July 21, 2016

முதல் நாள் முதல் காட்சி

இது ஒரு விபரீதமான, வித்யாசமான நோய். ஏதாவது புது படம் ரிலீஸ் ஆகும் போது அத முதல்ல நாம பாத்துட்டு, நான் முதல் நாள் முதல் ஷோ பாத்துட்டேன்ன்னு சொல்ற பெருமை, சொல்லி புரிவதில்லை. 2001ல் தீனா படத்துல அஜித் ரசிகன்ற பேர்ல ஆரம்பிச்சது, தொடர்ச்சியா அஜித் படம், கமல் படம், மணிரத்னம் படம், ஷங்கர் படம்னு முதல் நாள் பாக்குற வியாதி அப்படியே விரிவடைஞ்சுது. வகை தொகை இல்லாம சூர்யா நடிச்ச ஸ்ரீ , உன்னை நினைத்து, பாண்டவர் பூமி, Die Another Day, புன்னகை தேசம் இப்படின்னு ஏன் பாக்குறோம் எதுக்கு பாக்குறோம்னு தெரியாம 1st day 1st Show மோகம் தலைவிரிச்சு ஆடுச்சு.  நடுவுல ஆழவார், ரெட், ஆஞ்சநேயா, ஜி போன்ற அஜித் காவிய படைப்புகளும் அடங்கும்.

மெது மெதுவா, வேலை மற்றும் மற்ற கேளிக்கைகளில் கவனம் இப்படி சிதறினதால இந்த முதல் நாள் முதல் காட்சி மோகம் கொஞ்சமா குறைஞ்சுது. முதல் நாள் நைட் ஷோ, அல்லது இரண்டாவது, மூன்றாவது நாட்களில் பார்ப்பது அப்படி குறைஞ்சு இன்னைக்கு ஊரே பத்திட்டு எரியுற கபாலி படத்தை ஆறாவது நாள் தான் பாக்க போரேன். 

போன டிசம்பர்ல சென்னைல வெள்ளம் வந்து சாப்பாடு தண்ணி இல்ல, வேற வழி எதுவும் இல்லாதப்போ இந்த 10 ரூபா பால் பாக்கெட்லாம் 50 ரூபா வித்த மாதிரி இந்த கபாலி டிக்கெட் ஏடா குடமான ரேட்ல விக்குது. 2008ல ஜூன் 13, வெள்ளிக்கிழமை  தசாவதாரம் ரிலீஸ். அன்னைக்கு சாயந்தரம் கொடைக்கானல் போக பிளான் போட்டாச்சு. அதுக்காக வியாழக்கிழமை ப்ரெவீவ் ஷோவ வெற்றி தியேட்டர் ஷட்டர்ல மண்டைல அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட 200 ரூபா கொடுத்த பாத்தா மன தைரியம் இப்போ இல்ல (2008 ல 200 ரூபா டிக்கெட் விலை ஜாஸ்தி தான், 2010 ல எந்திரனுக்கே 150 தான் அதுவும் 2ஆவது நாள் .)

இப்போ புதுசா இன்னொரு ட்ரெண்டும் இருக்கு படம் ரிலீஸ் ஆகி அந்த 2,3 நாள்ல பாக்கலைன்னா நம்ம தற்கொலை பண்ணி செத்து போக சொல்வாங்க போலருக்கு. சமீபத்துல இந்த பாஹுபலி படத்துக்கு அந்த மாதிரி பில்ட் அப் கொடுத்தாங்க. அதையே தான் இப்போவும் கபாலிக்கு நடக்குது. எப்போ பாத்தாலும் படம் தான். முதல் நாள் தவிர்த்து அடுத்தடுத்த நாட்கள்ல பாக்குறவங்களுக்கும் ரஜினி முகத்தை தான் காட்ட போறாரு, முதுகை இல்ல.

