December 4, 2011

என் ஊர்...

நாம் பிறந்த மண் அதுக்கு எதாவது செய்யனும்னு எல்லாருக்கும் ஒரு எண்ணம் இருந்துட்டே இருக்கும்..எனக்கும் இருக்கு..ஆனா அத இப்போ செய்யமுடியாது...நான் பொறந்த நாட்டுக்கு எதாவது  செய்ரோமோ  இல்லையோ, இருக்குற தமிழ் நாட்டுக்கு எதாவது செய்ரோமோ  இல்லையோ...குறைஞ்சபட்சம் நான் இருக்குற தெருவுக்காவவது  ஏதாவது செய்யனும்னு ரொம்ப நாளா நெனைச்சிட்டு இருக்கேன்...சென்னைலயே நான் பொறந்தது ஒரு இடம், வளர்ந்தது இன்னொரு இடம், இப்போ பிழைக்க வந்தது இன்னொரு இடம் (ஊருன்னு கூட சொல்லலாம்)....அந்தந்த ஊர பத்தின எனக்கு தெரிஞ்ச விஷயத்த இங்க சொல்லணும்...அதான் மேட்டர்....

1 . நூத்திஎட்டு திவ்ய தேசங்கள்ல ஒண்ணான பார்த்தசாரதி கோயில், இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா பீச், தேசியகவிஞர் பாரதியாரோட வீடு, 150 வருஷத்துக்கும் மேலா இருக்குற சென்னை பல்கலைக்கழகம், கமல் படிச்ச ஹிந்து உயர்நிலை பள்ளி, ரஜினி அடிக்கடி வந்து போற ராகவேந்திரா கோயில், கற்ப்புக்கு (?!) இலக்கணமா இருந்த, இருக்குற கண்ணகி சிலை,பழமையான லேடி வெல்லிங்டன் பள்ளிக்கூடம். கடற்கரை காத்தோட அடிக்கிற மீன் வாசம், பள்ளி வாசல்ல இருந்த வர தொழுகை சத்தம், எல்லா மொழிக்காரனும் வசிக்க வசதியான மேன்சன், மீன்பிடிப்பவர்கள், லோக்கல் தாதா, ஹிந்து  முஸ்லிம் பிரச்சன இப்படி இதையெல்லாம் டீல் பண்ற எப்பவும் பரபரப்பா இருக்கு ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம்,இப்படி எனக்கு தெரிஞ்ச, இன்னும் தெரியாத எப்பவுமே பரபரப்பா இருக்குற...கோவில் குளத்துல நெறைய அல்லி மலர்கள் இருந்ததால திருஅல்லி கேணி பின்னாளில் தேய்ஞ்சு மருவி பேர் மாறி போன திருவல்லிக்கேணி  தான் நான் பொறந்த ஊர் ( பொறந்தது சேத்பட் மேத்தா நர்சிங் ஹோம்)...வீட்ல இருந்து பத்து நிமிஷத்துல நடந்து போனா மாறின பீச், நண்பர்கள் வட்டம், காத்தாடி பிடிக்க  ஒட்டு வீடு மேல ஓடிப்போனது,நெனைச்சு பார்க்கும் போதே உடனடியா பன்னிரண்டு வயசுக்கு போற மாதிரி சூப்பரனா  சம்பவங்கள் நெறைய இருக்கு..ஹிந்து ஸ்கூல் படிப்பு, வர வழில பார்த்தசாரதி கோயில் குளத்துக்குபோய் அடிவாங்கின தழும்பு இன்னமும் இருக்கு..அங்க இருக்கும் போது இருந்த ஒரு பெரிய நட்பு வட்டம், இப்போ ஒருத்தர் கூட டச்ல இல்லாம இருக்கிறது மட்டும் ஒரு மிக பெரிய வருத்தம்..இப்போவும் 21G , 45B பஸ் போகுறப்போ அத நான் பாக்கும் போது அதுல ஏறி சும்மாவாவது அங்க போகணும்னு நெனைப்பேன்...(பஸ் டிக்கெட் விக்கிற விலைல சும்மாலா போகமுடியுமா.)...

