June 19, 2012

இந்த கட்டுரையின் பெயர்.....

மேற்கொண்டு படிக்கிறதுக்கு முன்னாடி..எல்லாரும் அவங்கவங்க கண்ண ஒரு 20 செகண்ட் மூடுங்க..இந்த உலகத்துலேயே உங்களுக்கு பிடிக்காத ஒருத்தர நினைச்சுக்கோங்க...எவ்வளவு முடியுமோ..ஒரு டாப் 5 கெட்ட வார்தையால அவன திட்டுங்க..இதுல முதல் வார்த்த என்னவா இருக்கும்னு கண்டிப்பா என்னால சொல்ல முடியும்...உங்களுக்கு பிடிக்காதவன் ஒருத்தன் தான்..ஆனா நீங்க திட்டின அத்தன கெட்ட வார்த்தையும், அவனோட அம்மா,தங்கை, அக்கா, மனைவி இப்படி அவன் உறவு முறைல இருக்குற எதாவது ஒரு பொண்ண இழுத்து, அவள அசிங்க படுத்துற மாதிரியே இருக்குமே..

இந்த ஆணாதிக்கம், பெண்ணடிமை இது மாதிரி என் அறிவுக்கு எட்டாத விஷயத்த நான் பேச போறதில்ல..நம்ம சௌகர்யத்துக்கு பொண்ணுங்க பேர நாம எப்படி எல்லாம் யூஸ் பண்றோம் அப்படின்னு சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன்.நம்ம பாட்னர் ``என்ன டா உனக்கு பாக்க ஆரம்பிச்சுட்டாங்களா `` ``வேலைக்கு அனுப்புவியா டா``அப்படின்னு அவன் கேட்ட கேள்விக்கும், அதுக்கான என் பதில்ல இருந்து இது தொடங்குச்சு..

காலம் முழுசா நாம அம்மா, தங்கை, காதலி, மனைவி இப்படி பல ரூபத்துல ஒரு பொண்ண சார்ந்து தான் வாழுறோம், ( ஒரு சுடு தண்ணி வெக்க கூட நமக்கு தெரியாது), ஆனா ஒரு காதல் தோல்விக்கு அப்புறமா இந்த பொண்ணுங்கள நாம பேசுற பேச்சு இருக்கே...எப்படி ஆரம்பிக்குது இது..எவன் ஒருத்தன் காதல்ல விழுறானோ மொதல்ல போய் அவன் பிரெண்டு கிட்ட சொல்லுவான். முக்கால்வாசி நண்பர்களின் பதில் `அவ வேணாம் மச்சான் ``ஐட்டம்`` டா அவ` அப்படின்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லுவானுங்க..இங்க ஆரம்பிக்குது..நாளைக்கு அந்த பொண்ணையே நம்மாளு லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு..``கை வெச்சுட்டியா டா..சீக்கிரம் டா..இல்லனா ஏமாத்திருவாளுங்க டா..``..லவ் பண்ண பொண்ணு வேற வழி இல்லாம வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டா  ..``நம்பர் வாங்கி வெச்சுக்க டா..பின்னாடி யூஸ் ஆகும் ``அப்படின்னு சொல்லி அவன் முன்னாடி சொன்ன வார்த்தைய நம்மள வெச்சு உண்மையாக்க பாப்பான்..இப்படி ஒவ்வொரு ஸ்டெப்லயும் நம்மள தப்பா வழி நடத்துறது..யாருன்னு நமக்கு நல்லா தெரியும்.ஆட்டோக்ராப் சேரன் மாதிரி பசங்க 4 லவ் பண்ணா  பிரச்சினையே இல்ல..ஆனா..அதே பொண்ணு ஒரு லவ் பண்ணிட்டு..வேற யாரையாவது கல்யணம் பண்ணிட்டா..முடிஞ்சுது கத...இதுக்கு நடுவுல..``வேணாம் மச்சான் வேணாம்.இந்த பொம்பள காதலு`` அப்படின்னு பாட்டு வரும்போது..ஒஹ்ஹ்ஹ்ஹ அப்படின்னு ஒரு கூட்டம் தன்னோட கேர்ள் பிரெண்ட் பேரோட ஒரு கெட்ட வார்த்தையும் சேர்த்து கத்தும்..

