August 19, 2011

உடல் ஆராய்ச்சிக்கு...உயிர் உலகநாயகனுக்கு..

வணக்கம்,

இந்த தலைப்ப பாத்த உடனே தெரிஞ்சுருக்கும்...இது உலக நாயகன் கமல்பத்தின பதிவு தான், அவர பத்தி என்ன எழுதுறது? ...புடிக்குதோ புடிக்கலையோஅவர பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு...அம்பது வருஷம் திரை உலகில்இருக்கிறது, நாலு தேசய விருது வாங்கினது, நெறைய படத்த ஆஸ்கருக்கு அனுப்பினது அப்படின்னு நெறைய பேருக்கு நெறைய விஷயம் தெரியும், இருந்தாலும் கமல் பத்தி எழுதனும்ன்ற ஆர்வம்...இத எழுததூண்டுச்சு...கூடுமான வரைக்கும் நீங்க கேள்வி பட்ட விஷயத்த எழுதாம, புதுசா இருக்குற மாதிரி பாத்துக்குறேன்...அவர் ரசிகன் அப்படின்றதால புடிச்ச விஷயம்தான் எழுதனும்னு இல்ல, பிடிக்காத விஷயமும் எழுதுவேன்..அபூர்வ ராகங்கள்படத்துல இருந்து ஆளவந்தான் வரை...சப்பாணி முதல் சப்புன்னு முத்தம்கொடுத்தது வரைன்னு ரொம்ப யோசிச்சு...அப்புறமா மேல இருக்குற பேறவெச்சேன்...
 
நினைவு தெரிஞ்சு, நான் முதல் முதலா தியேட்டர்ல போய் பார்த்த படம், சிகப்புரோஜாக்கள்...அதனால எனக்கு பரிச்சயமான முதல் நடிகர் கமல் தான்..சின்னவயசுல எல்லாருக்கும் புடிச்ச சார்லி சாப்ளின் வேஷத்துல வந்ததுனாலபுன்னகை மன்னன் படத்துல இருந்து பிடிச்ச நடிகரா ஆனார் கமல், பிற்பாடுஎல்லாருக்கும் புடிச்ச நாயகன்....ஹீரோன்னாலே எல்லாரையும் அடிச்சுபோட்டு வீரா வேசமா நடந்து வரத மட்டுமே நான் பாத்துருக்கேன்...ஆனாஜெயில்ல போலீஸ் கிட்ட அடி வாங்கி ரத்த களரியா பாத்ததும் ஏன் இந்தஹீரோ மட்டும் அடிவாங்கிட்டு வராரு அப்படின்னு என் பிஞ்சு மூளைக்குள்ளவந்த சந்தேகம் தான் என்ன அப்போ கமல் பின்னாடி ஓட வெச்சுது...தொடர்ந்துஇன்னொரு அதிர்சிகரமான ஜெயில பாத்தேன் மகாநதி படத்துல.. இப்படி தான்இருக்குமான்னு பாத்த எனக்கு அதிர்ச்சி...அப்படியே விடாம தொடர்ச்சியா அவர்படத்த பாத்து இந்தியன் படத்துல இருந்து கமல் வெறியனா ஆனேன்...இப்போவரைக்கும் அப்படி தான் ( ஆனா இந்த மன்மதன் அம்பு....என்னாலையே உக்காரமுடில)..
 