 2 . நான்  போற வரைக்கும் இந்த ஊர் அவ்ளோ பிரசித்தி பெற்ற ஸ்தலமான்னு எனக்கு தெரில, ஆனா நான் போன பிறகு ஆயுடுச்சு...(என்னாலா தான் ஆச்சுன்னு தப்பா நெனைக்காதீங்க) க்ரோம் லேதெர் பாக்டரி இருந்து, அதுல எங்க ஊரே ஒட்டு மொத்தமா வேல செஞ்சதால இப்போ என்னோட ஊருக்கு குரோம்பேட்டை அப்படின்னு பேர் வந்துது..ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குஅடுத்தபடியா எங்க ஊர்ல இருக்குற திருநீர்மலை ரங்கநாதர கேள்விபடாத பக்திமான்களே இருக்க மாட்டங்க..குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்னு சொல்லுவாங்க ஆனா அவர் இருக்குற இடத்துக்கு நாங்க வெச்சபேரே குமரன் குன்றம் தான்...ரொம்ப சக்தி வாய்ந்தவர்னு சொல்றாங்க...இப்போ சென்னைலயே மிக முக்கியாமான மகளிர் கல்லூரிகள் லிஸ்ட் எடுத்தோம்னா எங்க ஊர்ல இருக்குற வைஷ்ணவா கல்லூரி முதல் ஐந்து எடதுக்குள்ள வரும்..அப்படி ஒரு பேரு பெற்ற ஸ்தலம்..ஒரே ஒரு தரம் பத்தாவது, மற்றும் பன்னிரெண்டாவது பரிட்சய எழுதி பாஸ் பண்ணது, பல தடவ கல்லூரி பரீட்சை எழுதினது, முதல் சண்டை, முதல் காதல் இப்படின்னு என்னோட பல முதல்களுக்கு முதல் போட்ட இடம்..சென்னை விமான நிலையத்துல இருந்து அஞ்சு கிலோமீட்டர் தான் என் ஊர்,எந்த நேரத்துலயும் எந்த இடத்துக்கும் போக வசதியான போக்குவரத்துக்கு நான் உத்தரவாதம், மாநகர பேருந்துக்கு பாடி கட்டும் தொழிற்சாலையே எங்க ஊர்ல தான் இருக்கு..இப்போ மத்திய அமைச்சர் திரு ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு சொந்தமான தாகூர் மருத்துவ கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ரெண்டு மூணு பள்ளிக்கூடம் இப்படின்னு ஏரியாவே கல்வி மயமா மாறிடுச்சு அவரும் கல்வி தந்தையா ஆயிட்டாரு..நான் படிச்ச அரசு ஆண்கள்மேல்நிலை மாணவர்கள் இன்னமும் பக்கத்துல இருக்குற பொண்ணுங்க படிக்கிற பள்ளிகூடத்துல ராக்கெட் விட்டுட்டு இருக்காங்க..(ட்ரெண்ட மாத்தவே மாட்டனுங்க போல)..இங்கொன்னு அங்கொண்ணுமா இருந்தவீடு, நெறைய மைதானம்னு இருந்த ஊரு இப்போ கால் வெக்க இடம் இல்லாம இருக்கு...அது ஒரு சின்ன வருத்தம்.

3.  இப்படி எல்லாம் குண்டு சட்டில குதிரை ஓட்டிட்டு இருந்த எனக்கு, போடா ஊற விட்டு அப்போ தான் நீ உருபடுவ..என்ன தொரத்தி அடிச்சது.....அப்புறம் நான் வந்து சேர்ந்த ஊரு ஹைதராபாத்..`தம்புடு  ஏமி மாட்லட்துன்னாவ், நாக்கு தமிழ் ராது...`இப்படின்னு ரயில விட்டு இறங்கினதும் எவனா பேசினா அடுத்த ரயில புடிச்சு திருப்பி ஊருக்கு ஒடனும்னு தோணுமா தோணாதா...சார்மினார், லும்பினி பார்க், ஹுசைன் சாகர் ஏரி, முத்துக்கள், காரமா சாப்பிடறது..இப்படிவெளி உலகத்துக்கு தெரிஞ்ச விஷயத்த விட தெரியாத விஷயம் ஒன்னு இருக்கு..அது இந்த ஊர்ல இருக்கணும்னா உங்களுக்குவயிறு வேணும்...சென்னை எக்ஸ்பிரஸ் வண்டில இருந்து செகந்தராபாத் வந்து காலைலமணிக்கு இறங்கினா உங்களுக்காக சாப்ட ரெடியா கிரில் சிக்கென், தந்தூரி, கைமா இப்படி பல விஷயங்கள் உங்களுக்காக காத்துட்டு இருக்கும்..சைவம் சாபிட்ரவங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் இங்க உயிர் வாழனும்...இங்க கிடைக்குற இராணி டி , ஒஸ்மானியா பிஸ்கட், சமோசா, கராச்சி பேக்கரி, ஒரு டி கடைக்கு போனா கூட வயிறு ரொம்ப விருந்து சாப்டு வரலாம்..இவ்ளோ சொல்லியாச்சு...ஹைதராபாத் பிரியாணி பத்தி சொல்லாம போனா கோழி இனமே என்னை கொலை பண்ணிரும்...முழு பூசனிக்காய சோத்துல மறைக்குர  பழமொழி எப்படி நம்ம ஊர்ல இருக்கோ, அதே பழமொழிய இங்கஒரு முழு கோழிய சோத்துல மறைச்சு நடைமுறை படுத்திட்டு இருக்காங்க, சித்திக் கபாப் அப்படின்னு ஒரு இடம் இருக்கு அங்க போனீங்கன்னா....குடும்பம் குடும்பமா ஒரு கோழி பரம்பரையவே தூக்குல தொங்க விட்ருப்பாங்க..உள்ள போனீங்கன்ன உங்க பாக்கெட்டும் சேதாரம் வராம, வயிறும், மனசும் நெறைஞ்சு தான் வெளில வருவீங்க..எப்படி இந்த ஊர்ல காலம் தள்ள போறோம்னு பயந்துட்டு வந்தகாலம் போய் இந்த ஊருக்கே அம்மா அப்பாவ கூட்டிட்டு வந்துரணும்னு நினைப்பு வர காலம் வந்துருச்சு...அப்பப்போ வர தெலங்கான பிரச்சனைய தவிர இந்த ஊர் நல்ல ஊர் தான்...தமிழ் பேச்ச இனிமே கேக்க முடியுமான்னு நெனைச்சுட்டே வந்தேன் ஆனா 10 லட்சம் தமிழர்கள், தமிழ் சங்கம், தமிழர்களுக்குன்னு தனி பள்ளி கூடம், தனி ஏரியா இப்படி நிறைய விஷயத்த பாத்து மிரண்டு போய்ட்டேன்...நம்ம பெங்களுர் மாதிரி இல்லாம எல்லாருக்கும் குறிப்பா தமிழர்கள் எல்லாரும் பாதுக்காப்பா இருக்க ஒரு நல்ல ஊரு ஹைதராபாத்....

