March 12, 2012

காதலில் சொதப்பியது எப்படி - 1

கடந்த ஒரு 2  மாசமா நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.. ஏன்...காரணம்..இங்க கந்தகிரின்னு ஒருத்தன் அவன் காதல் கதைகள் எழுதி..அத என்ன படிக்க வெச்சு பயங்கரமா இம்சை படுத்திட்டான்..இந்த மாதிரி கதையெல்லாம் படிச்சதுக்கப்புறம்..நான் அப்போ பண்ணது இத விட எவ்ளோ சுவாரஸ்யமா இருந்துதுன்னு எனக்கு புரிஞ்சுது..தவிர.இந்த கூட்டத்துக்குள்ள ஒருத்தர் ரொம்ப நாளா இந்த கதைகள கேட்டுட்டு இருக்காரு...அவர் பேரு பரத்..அவருக்கு இந்த உண்மை சம்பவம் சமர்ப்பணம்..இப்போ விஷயத்துக்கு போவோம்...

இந்த அண்ணா ஹஜாரே இருக்காருல,ஊழலுக்கு எதிரா சண்டையெல்லாம் போடறாரே, அவரு இப்படி ஊழல் லஞ்சமெல்லாம் எதிர்த்து சண்ட போடணும்னு ஆரம்பிச்சா முதல்ல காதலுக்கு எதிரா தான் சண்ட போடணும்..ஏன்னா இதெல்லாம் அங்க இருந்து தான் முதல்ல ஆரம்பிக்குது.. ஏரியால சின்ன பசங்கள மிரட்டி அல்லது சாக்லேட் கொடுத்து அந்த அக்கா பேர கண்டு பிடிடா, எந்த ஸ்கூல் டா, எப்போ டா ட்யுஷன் போவாங்க..இப்படின்னு அது ஆரம்பிக்கும்..(பால் மனம் மாறா பாலகனான என்னையும் இப்படி ஒரு 2 பேர் யூஸ் பண்ணி இருக்காங்க.). +2  படிக்கும் போது நான் படிக்கிற அதே டியூஷன் செண்டர்ல நம்ம ஆளும் படிச்சாங்க(அவங்க +1 .கதைல பல ப்ளஸ்கள் இருக்கும் போலருக்கே..), அப்போ பேர கண்டுபிக்க `பத்து ரூபா` கொடுத்து ஒரு 5 ஸ்டார் சாக்லேட் வாங்கி கொடுத்து (எவ்ளோ பெரிய அமௌன்ட்) `அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது பேர கேட்டுட்டு வந்து என் கிட்ட சொல்டா` அப்படின்னு எங்க தெருல இருக்குற என் பேரையே கொண்ட ஒருத்தன நான் நியமிச்சேன்(அதுக்கே அவன்  2 நாள் எடுத்துகிட்டான்)...அப்போ விளையாட்டா ஆரம்பிச்சது தான்.இது நடந்தது 2001 ல..இன் பிட்வீன் நான் காலேஜ் சேர்ந்து படிப்புல (ஆஹா..) கொஞ்சம் பிஸி ஆயிட்டேன்..அவங்க +2 ...எப்படி இருந்துருப்பாங்கன்னு சொல்லவே வேணாம்..

