November 11, 2009

நண்பருக்கு கடிதம்

நிறம் பார்த்து பேசும் மக்களுக்கிடையே, அவர்களின் தரம் பார்த்து பழகும் நண்பர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு,

தாய்நாட்டை தாண்டி சென்று 6 மாதத்திற்கு மேலாகிறது, தாய் மொழியை நினைவில் வைத்திருப்பீர்கள் என்ற தைரியத்தோடும் ,உங்களோடு இணைந்து ஒன்றாக பணி புரிந்தோம், ஆதலால் எங்களை நினைவில் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடும் இம்மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன்......நமது தாய்மொழியில்.....

ஒன்றாக பணிபுரிந்த காலத்தில் நீங்கள் அலசி ஆராய்ந்த அரசியல் நிகழ்வுகளை இப்போது கேட்க முடியவில்லையே என்று அங்கு இருக்கும் மேஜை, நாற்காலிகள் நாதியற்று இருக்கின்றன, விளையாட்டை நீங்கள் விமரிசிப்பதை இனிமேலும் கேட்க முடியுமா என்று வினவுகின்றன.

பிரியா விடை அன்று உங்களுடன் உணவு உண்டதும், தாங்கள் கொண்டு வரும் தயிர் சாதத்தின் சுவையும் இப்பொழுதும் எங்களது நாவில் நடனமாடி கொண்டிருக்கின்றன.

என்ன செய்வது இவற்றை திரும்ப பெறுவது சற்று கடினம்....

திரை கடல் ஓடி திரவியம் தேடும் தங்களை போல் அல்லாமல், தமிழகத்தின் எல்லையை மட்டும் தாண்டும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியுள்ளது..

தங்க தமிழ் பேசும் தேசத்தை விட்டு , சுந்தர தெலுங்கு பேசும் திசையை நோக்கி செல்கிறேன்.....நான்.....

நீங்கள் எனக்கு திருப்பி அளிக்கும் பதில் அஞ்சலில் விபரத்தை கூறுகிறேன்.....

தாய் மொழி பேச முடியாமல் ஆங்கிலமே பேச வருகிறது என்றாலும் பரவில்லை --- தமிழ் வாழ்க...

அனேகமாக ஆங்கிலேயராக மாறியிருக்க கூடும் அதனாலென்ன...ஜெய் ஹிந்த..

தை திங்களில் உங்களின் திருமண அழைப்பிதழை உங்களிடம் இருந்து பெற காத்து கொண்டிருக்கும்,

உங்கள் அன்பு நண்பர்கள்........

November 11, 2009

நண்பருக்கு கடிதம்

நிறம் பார்த்து பேசும் மக்களுக்கிடையே, அவர்களின் தரம் பார்த்து பழகும் நண்பர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு,

தாய்நாட்டை தாண்டி சென்று 6 மாதத்திற்கு மேலாகிறது, தாய் மொழியை நினைவில் வைத்திருப்பீர்கள் என்ற தைரியத்தோடும் ,உங்களோடு இணைந்து ஒன்றாக பணி புரிந்தோம், ஆதலால் எங்களை நினைவில் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடும் இம்மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன்......நமது தாய்மொழியில்.....

ஒன்றாக பணிபுரிந்த காலத்தில் நீங்கள் அலசி ஆராய்ந்த அரசியல் நிகழ்வுகளை இப்போது கேட்க முடியவில்லையே என்று அங்கு இருக்கும் மேஜை, நாற்காலிகள் நாதியற்று இருக்கின்றன, விளையாட்டை நீங்கள் விமரிசிப்பதை இனிமேலும் கேட்க முடியுமா என்று வினவுகின்றன.

பிரியா விடை அன்று உங்களுடன் உணவு உண்டதும், தாங்கள் கொண்டு வரும் தயிர் சாதத்தின் சுவையும் இப்பொழுதும் எங்களது நாவில் நடனமாடி கொண்டிருக்கின்றன.

என்ன செய்வது இவற்றை திரும்ப பெறுவது சற்று கடினம்....

திரை கடல் ஓடி திரவியம் தேடும் தங்களை போல் அல்லாமல், தமிழகத்தின் எல்லையை மட்டும் தாண்டும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியுள்ளது..

தங்க தமிழ் பேசும் தேசத்தை விட்டு , சுந்தர தெலுங்கு பேசும் திசையை நோக்கி செல்கிறேன்.....நான்.....

நீங்கள் எனக்கு திருப்பி அளிக்கும் பதில் அஞ்சலில் விபரத்தை கூறுகிறேன்.....

தாய் மொழி பேச முடியாமல் ஆங்கிலமே பேச வருகிறது என்றாலும் பரவில்லை --- தமிழ் வாழ்க...

அனேகமாக ஆங்கிலேயராக மாறியிருக்க கூடும் அதனாலென்ன...ஜெய் ஹிந்த..

தை திங்களில் உங்களின் திருமண அழைப்பிதழை உங்களிடம் இருந்து பெற காத்து கொண்டிருக்கும்,

உங்கள் அன்பு நண்பர்கள்........