இதெல்லாம் இல்லாம நான் படிச்ச `நந்தனம்` கல்லூரியும் அப்போ சுத்தின சைதாபேட்டையும் என் ஊர் அப்படின்னு சொல்ற அளவுக்கு மேல....அத பத்தி தனியாவே எழுதணும்..ஆனா.... 
 
இந்த மாதிரி நெறைய விஷயம் இருக்கு எழுத, பேச...எல்லா விஷயத்தையும்  ஒரே சமயத்துல எழுத முடியாததுல ஒரே  வருத்தம்  எனக்கு,,,இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா அந்த மாதிரி விஷயத்த.............
                                                                                                                                 
                                                                                                         போட்டு வாங்குவோம்....

November 8, 2011

திருமணம்.

வணக்கம்..

திருமணம். சொல்றதுக்கு ரொம்ப சுலபமான அஞ்செழுத்து வார்த்த தான்..ஆனாஒருபேர் சேர்ந்து வாழ, அதுக்கு பின்னாடி எத்தன பேரோட பிரார்த்தனை, உழைப்பு, பயம், இருக்கு அப்படின்றத போன செப்டம்பர் மாசம் தான் நான் கண்கூட பார்த்தேன்...இது வரைக்கும் கல்யாணம்னு எங்கயாவது போனா, போனோமா, சாப்டோமா, ஏதோ கொஞ்சம் வேலை ஏதோ செஞ்சோமா, சைட்அடிச்சோமா அப்படின்னு வந்து போறதுன்னு இருந்த எனக்கு...கல்யாணம்அப்படின்ற விஷயம் எப்படி டென்ஷன் ஏற்படுத்தும் எவ்ளோ வேல வாங்கும், எங்க எல்லாம் பொறுமையா இருக்கணும்..இப்படி இன்னும் சொல்லிட்டேபோக நெறைய கத்து கொடுத்தது..
 
கல்யாணம்னா என்ன...முன்னாள் சாயந்தரம் வரவேற்பு அடுத்த நாள் காலைல முஹுர்த்தம் அப்படின்னு நெனைக்கிற நெறைய பேர்ல நானும்ஒருத்தன்..... 

ஆனா அந்த 24 மணி நேரத்துக்காக கிட்ட தட்ட 6 மாசம் சோறு தண்ணி சரியா சாப்பிடாமநைட்ல சரியா தூங்காம, என்ன நடக்குமோன்னு ஏதோ மெகா சீரியல் மாமியார் மருமக சண்டைய பாக்குற சீரியசோட திரிஞ்சாரு ஒரு மனுஷன், மண்டபம்,சமையல், பூ, பால் மொதற்கொண்டு பல விஷயத்துக்காக...ஏற்கனவே கொஞ்சம் டென்ஷன் படர ஆள் வேற...இதுல இந்த டென்ஷன் வேற..
 
இன்னொருத்தர் ஏற்கனவே ஏகப்பட்ட பக்தியோட திரிஞ்சவங்க...அவங்கஇன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி பக்திய பத்தி பக்கம் பக்கமா எழுத ஆரம்பிச்ட்டாங்க...வழக்கமாவே வாரத்துல 8 நாள் விரதம்  இருப்பாங்க...இன்னும் இந்த விஷயத்துக்காக ஒன்பதாவதா விரதம் இருக்க ஒரு நாள் தேடினாங்க...
 
படிக்கும் பொது ஏகப்பட்ட பேப்பர் அரியர் வெச்சப்போ, அதுக்கு அடிவாங்கினப்போ, உருப்படியான வேல இல்லாதப்போ, பல விஷயத்துல படுதோல்வி அடைஞ்சப்போ இப்படி எந்த ஒரு விஷயத்துக்கும் ரொம்ப அலட்டிக்காத ஒரு  ஜென்மம்..HDFC பாங்க்ல கடன் கேட்டு அவனுங்க பின்னாடி அலைஞ்சப்போ ஆனாரு பாருங்க டென்ஷன்..அதுவும் இந்த கல்யாணத்துக்குதான்...இவனுங்க கிட்ட அந்த ரெண்டு மாசம் காச வாங்க அவன் பட்டபாடு....அவனுக்கு மட்டும் தான் தெரியும்...
 