 2002  அப்போ ஆரம்பிச்சதது ஏழரை..படிப்புல பிஸி ஆனேனே அப்படியே பிசியாவே இருந்துருக்கலாம்..2 பேரும் ஒரே காமனான பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணி பஸ் ஏற வேண்டிய காட்டாயதுக்கு ஆளானோம்.10 ரூபா செலவு பண்ணி பேரெல்லாம் கண்டு பிடிச்சோமே அதுக்காகவாவது கொஞ்ச நாள் பாலோ பண்ணுவோம் அப்படின்னு யாருக்கும் தெரியாம எனக்கு நானே சபதம்  போட்டேன்..வழக்கம் போல பின்னாடி சுத்தும்போது ஏற்படும் நிராகரிப்பு, கண்டுக்காம போவது, அவமானம், வேண்டுமென்றே சக `மாணவ`நண்பர்களுடன் பேசுவது இப்படின்னு எனக்கு ரத்த கொதிப்பு வர அளவுக்கான செய்கைகள் ஜாஸ்தியா இருந்துது.நானும் என் பங்குக்கு பஸ் ஸ்டாண்ட்ல சாட்டைல தன்னையே அடிசிகிட்டு கால்ல விழுந்து பிட்சை எடுக்குற சிறுமிக்கு 2 ரூபா அட்வான்ஸ் லஞ்சம் கொடுத்து `அந்த அக்கா கால்ல விழுந்து, சாட்டையால அடிச்சிட்டே பிச்சை கேளு, அவங்க காசு கொடுத்தாலும் வாங்க கூடாது, நீ அப்படி பண்ணா,நாங்க உனக்கு புது 5 ரூபா காயின் தரோம்`அப்படின்னு சொல்லி,, அந்த காரியத்த கச்சிதமா முடிச்ச அந்த பொண்ணுக்கு சொன்ன காச கொடுக்காம ரன்னிங்க்ல பஸ்ல ஏறி நாங்க எஸ்கேப் ஆகி போக, நம்ம ஆளு அங்கேயே அழ, பஸ் ஸ்டாண்ட்ல நின்ன அத்தன பேரும் அத பாக்க அந்த ரணகள காமடிய நினைச்சா..(வேண்டாம் நினைக்க வேண்டாம்..)...`ஏன் டா இப்படி பண்றீங்க...உங்களால என்னால நிம்மதியா பஸ் ஏற முடில டா...நாளைல இருந்து நான் வேற பஸ் ஸ்டாண்டுக்கு போறேன் டா` அப்படின்னு எங்க கிட்ட அவங்க முறை இட, அதுக்கு நான் `நீ இமய மலைக்கே போய் பஸ் ஏறினாலும் நாங்க அங்க இருப்போம்` அப்படின்னு பஞ்ச் ரிப்ளை கொடுதேன்..இது மாதிரி தி.நகருக்கு துரத்தி கொண்டு பின் செல்வது, பஸ்சுக்குள் டிக்கெட் எடுக்க கொடத்த காசை லபக்கி கொள்வது...அப்படின்னு அவங்களுக்கு சளைக்காம நம்ம பெர்பார்மன்ஸ் இருந்துது..இத்தன கொலைவெறிக்கு நடுவுலயும் அவங்க என் கூட பேச ஆரம்பிச்சாங்க..(நண்பன் புகழுக்கு நன்றி..) பேச ஆரம்பிச்ச உடனேயே அம்மா கிட்ட சொன்னேன்..`அம்மா, ஒரு அய்யர் பொண்ண உஷார் பண்ண போறேன் மா` நீண்ட நேர அமைதிக்கு பின் வந்த பதில் `எனக்கு தெரியாதுப்பா,இனிமே  நீயாச்சு உங்கபாவாச்சு...என்ன இதுல இழுக்காதீங்க`. என்னோட மிக நெருங்கிய நண்பனான சுரேஷுக்கு இந்த விஷயத்த நான் சொன்னபோது...எங்க உரையாடல்..
அவன்.`டேய் அவ என் பிரெண்டு தங்கச்சி டா.` பதில் `உன் பிரெண்டு தானே டா அவன், எனக்கு இல்லையே..``மறுபடியும் என்ன மடக்க பாத்தான்  ``டேய் அவ ஹைட்டா இருக்கா டா``..பதில், ``நின்னு பாத்துட்டேன் டா ஒரு 4 , 5 சென்டிமீட்டர் கம்மியா தான் டா இருக்கா``..சுரேஷ்`` அவ அய்யர் பொண்ணுடா``... -பதில்-``இது தெரியாமயாடா நான் பின்னாடி சுத்திட்டு இருப்பேன்``.அவன் கடைசி கேள்விய மட்டும் கொஞ்சம் கஷ்டமா,கோபமா கேட்டான்...`` டேய்.......அவ அழகா இருக்கா டா......`` கொஞ்சம் அமைதியா இருந்து நான் சொன்ன பதில்.`` நான் செலக்ட் பண்ணதுக்கான முக்கியமான தகுதியே அதான் டா..``காலைல 7 . 30 & மதியம் 2 . 30 அப்படின்னு காலேஜ் போகும்போதும், வரும் போதும் வெயிட் பண்றது, ஒண்ணா வீட்டுக்கு நடந்து வரது,அத அப்படியே எங்கப்பா கிட்ட எவனாவது ஊதி விடறது இப்படி என் வாழ்க்க -  இருக்கா, இல்லையா அப்படின்ற Cliff  Hanger  படத்துல வர ஸ்டாலன்   மாதிரி மாட்டிட்டு தொங்கிட்டு இருந்துது..

