலேயே கொஞ்ச நேரம் நின்னுட்டு உள்ள போனப்ப அம்மா ரெடியா இருந்தாங்க..கேள்வி கேக்க..``என்ன டா ஆச்சு..எதுக்கு அப்படி திபு திபுன்னு ஓடின` இந்த பக்கத்துல இருந்து பதில் இல்ல..``என்ன டா கேட்டுட்டு இருக்கேன்,மரம் மாதிரி நின்னுட்டு இருக்க``அப்படின்னு அவங்க முடிக்கிறதுக்கு முன்னாடி..பத்திரிகைய நீட்டினேன்..ஒரு 2  நிமிஷம் அமைதியா இருந்தாங்க அப்புறம் ..``சரி விடு போய் வேலைய பாரு......ஏன் வீட்டுக்கு வந்து கூட கொடுக்க முடியாதம்மா அந்த மகாராணியால `` அப்படின்னாங்க.முடிஞ்சு போச்சு வீட்ல கொடுத்தா என்ன ரோட்ல கொடுத்தா என்ன அப்படின்னு சொல்லி அதோட அந்த கதைய முடிச்சாச்சு..அடிச்சு, அழுது, கத்தி,கதறி..இப்படி பல வழில எனக்கு சொல்லி சொல்லி பாத்தாரு எங்கப்பா, அப்போவெல்லாம் கத்துக்காம ஒரே ஒரு கல்யாண பத்திரிக்கை எனக்கு  வாழ்க்கை, பணம் அப்படின்னா என்னனு கத்து கொடுத்துது..

கொஞ்ச நாள் எல்லா விஷயமும் கொஞ்சம் மப்பா தான் தெரிஞ்சுது.. அதுக்கப்புறம் நமக்குள்ள தூங்கிட்டு இருந்த `பிரேம்ஜி அமரன்` மறுபடியும் முழிச்சிகிட்டான்....வழக்கம் போல நமக்கு ரொமான்ஸ் ரூட் வொர்க் அவுட் ஆகல நமக்கு வர காமெடி ரூட்டையே இனிமே பாலோ  பண்ணுவோம்னு...அப்படீன்னு அந்த பக்கமே நாங்க போறதில்ல...(எப்படியும் நமக்கு எதாவது 10th  அட்டெம்ப்ட் அடிச்சச்து  +2 தேறாதது அப்படின்னு ஏதும் சிக்காமலா போய்டும்....)

ஒரு புக்ல நடிகர் விக்ரம் ஒவ்வொவொரு வித்தியாசாமான கேரக்டருக்கும்   கண்ணாடி முன்னாடி நின்னு வித விதமா நடந்து எப்படி வித்தியாச படுத்தலாம்னு பாப்பாராம்..ஓஹோ இப்படி ஒன்னு இருக்கான்னு அப்படின்னு அந்த வழிய நானும் பாலோ பண்ணி நடந்து பாப்பேன்.(டீசெண்டா நடக்குராரமா) .அதெல்லாம் இப்போ ஒரு MNC ல வொர்க் பண்ணுறதுக்கு யூஸ் ஆகுது.., சரி அவங்க பக்கம் பரதநாட்டியம் இருக்கே நாமளும் எதாவது பண்ணனும்னு சொல்லி கீபோர்ட் கத்துக்க ஆரம்பிச்சேன் ( அவங்களோட பொறந்த நாளுக்கு ஆரம்பிச்சேன்,`பல்புக்கு`அப்புறம் கொஞ்ச நாள் நிறுத்திட்டேன்)..காலைல பாக்குறதுக்கு ஒரு சாக்கா இருக்கணும்னு ஆரபிச்ச பழக்கம் ஜிம்.இப்படி அவங்களுக்காக ஆரம்பிச்ச அத்தனையும், இப்போ எனக்கு அது இல்லாத அளவுக்கு ஒன்னும் நடக்காதுன்ற அளவுக்கு அன்றாட வாழ்க்கையோட கலந்துருச்சு..காலைல எழுந்த உடனே ஜிம், ஒரு `Band ` ஆரம்பிக்கிற அளவுக்கு ஆர்வத்தோட நான் இப்போ கிடார் & கீபோர்ட் கத்துகிட்டேன், வாசிப்பேன்..(என்ன பிரயோஜனம்)...அந்த வகைல அவங்களுக்கு நன்றி..