அன்புக்கு தெரசா, அறிவுக்கு கல்பனா சாவ்லா, தைரியத்துக்கு அதிக பட்சமா ஜான்சி ராணி இல்லனா குறைஞ்ச பட்சம் ஜெயலலிதா அம்மையார் அப்படின்னு கொஞ்சமா குடுக்குற உதாரணமும் நாம வெளில இருந்து தான் எடுக்குறோம்...மூணு பெண் குழந்தைங்க சின்னதா இருக்கும்போதே புருஷன இழந்து, நிறைய போராடி, அவங்கள கரை சேர்த்து இன்னைக்கு பல பேரோட ஜாதகத்த கைல வெச்சுகிட்டு யாருக்கெல்லாமோ உழைச்சிட்டு இருக்குற எங்க அத்த மாதிரியோ,தான் கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அப்பாவ யாரு பாத்துப்பான்னு சொல்லி கல்யாண வயச எப்பவோ தாண்டி இன்னமும் பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குற எங்க ஏரியா வித்யா டீச்சரையோ, என்ன காரணம்னே தெரியாம விட்டுட்டு போன புருஷன பத்தி ரொம்ப கவலை படாம எனக்கும் சேர்த்து எங்க ஏரியால பாதி பேருக்கு ஹிந்தி அறிவ ஊட்டி விட்ட மீரா மேடம் மாதிரியோ, அவ்ளோ ஏன் இப்போ காதல் திருமணம் பண்ணி 6 மாசத்துல அவங்க வீட்டு ஆளுங்களோட ஒரிஜினல் கலர் தெரிஞ்ச பின்னாடியும் அவனோட தான் வாழ்வேன்னு சொல்ற நண்பனின் தங்கட்சியயோ நாம என்னைக்கு கணக்குல எடுத்துகுரதில்ல, உதாரனாமாவும் சொல்றதில்ல..

இத எழுதும்போது கூட ஒருத்தன் கேட்டான், ``நீ என்ன நயன்தாரா ரசிகனான்னு``.அவனுக்கு, எனக்கும், எல்லாருக்கு சேர்த்து ஒன்னு சொல்றேன்..இந்த நயன்தார, ரஞ்சிதா பின்னாடி எல்லாம் பிரபு தேவா அப்படின்ற உத்தம புருஷனும், ராஜசேகர் என்கிற நித்யானந்தா அப்படின்ற ஒழுக்க சீலனும் இருக்கான்ற உண்மை நமக்கு புரியணும்.``ஏன் சார் கேமராவ பொண்ணுங்களுக்கு முன்னாடி, பின்னாடி இப்படி டைட் க்ளோஸ் அப் வெக்குரீங்கன்னு`` கேட்டா `` டிஸ்த்ரிபியுடர் கேக்குறாங்க சார்``..அப்படின்னு பொய் சொல்றத நேர்ல பார்த்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கு..   காதலுக்காக வீட்டு சுவர எகிறி குதிச்சு போய் கல்யாணம் பண்ணி இப்போ சந்தோஷமா இருக்குற  தேவயாணி கூட அந்த துறைல இருக்குறவங்க தான்..

``அண்ணா 2 நாள் ஊர  சுத்தி பாக்க பெங்களூர் வந்த என்னாலேயே இந்த சாப்பாட அட்ஜஸ்ட் பண்ண முடியலையே..நீங்க எப்படின்னா இத தாங்குறீங்க``அப்படீன்னு உண்மையான வருத்தத்தோட கேட்ட என் சித்தி பொண்ணும், ஒரு அண்ணனா கல்யாணம் அப்படின்ற அடிப்படை கடமைய மட்டும் செஞ்ச எனக்கு ,எல்லா பிறந்த நாளும் எனக்கு காலெண்டர்ல    இன்னொரு நாள் தான், எனக்காக கேக் வெட்டின முதல் ஜீவராசி என தங்கச்சி தான்,அப்பாவ தவிர புது உடுப்பு எடுத்து கொடுத்தும் அவ தான்,ஊற விட்டு போரேன்னு தெரிஞ்சதும் தேவையானது வாங்கினது முதற்கொண்டு பேக்  பண்ணி முடிச்சு கண் கலங்கி ஸ்டேஷன்ல டாடா காட்டினதும் அவ தான், இன்னும் கொஞ்ச மாசத்துல எனக்கு தாய்மாமன் அப்படின்ற அந்தஸ்த கொடுக்க போறா. ``டேய் இந்த பச்ச பாட்டில்ல ரசம் இருக்கு 2 நாள் வரும், அந்த ஸ்வீட் டப்பால குழம்பு இருக்கு பிரிட்ஜ் இல்லாமையே 3 நாள் வரும், அதுல சிக்கன் இருக்கு..இப்படின்னு ஊருக்கு போறப்ப எடுத்துட்டு போற பெரிய லக்கேஜ் மாதிரி சாபிடற வஸ்துவ மட்டும் கொடுக்குற அம்மாவை பத்தியே தனியா எழுதலாம்..