இப்படி போயிட்டு வரதே ஒரு வழக்கமா வெச்சு எனக்கு காலேஜ் முடிஞ்சுது, அவங்க பைனல் இயர் வந்தாங்க. இந்த காலைல 7 . 30 & மதியம் 2 . 30 டைமிங்க்ஸ் மட்டும் கண்டின்யு ஆச்சு..நான் வெட்டியா இருக்குறப்பவே அவங்க காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கும் போக ஆரம்பிச்சுடாங்க..காலைல 7 . 30 & மதியம் 2 . 30 டைமிங்க்ஸ்ல ஒரு சின்ன சேன்ஜ்  வந்துது..காலைலயும், சாயந்தரமும் டைம்  7 . 30 ஆச்சு..இப்படியே எத்தன நாள் சைக்கிள உருட்டிகிட்டு பஸ் ஸ்டாண்டுக்கும் வீட்டுக்கும் ட்ரிப் அடிக்கிறது அடுத்த ஸ்டெப்ப எடுத்த வெக்கலாம்னு முடிவு பண்ணேன்..ஆனா எப்படி சொல்றதுன்னு  தைரியம் வரல...சரி அந்த வருஷ முடியறதுக்குள்ள சொல்லிரணும்னு முடிவு பண்ணேன்..அப்படியும் தைரியம் வரலன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சு ஒன்னு கிறிஸ்துமஸ், இல்ல நியூ இயர் இது 2 ல ஒரு நாள சூஸ் பண்ணி கொஞ்சம் தண்ணிய போட்டு தைரியத்த வர வழிச்சு சொல்ல வேண்டியதுன்னு..என் சாவுக்கு நானே தேதி குறிச்சிகிட்டேன்..அந்த நாள் எப்போ வரும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..

இப்போ எங்க ஏரியா கௌன்சிலர் கிட்ட வேலை பாக்குற ஒரு பையன் பஜாஜ் M80 ல ஸ்பீடா நம்ம ஆள இடிச்சு முட்டி கப்ப கழட்டிடான்..ஒரு 15 நாள் பெட் ரெஸ்ட்..எப்படி பாக்குறது,..நாம சும்மா தானே இருக்கோம்..அவங்க வீட்ல வேலைக்கு போய்ட்ட பிறகு போய் பாப்போம், ஆனா வீட்டுக்கு போக தைரியம் இல்ல..இல்லைன்னு சொல்லி நான் நாத்திகம் பேசினாலும்..பக்கத்து தெருவுல அவங்க வீட்டுக்கு நேர்  எதிர்க்க எங்க சொந்த காரங்க வீட்ட வெச்சு எனக்கு உதவி பண்ணினான் ஆண்டவன்.அங்க போய் அவங்கள பாக்குற சாக்குல சிக்னல்ஸ் பாஸ் பண்ணிக்கிட்டோம்..அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு தேறினதும்...தினம் ஒரு துணையோட அவங்க பஸ் ஸ்டான்ட் போக ஆரம்பிச்சாங்க.அந்த துணை லிஸ்ட் ல நானும் ஒருத்தன்..இதுல இன்னொரு முக்கியமான விஷயம் நம்ம வீட்டு எதிர் வீடு எங்க தாத்தா வீடு..அந்த வீடு  எங்க தெருவையும் பக்கத்துக்கு தெருவையும் கனெக்ட் பண்ற அளவுக்கு பெரிசு,ஆனா தாத்தா வீட்டு பின் கேட் எப்பவும் பூட்டியே இருக்கும் இந்த சொந்தக்கரங்கள சாக்கா வெச்சு பின் பக்கமா போய் சுவர் எகிறி குதிச்சு என்னோட கனெக்ஷனுக்கு எந்த இடையூறும் வராம நான் பாத்துகிட்டேன்.. கால்ல பட்ட அடி கொஞ்சம் சுமாரானதும் நானும் கொஞ்சா நாள் அவங்க கூட துணைக்கு போயிட்டு இருந்தேன்..( என் கூட ரொம்ப க்ளோசா இருந்த என் மாமா பையனுக்கு கூட இது வரைக்கும் தெரியாது நான் இதுக்கு தான் எகிறி குதிக்கிரேன்னு...2 , 3  தரம் நான் தூக்காதுல சுய நினைவு இல்லாம எங்க தாத்தா வீட்ல நைட் 11 மணிக்கு சுவர் எகிறி குதிச்சு அடியெல்லாம் வாங்கி இருக்கேன்..)