பொதுவா ஒரு இருவது, இருவத்தி மூணு வயசு வரைக்கும் ஒரு பொண்ணு ஒரு சூழ்நிலைல வளர்ந்து...திடிர்னு வேற விதமா, வேற விருப்புவெறுப்புகளோட வளர்ந்த ஒரு ஆணோட, ஒரு குடும்பத்தோட...ஒரு புதுசூழல்ல தன்ன டோட்டலா மாத்திக்கிட்டு இருக்க போறது அப்படின்ற ஒரு விஷயத்தோட சீரியஸ்னஸ் என்னனு இது வரைக்கும் எனக்கு சினிமால வசனமா பார்த்து தான் பழக்கம்....அது நேரடி அனுபவமா எவ்ளோ கஷ்டமான ( சந்தோஷமான கஷ்டம், ஏன்னா நம்ம ரூட்டு க்ளியர் ஆகுதுல்ல..) விஷயம்அப்படின்றது தெரிஞ்சுது...
 
சும்மா தேங்கா போட்டு கல்யாணத்துக்கு கொடுக்குற தாம்பூல பைல எவ்ளோஉழைப்பு இருக்கு..பை போட்ற துணிய வாங்க ஒரு கடை...அத நாலு பக்கம்தைக்குரதுக்கு நாலு பேர், சாமி படம், கல்யாணம் பண்ண போறவங்க பேர் போடுற அச்சுக்கு ஒரு நாலு பேர், பார்சல் பண்ணி மூட்ட கட்டோ ஒருத்தர், ....பால் எத்தன லிட்டர், சக்கர எத்தன கிலோ, அரிசி எத்தன மூட்ட...இப்படி எந்தஒரு சின்னதும், பெருசுமா நெறைய விஷயத்த பாக்க, கத்துக்க,, அதுக்கு தேவைபடர உழைப்பையும் பக்கத்துல இருந்து பாக்குற சந்தர்ப்பம் கெடைச்சது...(நிம்மதியா சைட் கூட அடிக்க முடில....)
 
ஏதோ என் அறிவுக்கு (அதெல்லாம் வேற இருக்கா எனக்கு) எட்டின, கல்யாணத்த பத்தின விஷயங்கள..நான் பார்த்து எனக்கு புரிஞ்ச விஷயத்த மட்டும் இங்க போட்ருக்கேன்...அதனால இதெல்லாம் ஒரு மேட்டர்
அப்படின்னு எழுதி எங்க நேரத்தையும் கெடுக்குற ராஸ்கல்...அப்படின்னு சொல்லவேண்டாம்னு....பணிவன்புடன் கேட்டுக்குறேன்... 
 
இப்படி பக்கத்துல இருந்து பாத்தேன், பக்கத்துல இருந்துசெஞ்சேன்....அப்படின்னு சொல்லிட்டே இருக்கானே.....திருட்டுத்தனமா இவன் கல்யாணம் பண்ணிட்டு யாருக்கோ கல்யாணம் ஆனா மாதிரி கத சொல்லிட்டு இருக்கானே அப்படின்னு இந்த நல்லவன (ஆஹா...) நீங்க சந்தேகப்படகூடாது...யாருக்கு கல்யாணம் அப்படின்னு சொல்றதுக்கு முன்னாடி..மக்கள் கிட்ட நான் மன்னிப்புகேட்டுக்குறேன்....ரொம்ப தெரிஞ்சவங்க, ரொம்ப நாள் பழகினவங்க, நண்பர்கள் இப்படி ரொம்ப பேர டென்ஷன்ல கூப்பிட மறந்துருக்கலாம், செரியா கூப்பிடலஅப்படின்னு நீங்க நெனைக்கலாம், இத படிக்கிறவங்க யார இருந்தாலும் அதா எல்லாம் மறந்து ...மணமக்கள் நல்லா இருக்கணும்னு நீங்க மனமாரவாழ்த்தனும்....அது மட்டும் போதும்....(நேர்ல பாக்கும் போது மொய் பணத்த மறக்காம கொடுத்துருங்க...லேட்டா தரீங்கன்னு கோப பட மாட்டேன்.)
 
சோறு தண்ணி இல்லாம டென்ஷனா அலைஞ்சது எங்கப்பா, விரதத்துக்கு நாள் தேடிட்டு இருந்தது என்னோட மம்மி..மூணாவது காரெக்டர் அதாவது கடன் கேட்டு அலைந்தவர்....நான் தான்....நடந்த அந்த திருமண என் தங்கயோடது...(தமக்கை அப்படின்னு அழகு தமிழ்ல அன்போட சொல்லலாம்,தங்கச்சி பத்தி தனி பதிவு ரெட்யாயிட்டு இருக்கு..)....

பின் குறிப்பு: இதில் இருக்கும் புகைப்படம் திருமணத்தன்று எடுக்க பட்டது, நெட்டில் இருந்து டவுன்லோட் செய்யபட்டதோ, அல்லது வேறெங்கும் சுடபட்டதோ அல்ல...