கடைசியா ஒரு காமெடி: என் தங்கச்சி கல்யாண கிட்டத்துல எங்கப்பா என் கிட்ட வந்தாரு..``அந்த பொண்ணு வருதா``நான்``எந்த பொண்ணு``...திருப்பியும் அப்பா..``அதான் டா..அந்த....`` ``என்ன வேணும் உங்களுக்கு என்னாச்சு...``அப்படின்னு நான் லைட்டா ஆக்டிங்  விட்டேன்..டெர்ரர் ஆயிட்டாரு...அதுக்கப்புறம் அம்மா அத விளக்கி கூறிட்டாங்க...அட பாவி இத்தன நாலா நான் அவங்க கூட சுத்திட்டு தான் இருக்கேன்னு நினைச்சிட்டு இருந்தியா``சரி போகட்டும் மன்னிச்சு விட்ரலாம்...

விட்ட எடத்துல இருந்தே அடுத்த டாபிக்க ஆரம்பிக்கலாம்....அப்பா......

1 comment:

  1. Romba Naalaiku appuram...Tamizh padichen..
    Kadhe,...Sooper...
    Namba aalau...Pala peru....Hyderabad la irrukaanga...Neenga yen..Oru Book Publish panna koodadhu????

    ReplyDelete

March 12, 2012

காதலில் சொதப்பியது எப்படி - 2

நெட்ல ஒரு ஜோக் பாத்தேன்..இந்த ப்ளாக்பெர்ரி & ஆப்பிள் பழங்களா இருக்குற வரைக்கும் மனுஷன் நிம்மதியா இருந்தான் அப்படின்னு, அது மாதிரி தான் எனக்கு அப்போ நோக்கியா 1100 ஒரு பெரிய மாடல், ஆனா இப்போ C7  வாங்கிட்டு சே என்ன டா இது `டச்` சரி இல்லையே...இப்படி சிம்பயான் போன் வாங்கிட்டோமே கொஞ்சம் வெயிட் பண்ணி Android  வாங்கி இருக்கலாம் டா.அப்படின்னு தோணுது......எங்கப்பா 10 ரூபா கொடுப்பாரு TVS பஸ் ஸ்டாப்ல இருந்து ஜாம் பஜார் மார்க்கெட் வரைக்கும் நடந்தே போய் அரியர் வெச்ச Organic Chemistry பாஸ் பண்ணனும்னு நியூ காலேஜ் ப்ரொபசர் கிட்ட கிளாசுக்கு போவேன்..(இன்னைக்கு தேதியில 10 ரூபா வெச்சுட்டு க்ரோம்பேட்ல இருந்து  பக்கத்துல இருக்குற பல்லாவரத்துக்கு கூட போக முடியாது..புரட்சி தலைவியின் புரட்சி.).. இப்போ `டேய் நேரம் போகல டா வா போய் City Diamond ல பிரியாணி சாப்ட்டு வருவோம்`, `வா ப்ளூ சீ போய் டீ சமோசா சாப்பிடுவோம்` அப்படின்னு அதுக்கெல்லாம் 10 , 15 கிலோ மீட்டர் பஸ்ல போய் டீ  கடைல மட்டும் 100 ரூபா செலவு செய்றேன்..ஆப்ஷனே இல்லாம கெடைச்சத வெச்சு குதூகலமா இருந்த காலமெல்லாம் இப்படி பொலம்பும்போது தான் அது எவ்ளோ நல்லா இருந்துதுன்னு நமக்கு புரியும்..அப்போ கெடைச்ச ஒருத்திக்காக பெத்தவங்க முதற் கொண்டு அத்தன பேரையும் மரியாதை இல்லாம பேசினாலும் ஒன்னையும் மனசுல வெச்சுக்காத நெறைய பேர் என் கூட இப்போவும் இருக்குறதால, ஒரிசாவா இல்ல தமிழ் நாடான்னு அப்படின்னு செலக்ட் பண்ற ஆப்ஷன் கெடைக்குற அளவுக்கு நமக்கு இப்போ வசதின்னாலும் , மனுஷனோட முக்கியத்துவம் தெரிஞ்சு,புரிஞ்சு நடந்துக்குறேன்...  சரி விஷயத்துக்கு போவோம்...