அக்டோபர் 14 ,மழை பயங்கரமா கொட்டுது.. வழக்கம் போல எகிறி குதிக்கும் படலம், வழக்கம் போல அவங்க வெயிடிங், நான் எப்போவும் போல பில்லா அஜித் மாதிரி டிரஸ் போடாம, ஒரு ரவுண்டு நெக் டி ஷர்டும், 3 /4  ஷார்ட்சும் போட்டுட்டு இருந்தேன்..ஆனா அவங்க எனக்கு நேர் மாறா..தக தகன்னு ஜொலிக்கிற மாதிரி லைட் மஞ்சள் கலர் சாரி, கைல ஒரு குடை, ஹான்ட் பேக், தலைகாணி சைஸ்ல 2  புஸ்தகம் (இதெல்லாம் பாத்த உடனே.தல கிரு கிறுன்னு சுத்த ஆரம்பிச்சுருச்சு..என் கண்ணுக்கு அவங்க வழக்கத்த விட பயங்கர அழகா தெரிஞ்சாங்க..நான் வழியுறத கண்டும் பிடிச்சிட்டாங்க.)..நான் அவங்கள பாத்த உடனே..குடையும், புக்கும் என் கைக்கு வந்தது.. என்ன பாத்து..`எப்படி இருக்கு என்னோட டிரஸ் இன்னைக்கு`...என்னோட பதில்..`இவ்ளோ மழை அடிக்குது ஏன் இந்த கோவிந்தா கலர் டிரஸ் போட்ட`..பொண்ணுங்களுக்கா கண்டு பிடிக்க தெரியாது..அதுக்கு ரிப்ளை..` இல்லையே நீ மொதல்ல அப்படி பாத்த மாதிரி தெரியலையே...`அப்படின்னு அத வெச்சு வெட்டியா பேசி சுமார் ஒரு 300 அடி நடந்து தெரு முனைக்கு வந்து ஆட்டோவ கூப்டாங்க...

அவங்க ஆட்டோல ஏற போற நேரத்துல என் திருவாய் மலர்ந்துச்சு..`` இதுக்கு மேல என்னால சொல்லாம இருக்க  முடியாது..எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு அனேகமா இது உனக்கு முன்னாடியே தெரியும்னு நினைக்கிறேன்....``அந்த பக்கம் மௌனம்....திருப்பியும் நான் `` நானும் ஒரு டேட் குறிச்சு தைரியத்த வரவழைச்சு..அப்போ சொல்ல முடியலைன்னாலும், தண்ணிய போட்டு சொல்லலாம்னு தான் நினைச்சேன்.ஆனா இன்னைக்கு உன்ன பாத்த உடனே..எல்லாம் எகிறிடுச்சு அதான் சொல்லிட்டேன்..``ஆட்டோக்காரர் எங்கள வெறிச்சு பாத்துட்டு இருந்தாரு..நல்ல ஆக்ஷன் சீன் ஒன்னு எதிர்பார்த்துட்டு இருந்தாரு போல..என்னோட பில்டிங் & பேஸ்மென்ட் ரெண்டும் வீக் ஆகிடுச்சு..தடதடன்னு கால்,கையெல்லாம் அதுவா ஆடுது..அந்த பக்க பதில்..``இத சொல்றதுக்கு வேற நேரம், இடம் எதுவும் கிடைக்கலியா உனக்கு ..இப்போ வீட்டுக்கு போ..எதுவா இருந்தாலும் சாயந்தரம் பேசிக்கலாம்..நான் இப்போ ஆபீஸ்க்கு போகணும்`.....``.... ``ஓகே  சாயந்தரம் வரைக்கும் தானே, நான் வெயிட் பண்றேன்``...அப்படின்னு சொல்லிட்டு அவங்கள ஆட்டோ ஏத்திட்டு நான் வீட்டுக்கு நடந்து வந்தேன்...எந்த சுவரையும் எகிறி குதிக்காம.....