December 4, 2011

என் ஊர்...

நாம் பிறந்த மண் அதுக்கு எதாவது செய்யனும்னு எல்லாருக்கும் ஒரு எண்ணம் இருந்துட்டே இருக்கும்..எனக்கும் இருக்கு..ஆனா அத இப்போ செய்யமுடியாது...நான் பொறந்த நாட்டுக்கு எதாவது  செய்ரோமோ  இல்லையோ, இருக்குற தமிழ் நாட்டுக்கு எதாவது செய்ரோமோ  இல்லையோ...குறைஞ்சபட்சம் நான் இருக்குற தெருவுக்காவவது  ஏதாவது செய்யனும்னு ரொம்ப நாளா நெனைச்சிட்டு இருக்கேன்...சென்னைலயே நான் பொறந்தது ஒரு இடம், வளர்ந்தது இன்னொரு இடம், இப்போ பிழைக்க வந்தது இன்னொரு இடம் (ஊருன்னு கூட சொல்லலாம்)....அந்தந்த ஊர பத்தின எனக்கு தெரிஞ்ச விஷயத்த இங்க சொல்லணும்...அதான் மேட்டர்....

1 . நூத்திஎட்டு திவ்ய தேசங்கள்ல ஒண்ணான பார்த்தசாரதி கோயில், இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா பீச், தேசியகவிஞர் பாரதியாரோட வீடு, 150 வருஷத்துக்கும் மேலா இருக்குற சென்னை பல்கலைக்கழகம், கமல் படிச்ச ஹிந்து உயர்நிலை பள்ளி, ரஜினி அடிக்கடி வந்து போற ராகவேந்திரா கோயில், கற்ப்புக்கு (?!) இலக்கணமா இருந்த, இருக்குற கண்ணகி சிலை,பழமையான லேடி வெல்லிங்டன் பள்ளிக்கூடம். கடற்கரை காத்தோட அடிக்கிற மீன் வாசம், பள்ளி வாசல்ல இருந்த வர தொழுகை சத்தம், எல்லா மொழிக்காரனும் வசிக்க வசதியான மேன்சன், மீன்பிடிப்பவர்கள், லோக்கல் தாதா, ஹிந்து  முஸ்லிம் பிரச்சன இப்படி இதையெல்லாம் டீல் பண்ற எப்பவும் பரபரப்பா இருக்கு ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம்,இப்படி எனக்கு தெரிஞ்ச, இன்னும் தெரியாத எப்பவுமே பரபரப்பா இருக்குற...கோவில் குளத்துல நெறைய அல்லி மலர்கள் இருந்ததால திருஅல்லி கேணி பின்னாளில் தேய்ஞ்சு மருவி பேர் மாறி போன திருவல்லிக்கேணி  தான் நான் பொறந்த ஊர் ( பொறந்தது சேத்பட் மேத்தா நர்சிங் ஹோம்)...வீட்ல இருந்து பத்து நிமிஷத்துல நடந்து போனா மாறின பீச், நண்பர்கள் வட்டம், காத்தாடி பிடிக்க  ஒட்டு வீடு மேல ஓடிப்போனது,நெனைச்சு பார்க்கும் போதே உடனடியா பன்னிரண்டு வயசுக்கு போற மாதிரி சூப்பரனா  சம்பவங்கள் நெறைய இருக்கு..ஹிந்து ஸ்கூல் படிப்பு, வர வழில பார்த்தசாரதி கோயில் குளத்துக்குபோய் அடிவாங்கின தழும்பு இன்னமும் இருக்கு..அங்க இருக்கும் போது இருந்த ஒரு பெரிய நட்பு வட்டம், இப்போ ஒருத்தர் கூட டச்ல இல்லாம இருக்கிறது மட்டும் ஒரு மிக பெரிய வருத்தம்..இப்போவும் 21G , 45B பஸ் போகுறப்போ அத நான் பாக்கும் போது அதுல ஏறி சும்மாவாவது அங்க போகணும்னு நெனைப்பேன்...(பஸ் டிக்கெட் விக்கிற விலைல சும்மாலா போகமுடியுமா.)...