காலேஜ் முடிஞ்சு ஒரு ஒன்னரை வருஷம் சும்மா வெட்டியா சுத்திட்டு இருந்தேன்..அப்போ சினிமால அசிஸ்டன்ட் கேமராமேன் ஆக முயற்சி செஞ்சு எங்க ஏரியால ஒருத்தர புடிச்சு `பார்த்திபன் கனவு` டைரக்டர் கரு.பழனியப்பன் அவரோட ஆஸ்தான கேமராமேன் (இப்போ அவரு இல்ல) திவாகரன் கிட்ட சேர்ந்தேன் (ஒரு 20 நாளைக்கு தான்..படம்: சதுரங்கம்) என் கண்ணுக்கு அவங்க 2 பேரும் மணிரத்னம், P . C . ஸ்ரீராம் மாதிரி தெரிஞ்சாங்க..அப்போ பழனியப்பன் அவரோட மலையாள காதலி பத்தி பேசினத கேட்டு புல்லரிச்சு போய்...``ஓஹ் நீங்க மலையாளமா,நான் தெலுங்கு அப்படின்னு இம்ப்ரெஸ் ஆகி நான் எழுதின டைலாக் எல்லாத்தையும் இவங்க கிட்ட யூஸ் பண்ணனும்னு சொல்லி ப்ரிபேர் பண்ணி வெச்சுருந்த அத்தனையும் மறந்து..உளறி கொட்டினது தான் ஆட்டோக்கு முன்னாடி நின்னு அவங்க கிட்ட பேசினது..