1 comment:

  1. i have no idea what you are saying mate, but good job :) looks like a lot of content :)

    ReplyDelete

March 12, 2012

காதலில் சொதப்பியது எப்படி - 1

கடந்த ஒரு 2  மாசமா நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.. ஏன்...காரணம்..இங்க கந்தகிரின்னு ஒருத்தன் அவன் காதல் கதைகள் எழுதி..அத என்ன படிக்க வெச்சு பயங்கரமா இம்சை படுத்திட்டான்..இந்த மாதிரி கதையெல்லாம் படிச்சதுக்கப்புறம்..நான் அப்போ பண்ணது இத விட எவ்ளோ சுவாரஸ்யமா இருந்துதுன்னு எனக்கு புரிஞ்சுது..தவிர.இந்த கூட்டத்துக்குள்ள ஒருத்தர் ரொம்ப நாளா இந்த கதைகள கேட்டுட்டு இருக்காரு...அவர் பேரு பரத்..அவருக்கு இந்த உண்மை சம்பவம் சமர்ப்பணம்..இப்போ விஷயத்துக்கு போவோம்...

இந்த அண்ணா ஹஜாரே இருக்காருல,ஊழலுக்கு எதிரா சண்டையெல்லாம் போடறாரே, அவரு இப்படி ஊழல் லஞ்சமெல்லாம் எதிர்த்து சண்ட போடணும்னு ஆரம்பிச்சா முதல்ல காதலுக்கு எதிரா தான் சண்ட போடணும்..ஏன்னா இதெல்லாம் அங்க இருந்து தான் முதல்ல ஆரம்பிக்குது.. ஏரியால சின்ன பசங்கள மிரட்டி அல்லது சாக்லேட் கொடுத்து அந்த அக்கா பேர கண்டு பிடிடா, எந்த ஸ்கூல் டா, எப்போ டா ட்யுஷன் போவாங்க..இப்படின்னு அது ஆரம்பிக்கும்..(பால் மனம் மாறா பாலகனான என்னையும் இப்படி ஒரு 2 பேர் யூஸ் பண்ணி இருக்காங்க.). +2  படிக்கும் போது நான் படிக்கிற அதே டியூஷன் செண்டர்ல நம்ம ஆளும் படிச்சாங்க(அவங்க +1 .கதைல பல ப்ளஸ்கள் இருக்கும் போலருக்கே..), அப்போ பேர கண்டுபிக்க `பத்து ரூபா` கொடுத்து ஒரு 5 ஸ்டார் சாக்லேட் வாங்கி கொடுத்து (எவ்ளோ பெரிய அமௌன்ட்) `அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது பேர கேட்டுட்டு வந்து என் கிட்ட சொல்டா` அப்படின்னு எங்க தெருல இருக்குற என் பேரையே கொண்ட ஒருத்தன நான் நியமிச்சேன்(அதுக்கே அவன்  2 நாள் எடுத்துகிட்டான்)...அப்போ விளையாட்டா ஆரம்பிச்சது தான்.இது நடந்தது 2001 ல..இன் பிட்வீன் நான் காலேஜ் சேர்ந்து படிப்புல (ஆஹா..) கொஞ்சம் பிஸி ஆயிட்டேன்..அவங்க +2 ...எப்படி இருந்துருப்பாங்கன்னு சொல்லவே வேணாம்..