 2 . நான்  போற வரைக்கும் இந்த ஊர் அவ்ளோ பிரசித்தி பெற்ற ஸ்தலமான்னு எனக்கு தெரில, ஆனா நான் போன பிறகு ஆயுடுச்சு...(என்னாலா தான் ஆச்சுன்னு தப்பா நெனைக்காதீங்க) க்ரோம் லேதெர் பாக்டரி இருந்து, அதுல எங்க ஊரே ஒட்டு மொத்தமா வேல செஞ்சதால இப்போ என்னோட ஊருக்கு குரோம்பேட்டை அப்படின்னு பேர் வந்துது..ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குஅடுத்தபடியா எங்க ஊர்ல இருக்குற திருநீர்மலை ரங்கநாதர கேள்விபடாத பக்திமான்களே இருக்க மாட்டங்க..குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்னு சொல்லுவாங்க ஆனா அவர் இருக்குற இடத்துக்கு நாங்க வெச்சபேரே குமரன் குன்றம் தான்...ரொம்ப சக்தி வாய்ந்தவர்னு சொல்றாங்க...இப்போ சென்னைலயே மிக முக்கியாமான மகளிர் கல்லூரிகள் லிஸ்ட் எடுத்தோம்னா எங்க ஊர்ல இருக்குற வைஷ்ணவா கல்லூரி முதல் ஐந்து எடதுக்குள்ள வரும்..அப்படி ஒரு பேரு பெற்ற ஸ்தலம்..ஒரே ஒரு தரம் பத்தாவது, மற்றும் பன்னிரெண்டாவது பரிட்சய எழுதி பாஸ் பண்ணது, பல தடவ கல்லூரி பரீட்சை எழுதினது, முதல் சண்டை, முதல் காதல் இப்படின்னு என்னோட பல முதல்களுக்கு முதல் போட்ட இடம்..சென்னை விமான நிலையத்துல இருந்து அஞ்சு கிலோமீட்டர் தான் என் ஊர்,எந்த நேரத்துலயும் எந்த இடத்துக்கும் போக வசதியான போக்குவரத்துக்கு நான் உத்தரவாதம், மாநகர பேருந்துக்கு பாடி கட்டும் தொழிற்சாலையே எங்க ஊர்ல தான் இருக்கு..இப்போ மத்திய அமைச்சர் திரு ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு சொந்தமான தாகூர் மருத்துவ கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ரெண்டு மூணு பள்ளிக்கூடம் இப்படின்னு ஏரியாவே கல்வி மயமா மாறிடுச்சு அவரும் கல்வி தந்தையா ஆயிட்டாரு..நான் படிச்ச அரசு ஆண்கள்மேல்நிலை மாணவர்கள் இன்னமும் பக்கத்துல இருக்குற பொண்ணுங்க படிக்கிற பள்ளிகூடத்துல ராக்கெட் விட்டுட்டு இருக்காங்க..(ட்ரெண்ட மாத்தவே மாட்டனுங்க போல)..இங்கொன்னு அங்கொண்ணுமா இருந்தவீடு, நெறைய மைதானம்னு இருந்த ஊரு இப்போ கால் வெக்க இடம் இல்லாம இருக்கு...அது ஒரு சின்ன வருத்தம்.

3.  இப்படி எல்லாம் குண்டு சட்டில குதிரை ஓட்டிட்டு இருந்த எனக்கு, போடா ஊற விட்டு அப்போ தான் நீ உருபடுவ..என்ன தொரத்தி அடிச்சது.....அப்புறம் நான் வந்து சேர்ந்த ஊரு ஹைதராபாத்..`தம்புடு  ஏமி மாட்லட்துன்னாவ், நாக்கு தமிழ் ராது...`இப்படின்னு ரயில விட்டு இறங்கினதும் எவனா பேசினா அடுத்த ரயில புடிச்சு திருப்பி ஊருக்கு ஒடனும்னு தோணுமா தோணாதா...சார்மினார், லும்பினி பார்க், ஹுசைன் சாகர் ஏரி, முத்துக்கள், காரமா சாப்பிடறது..இப்படிவெளி உலகத்துக்கு தெரிஞ்ச விஷயத்த விட தெரியாத விஷயம் ஒன்னு இருக்கு..அது இந்த ஊர்ல இருக்கணும்னா உங்களுக்குவயிறு வேணும்...சென்னை எக்ஸ்பிரஸ் வண்டில இருந்து செகந்தராபாத் வந்து காலைலமணிக்கு இறங்கினா உங்களுக்காக சாப்ட ரெடியா கிரில் சிக்கென், தந்தூரி, கைமா இப்படி பல விஷயங்கள் உங்களுக்காக காத்துட்டு இருக்கும்..சைவம் சாபிட்ரவங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் இங்க உயிர் வாழனும்...இங்க கிடைக்குற இராணி டி , ஒஸ்மானியா பிஸ்கட், சமோசா, கராச்சி பேக்கரி, ஒரு டி கடைக்கு போனா கூட வயிறு ரொம்ப விருந்து சாப்டு வரலாம்..இவ்ளோ சொல்லியாச்சு...ஹைதராபாத் பிரியாணி பத்தி சொல்லாம போனா கோழி இனமே என்னை கொலை பண்ணிரும்...முழு பூசனிக்காய சோத்துல மறைக்குர  பழமொழி எப்படி நம்ம ஊர்ல இருக்கோ, அதே பழமொழிய இங்கஒரு முழு கோழிய சோத்துல மறைச்சு நடைமுறை படுத்திட்டு இருக்காங்க, சித்திக் கபாப் அப்படின்னு ஒரு இடம் இருக்கு அங்க போனீங்கன்னா....குடும்பம் குடும்பமா ஒரு கோழி பரம்பரையவே தூக்குல தொங்க விட்ருப்பாங்க..உள்ள போனீங்கன்ன உங்க பாக்கெட்டும் சேதாரம் வராம, வயிறும், மனசும் நெறைஞ்சு தான் வெளில வருவீங்க..எப்படி இந்த ஊர்ல காலம் தள்ள போறோம்னு பயந்துட்டு வந்தகாலம் போய் இந்த ஊருக்கே அம்மா அப்பாவ கூட்டிட்டு வந்துரணும்னு நினைப்பு வர காலம் வந்துருச்சு...அப்பப்போ வர தெலங்கான பிரச்சனைய தவிர இந்த ஊர் நல்ல ஊர் தான்...தமிழ் பேச்ச இனிமே கேக்க முடியுமான்னு நெனைச்சுட்டே வந்தேன் ஆனா 10 லட்சம் தமிழர்கள், தமிழ் சங்கம், தமிழர்களுக்குன்னு தனி பள்ளி கூடம், தனி ஏரியா இப்படி நிறைய விஷயத்த பாத்து மிரண்டு போய்ட்டேன்...நம்ம பெங்களுர் மாதிரி இல்லாம எல்லாருக்கும் குறிப்பா தமிழர்கள் எல்லாரும் பாதுக்காப்பா இருக்க ஒரு நல்ல ஊரு ஹைதராபாத்....