சாயந்தரம் 7 . 30 மணி. வழக்கம் போல பஸ் ஸ்டாண்ட். இப்போ கொஞ்சம் டீசண்டா டிரஸ் பண்ணி இருந்தேன்...ரிசல்ட் வர போகுதுல்ல..அவங்க வந்தாங்க...ஒன்னும் பேசாம...ஒரு 5 நிமிஷம் கழிச்சு நானே ஆரம்பிச்சேன்..``அப்புறம்...ஆபீஸ் எப்படி போச்சு இன்னைக்கு``...அங்க இருந்து பதில்``எப்படி நல்லா போகும்..``ஆஹா போச்சா அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சிட்டே இருந்தேன்..திருப்பியும் அங்க இருந்து..``உங்களுக்கெல்லாம் நேரம் காலமே கிடையாதா..போற நேரத்துல டென்ஷன் பண்ணிட்ட..சுத்தமா வேல ஓடல..(`இல்லனா மட்டும் கிழிசிருவீங்களா` அப்படின்னு கேக்கலாம்னு நினைச்சேன்..விளைவுகள் பயங்கரமா இருக்கும்னு விட்டுடேன்) `சரி சொன்னியே..அதுக்கப்புறம் ஒரு போன் இல்ல ஒரு மெசேஜ்.எதுவும் பண்ணனும்னு தோணலியா உனக்கு`. செல் போன் அப்படீன்ற வார்த்தையே எனக்கு காஸ்ட்லியா காதுல விழுந்த காலம்,எங்கப்பாவோட டாட்டா இண்டிகாம், அப்புறம் பக்கத்து வீட்டு தியாகுவோட மொபைல் இது தான் என்னோட மொபைல் சோர்ஸ். ஒருத்தர் வேலைக்கு போயிட்டாரு , இன்னொருத்தன் காலேஜ் போய்ட்டான்.இப்போ மாதிரி ஆபீஸ் லேப்டாப் வெச்சுகிட்டு Facebook ல மூச்சு விட்றத எல்லாம் Status Update போடற அளவுக்கு நான் அப்போ இல்ல..``என்ன தான் பண்ணிட்டு இருந்த சொல்லு``அப்படின்னு கேட்டாங்க..``இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஹைலைட்ஸ் பாத்தேன், ரேஷன் கடைக்கு போனேன்.அப்புறம்...``...``அப்புறம் என்ன சுரேஷ் வீட்டுக்கு போனியா``....``ஆமா..``...``ஒரு ரோஸ் கொடுக்கணும்னு கூடவா உனக்கு தோணல``அப்படின்னு கேட்டவுடனே தான் அப்பாடா உறுதி ஆயுடுச்சு டா..அப்படின்னு நிம்மதி பெரு மூச்சு விட்டேன்..ஆனாலும் கொஞ்சம் நேரம்.வசை பாடுதல் தொடர்ந்தது..ஓகே ஆன சந்தோஷம் தல கால் புரியாம கொஞ்ச நாள் சுத்தினேன்.உடனடியா அவங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு வீட்ல ஜிம் சேர்ந்தேன் (நாங்க முன்னாடி குடி இருந்த வீடு) வெயிட் எதுவும் போடாம வெறும் இரும்பு ராட்லையே ஷோல்டர், பைசெப்ஸ் போடறது..(அப்போ என்னால வெயிட் தூக்க முடில), பதிலுக்கு அவங்க பங்குக்கு வீட்டுக்கு வெளில வந்து தலை வாருவது, பல் விளக்குவது,வெங்காயம் அறிவது, வெள்ளை பூண்டு உரிப்பது என வீட்டுக்குள் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் ரோடிலே செய்தார்..(கூட வந்த தியாகு கிட்ட பாரதிராஜா மாதிரி கைலையே frame  பிக்ஸ் பண்ணி ``அங்க பாரு டா, பொண்ணுங்க மட்டும் தான் டா நைட்  ட்ரெஸ்ல கூட செம அழகா இருப்பாங்க..``..``நீங்க ஜிம்முக்கு நானும் வரேன்னு சொல்லும்போதே டௌட் ஆனேன்னா நான்.``அப்படின்னு எனக்கு பஞ்ச் கொடுத்தான்..).``சரி நீ பரதநாட்டியம் டான்ஸ் ஆடுவல்ல எப்படி வணக்கம் வெப்பாங்க வெச்சு காமி`` நான் கேட்டதுக்கு அபிநயம் புடிச்சாங்க, அதுக்கு என்னமோ பத்மா சுப்ரமணியம் மாதிரி டான்சே ஆடிட்டாங்கன்னு நான் புகழ்ந்து தள்ளினேன்..(என் தங்கை கர்நாடக சங்கிதம் கத்துகிட்டு மூணு மணி நேரம் மூச்சு விடாம பாடுவா ஒரே ஒரு தரம் கூட நான் புகழ்ந்ததில்ல)அதுக்கப்புறம் அவங்களுக்கு பிடிச்ச விஜய் என் வாய்ல மாட்டிட்டு முழிச்சாரு, ஏன்னு கேள்வி கேட்ட அப்பா வில்லன் ஆனாரு,.....ஓகே ஆன மூணாவது நாளே அட்வைஸ் ஆரம்பிச்சுருச்சு..எப்போ அரியர் க்ளியர் பண்ண போற, இப்படியே சினிமா சினிமான்னு சுத்திட்டு இருக்க போறியா, ஏன் உன் பிரெண்ட்ஸ் எல்லாரும் அப்படி இருக்காங்க..(என்னமோ இவங்க பிரெண்ட்ஸ் அத்தன பேரும் த்ரிஷா, இலியானா ரேஞ்சுக்கு இருக்குற  மாதிரி.).சரி அரியர்க்கு படிக்க ஆரம்பிச்சாச்சு, `சினிமா வேணும்னா நான் வேணாம்னு முடிவு பண்ணுனு சொன்னாங்க`.சரி சும்மா இருந்த காலத்துல Medical  transcription படிச்சேன்.அத வெச்சு ஒரு 2 மாசம் 3  கம்பனில வேல பாத்தேன்..அப்புறம் ஒரு ஷேர் மார்க்கெட் கம்பெனி , அப்புறம் அப்பா மூலமா மெடிக்கல் ரெப், சொந்தகாரன் ஒருத்தன் மூலமா Nittany Desicions  இப்படின்னு மரத்துக்கு மரம் அவங்களுக்காக் தாண்டி...கடைசியா CAMS  ல செட்டில் ஆனேன்..ரொம்ப சந்தோஷமா போச்சு ஓகே இனிமே நாம உருபட்டுடுவோம் அப்படின்னு `நம்பி` சுத்திட்டு இருந்தேன்..Day Shift ல வேலைய முடிச்சிட்டு போய் ஸ்டேஷன்ல நிக்கிறதும், நைட் ஷிப்ட்ல இருந்து வரும்போது தகதகன்னு வர அவங்க முன்னாடி தூங்கின முகத்தோட..முன்னாடி போய் நிக்குரதும்னு போயிட்டு இருந்துது வாழ்க்க..