 2002  அப்போ ஆரம்பிச்சதது ஏழரை..படிப்புல பிஸி ஆனேனே அப்படியே பிசியாவே இருந்துருக்கலாம்..2 பேரும் ஒரே காமனான பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணி பஸ் ஏற வேண்டிய காட்டாயதுக்கு ஆளானோம்.10 ரூபா செலவு பண்ணி பேரெல்லாம் கண்டு பிடிச்சோமே அதுக்காகவாவது கொஞ்ச நாள் பாலோ பண்ணுவோம் அப்படின்னு யாருக்கும் தெரியாம எனக்கு நானே சபதம்  போட்டேன்..வழக்கம் போல பின்னாடி சுத்தும்போது ஏற்படும் நிராகரிப்பு, கண்டுக்காம போவது, அவமானம், வேண்டுமென்றே சக `மாணவ`நண்பர்களுடன் பேசுவது இப்படின்னு எனக்கு ரத்த கொதிப்பு வர அளவுக்கான செய்கைகள் ஜாஸ்தியா இருந்துது.நானும் என் பங்குக்கு பஸ் ஸ்டாண்ட்ல சாட்டைல தன்னையே அடிசிகிட்டு கால்ல விழுந்து பிட்சை எடுக்குற சிறுமிக்கு 2 ரூபா அட்வான்ஸ் லஞ்சம் கொடுத்து `அந்த அக்கா கால்ல விழுந்து, சாட்டையால அடிச்சிட்டே பிச்சை கேளு, அவங்க காசு கொடுத்தாலும் வாங்க கூடாது, நீ அப்படி பண்ணா,நாங்க உனக்கு புது 5 ரூபா காயின் தரோம்`அப்படின்னு சொல்லி,, அந்த காரியத்த கச்சிதமா முடிச்ச அந்த பொண்ணுக்கு சொன்ன காச கொடுக்காம ரன்னிங்க்ல பஸ்ல ஏறி நாங்க எஸ்கேப் ஆகி போக, நம்ம ஆளு அங்கேயே அழ, பஸ் ஸ்டாண்ட்ல நின்ன அத்தன பேரும் அத பாக்க அந்த ரணகள காமடிய நினைச்சா..(வேண்டாம் நினைக்க வேண்டாம்..)...`ஏன் டா இப்படி பண்றீங்க...உங்களால என்னால நிம்மதியா பஸ் ஏற முடில டா...நாளைல இருந்து நான் வேற பஸ் ஸ்டாண்டுக்கு போறேன் டா` அப்படின்னு எங்க கிட்ட அவங்க முறை இட, அதுக்கு நான் `நீ இமய மலைக்கே போய் பஸ் ஏறினாலும் நாங்க அங்க இருப்போம்` அப்படின்னு பஞ்ச் ரிப்ளை கொடுதேன்..இது மாதிரி தி.நகருக்கு துரத்தி கொண்டு பின் செல்வது, பஸ்சுக்குள் டிக்கெட் எடுக்க கொடத்த காசை லபக்கி கொள்வது...அப்படின்னு அவங்களுக்கு சளைக்காம நம்ம பெர்பார்மன்ஸ் இருந்துது..இத்தன கொலைவெறிக்கு நடுவுலயும் அவங்க என் கூட பேச ஆரம்பிச்சாங்க..(நண்பன் புகழுக்கு நன்றி..) பேச ஆரம்பிச்ச உடனேயே அம்மா கிட்ட சொன்னேன்..`அம்மா, ஒரு அய்யர் பொண்ண உஷார் பண்ண போறேன் மா` நீண்ட நேர அமைதிக்கு பின் வந்த பதில் `எனக்கு தெரியாதுப்பா,இனிமே  நீயாச்சு உங்கபாவாச்சு...என்ன இதுல இழுக்காதீங்க`. என்னோட மிக நெருங்கிய நண்பனான சுரேஷுக்கு இந்த விஷயத்த நான் சொன்னபோது...எங்க உரையாடல்..
அவன்.`டேய் அவ என் பிரெண்டு தங்கச்சி டா.` பதில் `உன் பிரெண்டு தானே டா அவன், எனக்கு இல்லையே..``மறுபடியும் என்ன மடக்க பாத்தான்  ``டேய் அவ ஹைட்டா இருக்கா டா``..பதில், ``நின்னு பாத்துட்டேன் டா ஒரு 4 , 5 சென்டிமீட்டர் கம்மியா தான் டா இருக்கா``..சுரேஷ்`` அவ அய்யர் பொண்ணுடா``... -பதில்-``இது தெரியாமயாடா நான் பின்னாடி சுத்திட்டு இருப்பேன்``.அவன் கடைசி கேள்விய மட்டும் கொஞ்சம் கஷ்டமா,கோபமா கேட்டான்...`` டேய்.......அவ அழகா இருக்கா டா......`` கொஞ்சம் அமைதியா இருந்து நான் சொன்ன பதில்.`` நான் செலக்ட் பண்ணதுக்கான முக்கியமான தகுதியே அதான் டா..``காலைல 7 . 30 & மதியம் 2 . 30 அப்படின்னு காலேஜ் போகும்போதும், வரும் போதும் வெயிட் பண்றது, ஒண்ணா வீட்டுக்கு நடந்து வரது,அத அப்படியே எங்கப்பா கிட்ட எவனாவது ஊதி விடறது இப்படி என் வாழ்க்க -  இருக்கா, இல்லையா அப்படின்ற Cliff  Hanger  படத்துல வர ஸ்டாலன்   மாதிரி மாட்டிட்டு தொங்கிட்டு இருந்துது..