இதெல்லாம் இல்லாம நான் படிச்ச `நந்தனம்` கல்லூரியும் அப்போ சுத்தின சைதாபேட்டையும் என் ஊர் அப்படின்னு சொல்ற அளவுக்கு மேல....அத பத்தி தனியாவே எழுதணும்..ஆனா.... 
 
இந்த மாதிரி நெறைய விஷயம் இருக்கு எழுத, பேச...எல்லா விஷயத்தையும்  ஒரே சமயத்துல எழுத முடியாததுல ஒரே  வருத்தம்  எனக்கு,,,இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா அந்த மாதிரி விஷயத்த.............
                                                                                                                                 
                                                                                                         போட்டு வாங்குவோம்....

November 8, 2011

திருமணம்.

வணக்கம்..

திருமணம். சொல்றதுக்கு ரொம்ப சுலபமான அஞ்செழுத்து வார்த்த தான்..ஆனாஒருபேர் சேர்ந்து வாழ, அதுக்கு பின்னாடி எத்தன பேரோட பிரார்த்தனை, உழைப்பு, பயம், இருக்கு அப்படின்றத போன செப்டம்பர் மாசம் தான் நான் கண்கூட பார்த்தேன்...இது வரைக்கும் கல்யாணம்னு எங்கயாவது போனா, போனோமா, சாப்டோமா, ஏதோ கொஞ்சம் வேலை ஏதோ செஞ்சோமா, சைட்அடிச்சோமா அப்படின்னு வந்து போறதுன்னு இருந்த எனக்கு...கல்யாணம்அப்படின்ற விஷயம் எப்படி டென்ஷன் ஏற்படுத்தும் எவ்ளோ வேல வாங்கும், எங்க எல்லாம் பொறுமையா இருக்கணும்..இப்படி இன்னும் சொல்லிட்டேபோக நெறைய கத்து கொடுத்தது..
 
கல்யாணம்னா என்ன...முன்னாள் சாயந்தரம் வரவேற்பு அடுத்த நாள் காலைல முஹுர்த்தம் அப்படின்னு நெனைக்கிற நெறைய பேர்ல நானும்ஒருத்தன்..... 

ஆனா அந்த 24 மணி நேரத்துக்காக கிட்ட தட்ட 6 மாசம் சோறு தண்ணி சரியா சாப்பிடாமநைட்ல சரியா தூங்காம, என்ன நடக்குமோன்னு ஏதோ மெகா சீரியல் மாமியார் மருமக சண்டைய பாக்குற சீரியசோட திரிஞ்சாரு ஒரு மனுஷன், மண்டபம்,சமையல், பூ, பால் மொதற்கொண்டு பல விஷயத்துக்காக...ஏற்கனவே கொஞ்சம் டென்ஷன் படர ஆள் வேற...இதுல இந்த டென்ஷன் வேற..
 
இன்னொருத்தர் ஏற்கனவே ஏகப்பட்ட பக்தியோட திரிஞ்சவங்க...அவங்கஇன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி பக்திய பத்தி பக்கம் பக்கமா எழுத ஆரம்பிச்ட்டாங்க...வழக்கமாவே வாரத்துல 8 நாள் விரதம்  இருப்பாங்க...இன்னும் இந்த விஷயத்துக்காக ஒன்பதாவதா விரதம் இருக்க ஒரு நாள் தேடினாங்க...
 
படிக்கும் பொது ஏகப்பட்ட பேப்பர் அரியர் வெச்சப்போ, அதுக்கு அடிவாங்கினப்போ, உருப்படியான வேல இல்லாதப்போ, பல விஷயத்துல படுதோல்வி அடைஞ்சப்போ இப்படி எந்த ஒரு விஷயத்துக்கும் ரொம்ப அலட்டிக்காத ஒரு  ஜென்மம்..HDFC பாங்க்ல கடன் கேட்டு அவனுங்க பின்னாடி அலைஞ்சப்போ ஆனாரு பாருங்க டென்ஷன்..அதுவும் இந்த கல்யாணத்துக்குதான்...இவனுங்க கிட்ட அந்த ரெண்டு மாசம் காச வாங்க அவன் பட்டபாடு....அவனுக்கு மட்டும் தான் தெரியும்...
 