இதுக்கு நடுவுல அவங்க வீட்ட காலி பண்ணனும்னு முடிவு பண்ணாங்க..இனிமே சுவர் எகிறி குதிக்க வேண்டிய அவசியம் இல்ல அப்படின்னு நினைச்சிட்டு `நம்ம தெருல ஒரு வீடு காலியா இருக்கு உங்கப்பாவ வந்து பாக்க சொல்லு..முடிச்சிரலாம்..அப்படின்னு தேனொழுக பேசி எங்க தெருவுக்கு கூட்டிட்டு வந்தாச்சு..இத அவங்கப்பா எங்க நைனா கிட்ட சொல்ல அவரு க்ரோம்பேட் டு சென்ட்ரல் வரைக்கும் ரயில்ல எல்லாரும் பாக்குற மாதிரி லெக்சர் கொடுக்க... இந்த நண்பன் விஜய் சொல்லுவாரே `என் வாழ்க்கைல மறக்க முடியாத 20 நிமிஷம்` அது மாதிரி என் வாழ்கைலேயே மறக்க முடியாத 45 நிமிஷ அதான்...

என்ன தான் டா ஆச்சு சொல்லி தொலையேன் டா..கேக்குது..நீங்க கேக்குறது கேக்குது...ஸ்கூல்,காலேஜ், பழக்கம்,சுற்று வட்டாரம் இப்படி என்ன சுத்தி எப்பவும் பசங்க மட்டும் தான் இருந்தாங்க,இப்போவும் அப்படி தான், முதல்ல இருந்து இப்போ வரைக்கும் நான் ரொம்ப க்ளோசா இருந்தது 2  பொண்ணுங்க கிட்ட மட்டும் தான்,ஒன்னும் என் மம்மி, இன்னொன்னு பாச மலர் தங்கை..இவங்க 2 பேரும்..தலைல முடி நெறைய இருக்குறவங்க, ரொம்ப மேக் அப் அதெல்லாம் பண்ணாதவங்க, அப்பா ஆபீஸ் ல இருந்து வரும்போது எடுத்துட்டு வர  லக்கேஜ வாங்கிட்டு வந்து உள்ள வெக்குரவங்க..இப்படி இவங்கள பாத்துட்டு பொண்ணுங்கன்னா இப்படி தான் இருப்பாங்க போலருக்கு..அப்படின்னு கற்பனை பண்ணது தப்பு..நம்மாளு நல்லா லெங்க்த் இருந்த தலை முடிய கட் பண்ணிட்டா.., கைல இருக்குற 10 விரலுக்கும் 10 விதமான நைல் பாலிஷ்,அப்படி இப்படின்னு நெறைய சேஞ்சஸ்..அவங்கள தப்பு சொல்லல..இது எதுக்கும் நான் மறுப்பு & எதிர்ப்பு எதுவும் சொன்னதில்ல.. (இதெல்லாம் ஒரு விஷயமாடா அப்படின்னு தோணும்..ஆனா நான் அப்போ அப்படி தான் இருந்தேன்)..அப்போ நான் வேல செஞ்ச இடங்களும் அப்படி தான்..எல்லாரும் என் கண்ணுக்கு குடும்ப பொண்ணுங்க மாதிரியே தெரிஞ்சாங்க..ஜீன்ஸ் போட்ட பொண்ண பாக்குறது..இளையதளபதி விஜய் - அன்பே சிவம் கமல் மாதிரி நடிக்கிறத பாக்குற மாதிரி...அபூர்வம்...(இப்போ ரோட்லேயே தம்மு , தண்ணி அடிக்கிற பொண்ணுங்கள இங்க பாத்து சலிச்சு போச்சு..) எனக்கு எங்க அப்பா அம்மாவை பிடிக்கல, மெட்ராஸ் பிடிக்கல,அப்படி, இப்படின்னு ஏகப்பட்ட பிடிக்கலை இருந்துது...(நல்ல வேல அப்போ என்ன பிடிக்லைன்னு சொல்லல)..திடிர்னு ஒரு நாள் பொண்ணுங்க வழக்கமா போட்ற ஒரு குண்டோடு என் கிட்ட வந்தாங்க, எனக்கு மாப்ள பாக்குறாங்கன்னு சொன்னங்க..நானும் விளையாட்டு தனமா நல்ல இருக்கானுங்களா அப்படின்னு கேட்டேன்.``மாப்ளைங்க எல்லாம் என்ன GRO  ல இருந்து கேட்டாக  , விப்ரோ ல இருந்து கேட்டாக ``.அப்படின்னு சொல்லிட்டு ``நீ எங்க வொர்க் பண்ற CAMS ஆ அது பேரென்ன `` அப்படின்னு கேட்டதும் அதுவரைக்கும் சுருண்டு கிடந்த சுயமரியாதை சுருக்குன்னு அலெர்ட் ஆச்சு...இங்க தான் ஆரம்பிச்சுது..