இப்படி போயிட்டு வரதே ஒரு வழக்கமா வெச்சு எனக்கு காலேஜ் முடிஞ்சுது, அவங்க பைனல் இயர் வந்தாங்க. இந்த காலைல 7 . 30 & மதியம் 2 . 30 டைமிங்க்ஸ் மட்டும் கண்டின்யு ஆச்சு..நான் வெட்டியா இருக்குறப்பவே அவங்க காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கும் போக ஆரம்பிச்சுடாங்க..காலைல 7 . 30 & மதியம் 2 . 30 டைமிங்க்ஸ்ல ஒரு சின்ன சேன்ஜ்  வந்துது..காலைலயும், சாயந்தரமும் டைம்  7 . 30 ஆச்சு..இப்படியே எத்தன நாள் சைக்கிள உருட்டிகிட்டு பஸ் ஸ்டாண்டுக்கும் வீட்டுக்கும் ட்ரிப் அடிக்கிறது அடுத்த ஸ்டெப்ப எடுத்த வெக்கலாம்னு முடிவு பண்ணேன்..ஆனா எப்படி சொல்றதுன்னு  தைரியம் வரல...சரி அந்த வருஷ முடியறதுக்குள்ள சொல்லிரணும்னு முடிவு பண்ணேன்..அப்படியும் தைரியம் வரலன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சு ஒன்னு கிறிஸ்துமஸ், இல்ல நியூ இயர் இது 2 ல ஒரு நாள சூஸ் பண்ணி கொஞ்சம் தண்ணிய போட்டு தைரியத்த வர வழிச்சு சொல்ல வேண்டியதுன்னு..என் சாவுக்கு நானே தேதி குறிச்சிகிட்டேன்..அந்த நாள் எப்போ வரும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..

இப்போ எங்க ஏரியா கௌன்சிலர் கிட்ட வேலை பாக்குற ஒரு பையன் பஜாஜ் M80 ல ஸ்பீடா நம்ம ஆள இடிச்சு முட்டி கப்ப கழட்டிடான்..ஒரு 15 நாள் பெட் ரெஸ்ட்..எப்படி பாக்குறது,..நாம சும்மா தானே இருக்கோம்..அவங்க வீட்ல வேலைக்கு போய்ட்ட பிறகு போய் பாப்போம், ஆனா வீட்டுக்கு போக தைரியம் இல்ல..இல்லைன்னு சொல்லி நான் நாத்திகம் பேசினாலும்..பக்கத்து தெருவுல அவங்க வீட்டுக்கு நேர்  எதிர்க்க எங்க சொந்த காரங்க வீட்ட வெச்சு எனக்கு உதவி பண்ணினான் ஆண்டவன்.அங்க போய் அவங்கள பாக்குற சாக்குல சிக்னல்ஸ் பாஸ் பண்ணிக்கிட்டோம்..அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு தேறினதும்...தினம் ஒரு துணையோட அவங்க பஸ் ஸ்டான்ட் போக ஆரம்பிச்சாங்க.அந்த துணை லிஸ்ட் ல நானும் ஒருத்தன்..இதுல இன்னொரு முக்கியமான விஷயம் நம்ம வீட்டு எதிர் வீடு எங்க தாத்தா வீடு..அந்த வீடு  எங்க தெருவையும் பக்கத்துக்கு தெருவையும் கனெக்ட் பண்ற அளவுக்கு பெரிசு,ஆனா தாத்தா வீட்டு பின் கேட் எப்பவும் பூட்டியே இருக்கும் இந்த சொந்தக்கரங்கள சாக்கா வெச்சு பின் பக்கமா போய் சுவர் எகிறி குதிச்சு என்னோட கனெக்ஷனுக்கு எந்த இடையூறும் வராம நான் பாத்துகிட்டேன்.. கால்ல பட்ட அடி கொஞ்சம் சுமாரானதும் நானும் கொஞ்சா நாள் அவங்க கூட துணைக்கு போயிட்டு இருந்தேன்..( என் கூட ரொம்ப க்ளோசா இருந்த என் மாமா பையனுக்கு கூட இது வரைக்கும் தெரியாது நான் இதுக்கு தான் எகிறி குதிக்கிரேன்னு...2 , 3  தரம் நான் தூக்காதுல சுய நினைவு இல்லாம எங்க தாத்தா வீட்ல நைட் 11 மணிக்கு சுவர் எகிறி குதிச்சு அடியெல்லாம் வாங்கி இருக்கேன்..)