இதுக்கு நடுவுல மழை வெள்ளத்துல ரஜினி சென்னைக்கு என்ன பண்ணாரு, அவர் படத்தை தியேட்டர்ல பாக்காதீங்க டவுன்லோட் பண்ணி பாருங்கன்னு ஒரு குரூப் சொல்லுது. ஏன் டா டேய்...மழை வெள்ளம் வந்தா காப்பாத்துறது ரஜினியோட கடமையா, அரசாங்கத்தோட கடமையா. அப்படியாப்பட்ட  அரசாங்கத்தையே ஒட்டு போட்டு திருப்பி ஆள  வெச்சுருக்கீங்க. இஷ்டம், வசதி , விருப்பம் இருந்தா தியேட்டர்ல  காசு கொடுத்து பாரு. இல்லையா ``திரைக்கு வந்து சில மாதங்களே ஆன`` அப்படின்னு ஜெயா டிவில  போடுவான் அப்போ பாரு. அத விட்டு உன்னோட திருட்டு தனத்தை இன்னொருத்தன செய்ய சொல்லாத.

இந்த மாதிரி நேரத்துல தியேட்டர் காரங்க இதை மாதிரி அநியாய விலைல டிக்கெட் கொடுக்கிறத அரசாங்கம் கட்டுப்படுத்தணும்னு சொல்றாங்க, பண்டிகை காலங்கள் ஆம்னி பஸ் டிக்கெட், பருப்பு விலை , தக்காளி விலை எல்லாம் ஏகபோகமா ஏறும்போது கேக்காத அரசாங்கமா இதை கேக்க போகுது...அவங்க தான் படத்தையே ரிலீஸ் பண்றாங்க..

இருக்கிறவன் காச கொடுத்து பாரு...இல்லாதவன் கொஞ்சம் வெயிட் பண்ணி 2,3 நாள் கழிச்சு பாரு அதுவும் இஷ்டம் இருந்தா.....ஒரு குடியும் முழுகாது..நல்லதே நடக்கட்டும்




July 21, 2016

முதல் நாள் முதல் காட்சி

இது ஒரு விபரீதமான, வித்யாசமான நோய். ஏதாவது புது படம் ரிலீஸ் ஆகும் போது அத முதல்ல நாம பாத்துட்டு, நான் முதல் நாள் முதல் ஷோ பாத்துட்டேன்ன்னு சொல்ற பெருமை, சொல்லி புரிவதில்லை. 2001ல் தீனா படத்துல அஜித் ரசிகன்ற பேர்ல ஆரம்பிச்சது, தொடர்ச்சியா அஜித் படம், கமல் படம், மணிரத்னம் படம், ஷங்கர் படம்னு முதல் நாள் பாக்குற வியாதி அப்படியே விரிவடைஞ்சுது. வகை தொகை இல்லாம சூர்யா நடிச்ச ஸ்ரீ , உன்னை நினைத்து, பாண்டவர் பூமி, Die Another Day, புன்னகை தேசம் இப்படின்னு ஏன் பாக்குறோம் எதுக்கு பாக்குறோம்னு தெரியாம 1st day 1st Show மோகம் தலைவிரிச்சு ஆடுச்சு.  நடுவுல ஆழவார், ரெட், ஆஞ்சநேயா, ஜி போன்ற அஜித் காவிய படைப்புகளும் அடங்கும்.

மெது மெதுவா, வேலை மற்றும் மற்ற கேளிக்கைகளில் கவனம் இப்படி சிதறினதால இந்த முதல் நாள் முதல் காட்சி மோகம் கொஞ்சமா குறைஞ்சுது. முதல் நாள் நைட் ஷோ, அல்லது இரண்டாவது, மூன்றாவது நாட்களில் பார்ப்பது அப்படி குறைஞ்சு இன்னைக்கு ஊரே பத்திட்டு எரியுற கபாலி படத்தை ஆறாவது நாள் தான் பாக்க போரேன். 