ஒரு வருஷம் டைம் கேட்டேன், அவங்க வீட்ல கஷ்டம்னாங்க, திடுதிப்புன்னு ஜாதி வேற வந்துருச்சு ( 4 வருஷமா வராதது திடிர்னு எப்படி வந்துதுன்னு இன்னும் யோசிக்கிறேன்)...வேற மாதிரி எதாவது செய்யலாம்னு கூட நான் தின்க் பண்ணேன்..பெத்தவங்களுக்காக இல்லாட்டியும் குறைஞ்ச பட்சம் எனக்கப்புறம் இருக்குற தங்கச்சிக்காக இத செய்ய வேண்டாம்னு முடிவு பண்ணேன்..சண்டை அப்படீன்ற வார்த்தை என்னனே தெரியாத எங்களுக்கு, நாங்க போட்ட முதல் சண்டையே கடைசி சண்டையா மாறும்னு அவங்க நினைச்சாங்களா இல்லையான்னு தெரில, ஆனா நான் நினைக்கல..``நீ மட்டும் தான் பொண்ணா..உன்ன மாதிரியே வெள்ளையா ஒரு பொண்ண எங்கம்மாவ பாக்க சொன்னா முடிஞ்சுரும்..ரொம்ப ஓவரா  பண்ற நீ``அப்படின்னு சொல்லிட்டு வழக்கமா போய் நிக்குற மளிகை கடைல போய் நின்னுட்டேன்..அடுத்த நாள் அங்கேயே நின்னுட்டு சைட் அடிச்சிட்டு இருக்கும்போது..வந்தாங்க..``நேத்து அவ்ளோ பேசினியே..கொஞ்சம் கூட பீல் பண்ணாம அங்க நின்னு சிரிச்சு பேசிட்டு இருக்க..``...``நானா எதுவும் பேசல நீங்க கேட்டதுக்கு நான் பதில் தான் சொன்னேன்`` அப்படின்னு சொன்னதும் வீட்டுக்கு போய்ட்டாங்க..அது தான் கடைசி....இந்த முகத்த தான் முதல் முதல்ல போட்டோ புடிக்கணும்னு வாங்கின சோனி போன் ஒன்னு வாங்கினேன் கடைசி வரைக்கும் ஒரு போட்டோ கூட எடுக்கல...(காமெடி என்னன்னா அந்த போனோட கேமரா 1 .3 MP அதுல படம் புடிச்சா இந்த Voter  ID ல இருக்கும் பாதீங்களா நம்ம போட்டோ, அது மாதிரியே இருக்கும்)..அவங்க வாங்கினப்பவும் என்ன படம் புடிக்க அனுமதிக்கல..( பின்ன நைட் 8  மணிக்கு எடுத்தா எப்படி இருக்கும், எதாவது ஒரு பக்கம் வெளிச்சமா இருக்கணும், 2 பக்கமும் இருட்ட இருந்தா எப்படி..).. ஒரு 10 நாளா கால் பன்னால, மீட் பண்ண ட்ரை பண்ணாலும் நடக்கல..ரொம்ப வெக்ஸ் ஆகி அப்படியே ஒரு வாக் போகலாம்னு நடந்தேன்..(ஆபீஸ் லீவ் போட்டுட்டு தான்)..அப்போ அந்த CAMS  விட்டு வந்து Sify ல சேர்ந்தாச்சு...அப்போ வாத்தியாரோட `அடிமை பெண்` போஸ்டர் பாத்தேன்..நம்ம கவலைய போக்குற ஒரே மருந்து வாத்தியார் கிட்ட தான் இருக்குன்னு போய் டிக்கெட் வாங்கிட்டு உள்ள உக்காந்தேன்..படம் ஆரம்பிச்சுது, பாத்தா பிரகாஷ் ராஜும், ப்ரித்விராஜும்  கீபோர்ட் வாசிச்சிட்டு இருந்தாங்க..``யார்ரா நீங்க வாத்தியார பாக்கலாம்னு வந்தா நீங்க என்ன டா பண்றீங்க இங்க`` அப்படின்னு யோசிச்சேன்,ஒரு வேலை ` அடிமை பெண்` படத்த ரீமேக் பண்ணிட்டாங்களோ..அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கும் போது அது `மொழி` அப்படின்னு புரிஞ்சுது..கால் வந்துது...கட் பண்ணிட்டு மெசேஜ் மட்டும் பண்ணேன்..`I  am  in theatre , watching  Mozhi ` ரிப்ளை..`ok ` இது தான் நாங்க காதலர்களா கடைசியா பேசிக்கிட்டது..