காதல் தோல்வியே வந்தாலும்..TR  மாதிரி நாகரீகமா சோகத்த  வெளிபடுத்துங்க, அவர் பையன் மாதிரி வெளிப்படுத்த வேண்டாம்....

ஒரு மணிக்கு ஒரு தரம் போன் பண்ணி ``சாப்டியாடா ``, வெளில போனா ``பத்திரமா போடா``..``குழந்தை என்ன பண்றா`` இப்படின்னு விசாரிக்கும், தன்  மனைவிக்காக என்னவெல்லாம் செய்வார் என்பதும்,ஒரு பெண் குழந்தைக்காக எந்த எல்லையை தொடவும், அந்த குழந்தைக்காக கீழிறங்கி வந்து ஒரு குழந்தையாகவே மாறும், ஒரு உன்னத ஆத்மாவிடம் இரண்டரை வருடம் பணி புரிந்த பெற்ற அறிவு, அருகில் அமர்ந்து அதை பார்த்து ரசிக்கவும் செய்த கண்களுக்கு..இனி தப்பான பார்வையை, செய்கையை, நினைப்பை பெண்களின் பக்கம் வீச கூடாது என பிரார்த்திக்கிறேன்..

தன்னை வருத்தி பிறருக்கு வெளிச்சம் தருவதற்கு உதாரணமாக இனி மெழுகுவர்த்தியை சொல்லாமல் ,ரத்தமும் சதையுமாக உள்ள..பெண்களை சொல்லுவோம்... 

June 19, 2012

இந்த கட்டுரையின் பெயர்.....

மேற்கொண்டு படிக்கிறதுக்கு முன்னாடி..எல்லாரும் அவங்கவங்க கண்ண ஒரு 20 செகண்ட் மூடுங்க..இந்த உலகத்துலேயே உங்களுக்கு பிடிக்காத ஒருத்தர நினைச்சுக்கோங்க...எவ்வளவு முடியுமோ..ஒரு டாப் 5 கெட்ட வார்தையால அவன திட்டுங்க..இதுல முதல் வார்த்த என்னவா இருக்கும்னு கண்டிப்பா என்னால சொல்ல முடியும்...உங்களுக்கு பிடிக்காதவன் ஒருத்தன் தான்..ஆனா நீங்க திட்டின அத்தன கெட்ட வார்த்தையும், அவனோட அம்மா,தங்கை, அக்கா, மனைவி இப்படி அவன் உறவு முறைல இருக்குற எதாவது ஒரு பொண்ண இழுத்து, அவள அசிங்க படுத்துற மாதிரியே இருக்குமே..

இந்த ஆணாதிக்கம், பெண்ணடிமை இது மாதிரி என் அறிவுக்கு எட்டாத விஷயத்த நான் பேச போறதில்ல..நம்ம சௌகர்யத்துக்கு பொண்ணுங்க பேர நாம எப்படி எல்லாம் யூஸ் பண்றோம் அப்படின்னு சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன்.நம்ம பாட்னர் ``என்ன டா உனக்கு பாக்க ஆரம்பிச்சுட்டாங்களா `` ``வேலைக்கு அனுப்புவியா டா``அப்படின்னு அவன் கேட்ட கேள்விக்கும், அதுக்கான என் பதில்ல இருந்து இது தொடங்குச்சு..