பொதுவா ஒரு இருவது, இருவத்தி மூணு வயசு வரைக்கும் ஒரு பொண்ணு ஒரு சூழ்நிலைல வளர்ந்து...திடிர்னு வேற விதமா, வேற விருப்புவெறுப்புகளோட வளர்ந்த ஒரு ஆணோட, ஒரு குடும்பத்தோட...ஒரு புதுசூழல்ல தன்ன டோட்டலா மாத்திக்கிட்டு இருக்க போறது அப்படின்ற ஒரு விஷயத்தோட சீரியஸ்னஸ் என்னனு இது வரைக்கும் எனக்கு சினிமால வசனமா பார்த்து தான் பழக்கம்....அது நேரடி அனுபவமா எவ்ளோ கஷ்டமான ( சந்தோஷமான கஷ்டம், ஏன்னா நம்ம ரூட்டு க்ளியர் ஆகுதுல்ல..) விஷயம்அப்படின்றது தெரிஞ்சுது...
 
சும்மா தேங்கா போட்டு கல்யாணத்துக்கு கொடுக்குற தாம்பூல பைல எவ்ளோஉழைப்பு இருக்கு..பை போட்ற துணிய வாங்க ஒரு கடை...அத நாலு பக்கம்தைக்குரதுக்கு நாலு பேர், சாமி படம், கல்யாணம் பண்ண போறவங்க பேர் போடுற அச்சுக்கு ஒரு நாலு பேர், பார்சல் பண்ணி மூட்ட கட்டோ ஒருத்தர், ....பால் எத்தன லிட்டர், சக்கர எத்தன கிலோ, அரிசி எத்தன மூட்ட...இப்படி எந்தஒரு சின்னதும், பெருசுமா நெறைய விஷயத்த பாக்க, கத்துக்க,, அதுக்கு தேவைபடர உழைப்பையும் பக்கத்துல இருந்து பாக்குற சந்தர்ப்பம் கெடைச்சது...(நிம்மதியா சைட் கூட அடிக்க முடில....)
 
ஏதோ என் அறிவுக்கு (அதெல்லாம் வேற இருக்கா எனக்கு) எட்டின, கல்யாணத்த பத்தின விஷயங்கள..நான் பார்த்து எனக்கு புரிஞ்ச விஷயத்த மட்டும் இங்க போட்ருக்கேன்...அதனால இதெல்லாம் ஒரு மேட்டர்
அப்படின்னு எழுதி எங்க நேரத்தையும் கெடுக்குற ராஸ்கல்...அப்படின்னு சொல்லவேண்டாம்னு....பணிவன்புடன் கேட்டுக்குறேன்... 
 
இப்படி பக்கத்துல இருந்து பாத்தேன், பக்கத்துல இருந்துசெஞ்சேன்....அப்படின்னு சொல்லிட்டே இருக்கானே.....திருட்டுத்தனமா இவன் கல்யாணம் பண்ணிட்டு யாருக்கோ கல்யாணம் ஆனா மாதிரி கத சொல்லிட்டு இருக்கானே அப்படின்னு இந்த நல்லவன (ஆஹா...) நீங்க சந்தேகப்படகூடாது...யாருக்கு கல்யாணம் அப்படின்னு சொல்றதுக்கு முன்னாடி..மக்கள் கிட்ட நான் மன்னிப்புகேட்டுக்குறேன்....ரொம்ப தெரிஞ்சவங்க, ரொம்ப நாள் பழகினவங்க, நண்பர்கள் இப்படி ரொம்ப பேர டென்ஷன்ல கூப்பிட மறந்துருக்கலாம், செரியா கூப்பிடலஅப்படின்னு நீங்க நெனைக்கலாம், இத படிக்கிறவங்க யார இருந்தாலும் அதா எல்லாம் மறந்து ...மணமக்கள் நல்லா இருக்கணும்னு நீங்க மனமாரவாழ்த்தனும்....அது மட்டும் போதும்....(நேர்ல பாக்கும் போது மொய் பணத்த மறக்காம கொடுத்துருங்க...லேட்டா தரீங்கன்னு கோப பட மாட்டேன்.)
 
சோறு தண்ணி இல்லாம டென்ஷனா அலைஞ்சது எங்கப்பா, விரதத்துக்கு நாள் தேடிட்டு இருந்தது என்னோட மம்மி..மூணாவது காரெக்டர் அதாவது கடன் கேட்டு அலைந்தவர்....நான் தான்....நடந்த அந்த திருமண என் தங்கயோடது...(தமக்கை அப்படின்னு அழகு தமிழ்ல அன்போட சொல்லலாம்,தங்கச்சி பத்தி தனி பதிவு ரெட்யாயிட்டு இருக்கு..)....

பின் குறிப்பு: இதில் இருக்கும் புகைப்படம் திருமணத்தன்று எடுக்க பட்டது, நெட்டில் இருந்து டவுன்லோட் செய்யபட்டதோ, அல்லது வேறெங்கும் சுடபட்டதோ அல்ல...