ஒரு நாலஞ்சு மாசம் கழிச்சு...ஒரு சனிகிழமை வீட்ல மல்லாக்க படுத்து விட்டத்த பாத்துட்டு இருந்தேன்..அப்போ கால் வந்துது..மூஞ்சில பிரகாசமா  `பல்பு`  எரிய..எடுத்து அட்டென்ட் பண்ணேன்.. `நான் தான்`அப்படின்னாங்க  `சொல்லுங்க தெரியுது` அப்படின்னு சொன்னேன்..`வீட்லையா` `ஆமா`.....`அப்போ கொஞ்சம் வெளில வாங்க` எழுந்து அரக்க பறக்க ஓடினேன்...(கொஞ்சம் சந்தோஷமா தான்)இத பாத்த என் மம்மி டெர்ரர் ஆயிட்டாங்க..போய் பாத்தா நம்மாளு தெரு முனைல நின்னுட்டு இருந்தாங்க..சந்தோஷமா, ஆனா அத காட்டிக்காம கிட்டக்க போனேன்..

``இந்தாங்க அவசியம் வரணும் ``அப்படின்னு கல்யாண பத்திரிகைய நீட்டினாங்க,...கிழிச்சு அப்படியே மூஞ்சில எறியணும் போல இருந்துது. என்ன பண்ண `மனிதன் ஒரு சமூக மிருகம்` அப்படின்னு Aristotle சொல்லி இருக்காரு.அந்த சமுதாயத்துக்காக நம்ம மிருகம் மெஜாரிட்டி நேரம் தூங்குது..`` இந்த ஏரியவுலேயே உசரமான குழந்தைன்னு பிறந்தா அநேகமா அது உங்க குழந்தையா தான் டா இருக்கும்னு`` முன்னாடி சொன்ன மளிகை கடைகாரரு, என்னமோ அவருக்கு தான் இது நடந்த மாதிரி கண் கலங்க ஆரம்பிச்சுட்டாரு..பத்தரிகைய வாங்கிட்டு அவர் கிட்ட போனேன்..``என்னடா நடக்குது  இங்க`` அப்படின்னு கேட்டாரு ..``விடுங்கண்ணே..அப்புறமா சொல்றேன்`` அப்படின்னு சொல்லிட்டு எந்த தெரு முனைல ஆரம்பிச்சுதோ அதே தெரு முனைல கத முடிஞ்சுது..ப்ராகாசமான `பல்பு` மாதிரி போன நான்..ப்யூஸ் போன மாதிரி `பல்பு` வாங்கிட்டு திருப்பியும் என் வீட்ட பாத்து எந்த சுவரையும் எகிறி குதிக்காம அமைதியா நடந்து வந்தேன்.. போலியோ ட்ராப்ஸ் மாதிரி இடது பக்கமும், வலது பக்கமும் சொட்டு சொட்டா தண்ணி வந்துது..இமேஜ் ஸ்பாயில் ஆயுடுமேன்னு வீட்டுக்கு வெளிலேயே கொஞ்ச நேரம் நின்னுட்டு உள்ள போனப்ப அம்மா ரெடியா இருந்தாங்க..கேள்வி கேக்க..``என்ன டா ஆச்சு..எதுக்கு அப்படி திபு திபுன்னு ஓடின` இந்த பக்கத்துல இருந்து பதில் இல்ல..``என்ன டா கேட்டுட்டு இருக்கேன்,மரம் மாதிரி நின்னுட்டு இருக்க``அப்படின்னு அவங்க முடிக்கிறதுக்கு முன்னாடி..பத்திரிகைய நீட்டினேன்..ஒரு 2  நிமிஷம் அமைதியா இருந்தாங்க அப்புறம் ..``சரி விடு போய் வேலைய பாரு......ஏன் வீட்டுக்கு வந்து கூட கொடுக்க முடியாதம்மா அந்த மகாராணியால `` அப்படின்னாங்க.முடிஞ்சு போச்சு வீட்ல கொடுத்தா என்ன ரோட்ல கொடுத்தா என்ன அப்படின்னு சொல்லி அதோட அந்த கதைய முடிச்சாச்சு..அடிச்சு, அழுது, கத்தி,கதறி..இப்படி பல வழில எனக்கு சொல்லி சொல்லி பாத்தாரு எங்கப்பா, அப்போவெல்லாம் கத்துக்காம ஒரே ஒரு கல்யாண பத்திரிக்கை எனக்கு  வாழ்க்கை, பணம் அப்படின்னா என்னனு கத்து கொடுத்துது..