காலம் முழுசா நாம அம்மா, தங்கை, காதலி, மனைவி இப்படி பல ரூபத்துல ஒரு பொண்ண சார்ந்து தான் வாழுறோம், ( ஒரு சுடு தண்ணி வெக்க கூட நமக்கு தெரியாது), ஆனா ஒரு காதல் தோல்விக்கு அப்புறமா இந்த பொண்ணுங்கள நாம பேசுற பேச்சு இருக்கே...எப்படி ஆரம்பிக்குது இது..எவன் ஒருத்தன் காதல்ல விழுறானோ மொதல்ல போய் அவன் பிரெண்டு கிட்ட சொல்லுவான். முக்கால்வாசி நண்பர்களின் பதில் `அவ வேணாம் மச்சான் ``ஐட்டம்`` டா அவ` அப்படின்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லுவானுங்க..இங்க ஆரம்பிக்குது..நாளைக்கு அந்த பொண்ணையே நம்மாளு லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு..``கை வெச்சுட்டியா டா..சீக்கிரம் டா..இல்லனா ஏமாத்திருவாளுங்க டா..``..லவ் பண்ண பொண்ணு வேற வழி இல்லாம வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டா  ..``நம்பர் வாங்கி வெச்சுக்க டா..பின்னாடி யூஸ் ஆகும் ``அப்படின்னு சொல்லி அவன் முன்னாடி சொன்ன வார்த்தைய நம்மள வெச்சு உண்மையாக்க பாப்பான்..இப்படி ஒவ்வொரு ஸ்டெப்லயும் நம்மள தப்பா வழி நடத்துறது..யாருன்னு நமக்கு நல்லா தெரியும்.ஆட்டோக்ராப் சேரன் மாதிரி பசங்க 4 லவ் பண்ணா  பிரச்சினையே இல்ல..ஆனா..அதே பொண்ணு ஒரு லவ் பண்ணிட்டு..வேற யாரையாவது கல்யணம் பண்ணிட்டா..முடிஞ்சுது கத...இதுக்கு நடுவுல..``வேணாம் மச்சான் வேணாம்.இந்த பொம்பள காதலு`` அப்படின்னு பாட்டு வரும்போது..ஒஹ்ஹ்ஹ்ஹ அப்படின்னு ஒரு கூட்டம் தன்னோட கேர்ள் பிரெண்ட் பேரோட ஒரு கெட்ட வார்த்தையும் சேர்த்து கத்தும்..

அன்புக்கு தெரசா, அறிவுக்கு கல்பனா சாவ்லா, தைரியத்துக்கு அதிக பட்சமா ஜான்சி ராணி இல்லனா குறைஞ்ச பட்சம் ஜெயலலிதா அம்மையார் அப்படின்னு கொஞ்சமா குடுக்குற உதாரணமும் நாம வெளில இருந்து தான் எடுக்குறோம்...மூணு பெண் குழந்தைங்க சின்னதா இருக்கும்போதே புருஷன இழந்து, நிறைய போராடி, அவங்கள கரை சேர்த்து இன்னைக்கு பல பேரோட ஜாதகத்த கைல வெச்சுகிட்டு யாருக்கெல்லாமோ உழைச்சிட்டு இருக்குற எங்க அத்த மாதிரியோ,தான் கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அப்பாவ யாரு பாத்துப்பான்னு சொல்லி கல்யாண வயச எப்பவோ தாண்டி இன்னமும் பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குற எங்க ஏரியா வித்யா டீச்சரையோ, என்ன காரணம்னே தெரியாம விட்டுட்டு போன புருஷன பத்தி ரொம்ப கவலை படாம எனக்கும் சேர்த்து எங்க ஏரியால பாதி பேருக்கு ஹிந்தி அறிவ ஊட்டி விட்ட மீரா மேடம் மாதிரியோ, அவ்ளோ ஏன் இப்போ காதல் திருமணம் பண்ணி 6 மாசத்துல அவங்க வீட்டு ஆளுங்களோட ஒரிஜினல் கலர் தெரிஞ்ச பின்னாடியும் அவனோட தான் வாழ்வேன்னு சொல்ற நண்பனின் தங்கட்சியயோ நாம என்னைக்கு கணக்குல எடுத்துகுரதில்ல, உதாரனாமாவும் சொல்றதில்ல..