போன டிசம்பர்ல சென்னைல வெள்ளம் வந்து சாப்பாடு தண்ணி இல்ல, வேற வழி எதுவும் இல்லாதப்போ இந்த 10 ரூபா பால் பாக்கெட்லாம் 50 ரூபா வித்த மாதிரி இந்த கபாலி டிக்கெட் ஏடா குடமான ரேட்ல விக்குது. 2008ல ஜூன் 13, வெள்ளிக்கிழமை  தசாவதாரம் ரிலீஸ். அன்னைக்கு சாயந்தரம் கொடைக்கானல் போக பிளான் போட்டாச்சு. அதுக்காக வியாழக்கிழமை ப்ரெவீவ் ஷோவ வெற்றி தியேட்டர் ஷட்டர்ல மண்டைல அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட 200 ரூபா கொடுத்த பாத்தா மன தைரியம் இப்போ இல்ல (2008 ல 200 ரூபா டிக்கெட் விலை ஜாஸ்தி தான், 2010 ல எந்திரனுக்கே 150 தான் அதுவும் 2ஆவது நாள் .)

இப்போ புதுசா இன்னொரு ட்ரெண்டும் இருக்கு படம் ரிலீஸ் ஆகி அந்த 2,3 நாள்ல பாக்கலைன்னா நம்ம தற்கொலை பண்ணி செத்து போக சொல்வாங்க போலருக்கு. சமீபத்துல இந்த பாஹுபலி படத்துக்கு அந்த மாதிரி பில்ட் அப் கொடுத்தாங்க. அதையே தான் இப்போவும் கபாலிக்கு நடக்குது. எப்போ பாத்தாலும் படம் தான். முதல் நாள் தவிர்த்து அடுத்தடுத்த நாட்கள்ல பாக்குறவங்களுக்கும் ரஜினி முகத்தை தான் காட்ட போறாரு, முதுகை இல்ல.

இதுக்கு நடுவுல மழை வெள்ளத்துல ரஜினி சென்னைக்கு என்ன பண்ணாரு, அவர் படத்தை தியேட்டர்ல பாக்காதீங்க டவுன்லோட் பண்ணி பாருங்கன்னு ஒரு குரூப் சொல்லுது. ஏன் டா டேய்...மழை வெள்ளம் வந்தா காப்பாத்துறது ரஜினியோட கடமையா, அரசாங்கத்தோட கடமையா. அப்படியாப்பட்ட  அரசாங்கத்தையே ஒட்டு போட்டு திருப்பி ஆள  வெச்சுருக்கீங்க. இஷ்டம், வசதி , விருப்பம் இருந்தா தியேட்டர்ல  காசு கொடுத்து பாரு. இல்லையா ``திரைக்கு வந்து சில மாதங்களே ஆன`` அப்படின்னு ஜெயா டிவில  போடுவான் அப்போ பாரு. அத விட்டு உன்னோட திருட்டு தனத்தை இன்னொருத்தன செய்ய சொல்லாத.

இந்த மாதிரி நேரத்துல தியேட்டர் காரங்க இதை மாதிரி அநியாய விலைல டிக்கெட் கொடுக்கிறத அரசாங்கம் கட்டுப்படுத்தணும்னு சொல்றாங்க, பண்டிகை காலங்கள் ஆம்னி பஸ் டிக்கெட், பருப்பு விலை , தக்காளி விலை எல்லாம் ஏகபோகமா ஏறும்போது கேக்காத அரசாங்கமா இதை கேக்க போகுது...அவங்க தான் படத்தையே ரிலீஸ் பண்றாங்க..

இருக்கிறவன் காச கொடுத்து பாரு...இல்லாதவன் கொஞ்சம் வெயிட் பண்ணி 2,3 நாள் கழிச்சு பாரு அதுவும் இஷ்டம் இருந்தா.....ஒரு குடியும் முழுகாது..நல்லதே நடக்கட்டும்