கொஞ்ச நாள் எல்லா விஷயமும் கொஞ்சம் மப்பா தான் தெரிஞ்சுது.. அதுக்கப்புறம் நமக்குள்ள தூங்கிட்டு இருந்த `பிரேம்ஜி அமரன்` மறுபடியும் முழிச்சிகிட்டான்....வழக்கம் போல நமக்கு ரொமான்ஸ் ரூட் வொர்க் அவுட் ஆகல நமக்கு வர காமெடி ரூட்டையே இனிமே பாலோ  பண்ணுவோம்னு...அப்படீன்னு அந்த பக்கமே நாங்க போறதில்ல...(எப்படியும் நமக்கு எதாவது 10th  அட்டெம்ப்ட் அடிச்சச்து  +2 தேறாதது அப்படின்னு ஏதும் சிக்காமலா போய்டும்....)

ஒரு புக்ல நடிகர் விக்ரம் ஒவ்வொவொரு வித்தியாசாமான கேரக்டருக்கும்   கண்ணாடி முன்னாடி நின்னு வித விதமா நடந்து எப்படி வித்தியாச படுத்தலாம்னு பாப்பாராம்..ஓஹோ இப்படி ஒன்னு இருக்கான்னு அப்படின்னு அந்த வழிய நானும் பாலோ பண்ணி நடந்து பாப்பேன்.(டீசெண்டா நடக்குராரமா) .அதெல்லாம் இப்போ ஒரு MNC ல வொர்க் பண்ணுறதுக்கு யூஸ் ஆகுது.., சரி அவங்க பக்கம் பரதநாட்டியம் இருக்கே நாமளும் எதாவது பண்ணனும்னு சொல்லி கீபோர்ட் கத்துக்க ஆரம்பிச்சேன் ( அவங்களோட பொறந்த நாளுக்கு ஆரம்பிச்சேன்,`பல்புக்கு`அப்புறம் கொஞ்ச நாள் நிறுத்திட்டேன்)..காலைல பாக்குறதுக்கு ஒரு சாக்கா இருக்கணும்னு ஆரபிச்ச பழக்கம் ஜிம்.இப்படி அவங்களுக்காக ஆரம்பிச்ச அத்தனையும், இப்போ எனக்கு அது இல்லாத அளவுக்கு ஒன்னும் நடக்காதுன்ற அளவுக்கு அன்றாட வாழ்க்கையோட கலந்துருச்சு..காலைல எழுந்த உடனே ஜிம், ஒரு `Band ` ஆரம்பிக்கிற அளவுக்கு ஆர்வத்தோட நான் இப்போ கிடார் & கீபோர்ட் கத்துகிட்டேன், வாசிப்பேன்..(என்ன பிரயோஜனம்)...அந்த வகைல அவங்களுக்கு நன்றி..

கடைசியா ஒரு காமெடி: என் தங்கச்சி கல்யாண கிட்டத்துல எங்கப்பா என் கிட்ட வந்தாரு..``அந்த பொண்ணு வருதா``நான்``எந்த பொண்ணு``...திருப்பியும் அப்பா..``அதான் டா..அந்த....`` ``என்ன வேணும் உங்களுக்கு என்னாச்சு...``அப்படின்னு நான் லைட்டா ஆக்டிங்  விட்டேன்..டெர்ரர் ஆயிட்டாரு...அதுக்கப்புறம் அம்மா அத விளக்கி கூறிட்டாங்க...அட பாவி இத்தன நாலா நான் அவங்க கூட சுத்திட்டு தான் இருக்கேன்னு நினைச்சிட்டு இருந்தியா``சரி போகட்டும் மன்னிச்சு விட்ரலாம்...

விட்ட எடத்துல இருந்தே அடுத்த டாபிக்க ஆரம்பிக்கலாம்....அப்பா......

1 comment:

  1. Romba Naalaiku appuram...Tamizh padichen..
    Kadhe,...Sooper...
    Namba aalau...Pala peru....Hyderabad la irrukaanga...Neenga yen..Oru Book Publish panna koodadhu????

    ReplyDelete