இத எழுதும்போது கூட ஒருத்தன் கேட்டான், ``நீ என்ன நயன்தாரா ரசிகனான்னு``.அவனுக்கு, எனக்கும், எல்லாருக்கு சேர்த்து ஒன்னு சொல்றேன்..இந்த நயன்தார, ரஞ்சிதா பின்னாடி எல்லாம் பிரபு தேவா அப்படின்ற உத்தம புருஷனும், ராஜசேகர் என்கிற நித்யானந்தா அப்படின்ற ஒழுக்க சீலனும் இருக்கான்ற உண்மை நமக்கு புரியணும்.``ஏன் சார் கேமராவ பொண்ணுங்களுக்கு முன்னாடி, பின்னாடி இப்படி டைட் க்ளோஸ் அப் வெக்குரீங்கன்னு`` கேட்டா `` டிஸ்த்ரிபியுடர் கேக்குறாங்க சார்``..அப்படின்னு பொய் சொல்றத நேர்ல பார்த்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கு..   காதலுக்காக வீட்டு சுவர எகிறி குதிச்சு போய் கல்யாணம் பண்ணி இப்போ சந்தோஷமா இருக்குற  தேவயாணி கூட அந்த துறைல இருக்குறவங்க தான்..

``அண்ணா 2 நாள் ஊர  சுத்தி பாக்க பெங்களூர் வந்த என்னாலேயே இந்த சாப்பாட அட்ஜஸ்ட் பண்ண முடியலையே..நீங்க எப்படின்னா இத தாங்குறீங்க``அப்படீன்னு உண்மையான வருத்தத்தோட கேட்ட என் சித்தி பொண்ணும், ஒரு அண்ணனா கல்யாணம் அப்படின்ற அடிப்படை கடமைய மட்டும் செஞ்ச எனக்கு ,எல்லா பிறந்த நாளும் எனக்கு காலெண்டர்ல    இன்னொரு நாள் தான், எனக்காக கேக் வெட்டின முதல் ஜீவராசி என தங்கச்சி தான்,அப்பாவ தவிர புது உடுப்பு எடுத்து கொடுத்தும் அவ தான்,ஊற விட்டு போரேன்னு தெரிஞ்சதும் தேவையானது வாங்கினது முதற்கொண்டு பேக்  பண்ணி முடிச்சு கண் கலங்கி ஸ்டேஷன்ல டாடா காட்டினதும் அவ தான், இன்னும் கொஞ்ச மாசத்துல எனக்கு தாய்மாமன் அப்படின்ற அந்தஸ்த கொடுக்க போறா. ``டேய் இந்த பச்ச பாட்டில்ல ரசம் இருக்கு 2 நாள் வரும், அந்த ஸ்வீட் டப்பால குழம்பு இருக்கு பிரிட்ஜ் இல்லாமையே 3 நாள் வரும், அதுல சிக்கன் இருக்கு..இப்படின்னு ஊருக்கு போறப்ப எடுத்துட்டு போற பெரிய லக்கேஜ் மாதிரி சாபிடற வஸ்துவ மட்டும் கொடுக்குற அம்மாவை பத்தியே தனியா எழுதலாம்..

காதல் தோல்வியே வந்தாலும்..TR  மாதிரி நாகரீகமா சோகத்த  வெளிபடுத்துங்க, அவர் பையன் மாதிரி வெளிப்படுத்த வேண்டாம்....

ஒரு மணிக்கு ஒரு தரம் போன் பண்ணி ``சாப்டியாடா ``, வெளில போனா ``பத்திரமா போடா``..``குழந்தை என்ன பண்றா`` இப்படின்னு விசாரிக்கும், தன்  மனைவிக்காக என்னவெல்லாம் செய்வார் என்பதும்,ஒரு பெண் குழந்தைக்காக எந்த எல்லையை தொடவும், அந்த குழந்தைக்காக கீழிறங்கி வந்து ஒரு குழந்தையாகவே மாறும், ஒரு உன்னத ஆத்மாவிடம் இரண்டரை வருடம் பணி புரிந்த பெற்ற அறிவு, அருகில் அமர்ந்து அதை பார்த்து ரசிக்கவும் செய்த கண்களுக்கு..இனி தப்பான பார்வையை, செய்கையை, நினைப்பை பெண்களின் பக்கம் வீச கூடாது என பிரார்த்திக்கிறேன்..

தன்னை வருத்தி பிறருக்கு வெளிச்சம் தருவதற்கு உதாரணமாக இனி மெழுகுவர்த்தியை சொல்லாமல் ,ரத்தமும் சதையுமாக உள்ள..பெண்களை சொல்லுவோம்...