அக்டோபர் 14 ,மழை பயங்கரமா கொட்டுது.. வழக்கம் போல எகிறி குதிக்கும் படலம், வழக்கம் போல அவங்க வெயிடிங், நான் எப்போவும் போல பில்லா அஜித் மாதிரி டிரஸ் போடாம, ஒரு ரவுண்டு நெக் டி ஷர்டும், 3 /4  ஷார்ட்சும் போட்டுட்டு இருந்தேன்..ஆனா அவங்க எனக்கு நேர் மாறா..தக தகன்னு ஜொலிக்கிற மாதிரி லைட் மஞ்சள் கலர் சாரி, கைல ஒரு குடை, ஹான்ட் பேக், தலைகாணி சைஸ்ல 2  புஸ்தகம் (இதெல்லாம் பாத்த உடனே.தல கிரு கிறுன்னு சுத்த ஆரம்பிச்சுருச்சு..என் கண்ணுக்கு அவங்க வழக்கத்த விட பயங்கர அழகா தெரிஞ்சாங்க..நான் வழியுறத கண்டும் பிடிச்சிட்டாங்க.)..நான் அவங்கள பாத்த உடனே..குடையும், புக்கும் என் கைக்கு வந்தது.. என்ன பாத்து..`எப்படி இருக்கு என்னோட டிரஸ் இன்னைக்கு`...என்னோட பதில்..`இவ்ளோ மழை அடிக்குது ஏன் இந்த கோவிந்தா கலர் டிரஸ் போட்ட`..பொண்ணுங்களுக்கா கண்டு பிடிக்க தெரியாது..அதுக்கு ரிப்ளை..` இல்லையே நீ மொதல்ல அப்படி பாத்த மாதிரி தெரியலையே...`அப்படின்னு அத வெச்சு வெட்டியா பேசி சுமார் ஒரு 300 அடி நடந்து தெரு முனைக்கு வந்து ஆட்டோவ கூப்டாங்க...

அவங்க ஆட்டோல ஏற போற நேரத்துல என் திருவாய் மலர்ந்துச்சு..`` இதுக்கு மேல என்னால சொல்லாம இருக்க  முடியாது..எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு அனேகமா இது உனக்கு முன்னாடியே தெரியும்னு நினைக்கிறேன்....``அந்த பக்கம் மௌனம்....திருப்பியும் நான் `` நானும் ஒரு டேட் குறிச்சு தைரியத்த வரவழைச்சு..அப்போ சொல்ல முடியலைன்னாலும், தண்ணிய போட்டு சொல்லலாம்னு தான் நினைச்சேன்.ஆனா இன்னைக்கு உன்ன பாத்த உடனே..எல்லாம் எகிறிடுச்சு அதான் சொல்லிட்டேன்..``ஆட்டோக்காரர் எங்கள வெறிச்சு பாத்துட்டு இருந்தாரு..நல்ல ஆக்ஷன் சீன் ஒன்னு எதிர்பார்த்துட்டு இருந்தாரு போல..என்னோட பில்டிங் & பேஸ்மென்ட் ரெண்டும் வீக் ஆகிடுச்சு..தடதடன்னு கால்,கையெல்லாம் அதுவா ஆடுது..அந்த பக்க பதில்..``இத சொல்றதுக்கு வேற நேரம், இடம் எதுவும் கிடைக்கலியா உனக்கு ..இப்போ வீட்டுக்கு போ..எதுவா இருந்தாலும் சாயந்தரம் பேசிக்கலாம்..நான் இப்போ ஆபீஸ்க்கு போகணும்`.....``.... ``ஓகே  சாயந்தரம் வரைக்கும் தானே, நான் வெயிட் பண்றேன்``...அப்படின்னு சொல்லிட்டு அவங்கள ஆட்டோ ஏத்திட்டு நான் வீட்டுக்கு நடந்து வந்தேன்...எந்த சுவரையும் எகிறி குதிக்காம.....

1 comment:

  1. i have no idea what you are saying mate, but good job :) looks like a lot of content :)

    ReplyDelete