இப்படி சின்ன வயசுல இருந்து பாத்த சாப்ளின் செல்லப்பாவா, இந்தியன்சேனாபதியா, அப்புவா, ரங்கராஜ நம்பியா, ராகவனா, நல்ல சிவம்னு இப்படி பலரூபத்துல பாத்து அழுது இருக்கேன்...
இப்போ இருக்குற நடிகர்கள் நற்பணி மன்றம் அப்படின்ற பேர்ல ரசிகர்மன்றங்கள் நடத்தி தங்களோட அரசியல் ஆசைக்கு  உபயோகபடுத்திக்குறாங்க...ஆனா உச்சத்துல இருக்கும்போது ( 1986) தன்னோட ரசிகர்மன்றங்கள நற்பணி மன்றமா மாத்தி ...அரசியல் ஆசை இல்லாமஉண்மையிலேயே நற்பணி செய்யுறது இவர தான் இருக்கும். சினிமா தவிரமையம்` அப்படின்ற இலக்கிய பத்திரிகை நடத்தினது எத்தன பேருக்குதெரியும்னு தெரில..பரதம் கத்துகிட்டதால இயல்பா வந்த உடல் நளினத்தமாத்த கத்துகிட்ட கராத்தே,படத்துல பாடுறதுக்கு திரு.பால முரளி கிருஷ்ணா , குன்னகுடி வைத்தியநாதன் கிட்ட கத்துகிட்ட பாட்டும் வயலினும் இப்போவும்அவருக்கு உதவுது.. கடவுள பத்தின கொள்கைகள் எனக்கும் அவருக்கும்ஒன்னு அப்படீன்ற விஷயமும்..( இவரு இப்படி தான் எனக்கு தெரியருதுக்குமுன்னாடியே நான் அப்படி தான்...புரிஞ்சுதா....), பெரியார் பின்பற்றுதலும்பிடிக்க  காரணங்களுள் ஒன்று...ஆனால்........ 
`
பிடிக்காத பல விஷயங்களும் இருக்கு...  1974   19 வயசுல இவள தான் நான்கல்யானம பண்ணிக்க போரேன்னு அடம் பிடிச்சு, `இப்போ தான்டா நீசினிமாவுக்கு வந்துருக்க  உடனே கல்யாணம் வேணாம் டா` அப்படின்னுஅவங்கம்மா சொன்னதால அப்போ கல்யாணம் பண்ணாம 4 வருஷம் கழிச்சு 1978 திருமணம் செஞ்சுக்கிட்டாறு. அப்புறம் சரிகாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ சொல்றாரு திருமண உறவுல நம்பிக்கை இல்லைன்னு..இது மாதிரி இன்னும் நெறைய இருக்கு...தெளிவா பேசாதது, தமிழ் படத்துல ஒரு நாலஞ்சு மொழி பேச வெக்குறது, கட் பண்ணுவாங்கன்னு, எதிர்பாங்கான்னு தெரிஞ்சும் சர்ச்சைக்குரிய விஷயங்கள படத்துல வெக்குறது.. எந்தளவு இப்போ தமிழ்சினிமா முன்னாடி இருக்க அவர புகழ்ந்து   தள்ரோமோ, ஓரளவு தமிழ் சினிமா  குட்டி சுவர் ஆனதுக்கும் அவர காரணமா சொல்லலாம்..தமிழ் என் மூச்சு சொல்ற அவரால அவர் பொண்ணுங்களுக்கு தமிழ் உச்சறிப்ப சரியா  சொல்லி கொடுக்க முடியல, கேட்டா தனி மனித சுதந்திரத்துல தலையிட விரும்பலம்பாறு..
 
 உனக்குள்ள உலாத்திட்டு இருக்க  மிருகம் தான் எனக்குள்ள தூங்கிட்டுஇருக்குனு அவர் எழுதின வசனத்த எல்லா எடத்துலயும் எல்லாரும்உபயோகிக்க ஆரம்பிச்சுடாங்க..அவருக்குள இருக்குற அந்த மிருகம்முழிசுகிட்டா அவர் நடிக்கிற, இயக்குர படத்த தயாரிக்கிற தயாரிப்பாளர் ரொம்பபாடு படுவாங்க...தாணு ஒரு சிறந்த உதாரணம்..இந்தியால இருக்குற தலைசிறந்த நடிகர்கள் பட்டியல்ல இருக்குற ஒருத்தரோட படங்கள் வெளியிட சர்மாபடுவதும், ஆரம்ப நிலையிலேயே நின்னு போவாதும் கமல் ஒருத்தருக்கு தான் நடக்கும், அதுக்கும் கமலுக்குள்ள இருக்க அந்த மிருகம் தான் காரணம்...
 
எதையும் ஒளிவு மறைவில்லாம பேசுறது, தன மனசுக்கு பிடிச்சத செய்றதுஓரளவாவது தமிழ் சினிமாவ முன்னேதனும்னு நினைக்கிறது, சம்பாரிக்கிற காச சம்பாரிச்ச இடமான சினிமாவுலே போடறது, காப்பி அடிச்சாலும் வித்யாசத்த  விரும்புவது இப்படி இன்னும் நெறைய பிடிச்ச விஷயங்கள் இருக்கு, மேல சொன்னது பிடிக்காத விஷயங்கள் இன்னும் நிறையஇருந்தாலும்....
 
 உடல் ஆராய்ச்சிக்கு...உயிர் உலகநாயகனுக்கு..

No comments:

Post a Comment

August 19, 2011

உடல் ஆராய்ச்சிக்கு...உயிர் உலகநாயகனுக்கு..

வணக்கம்,

இந்த தலைப்ப பாத்த உடனே தெரிஞ்சுருக்கும்...இது உலக நாயகன் கமல்பத்தின பதிவு தான், அவர பத்தி என்ன எழுதுறது? ...புடிக்குதோ புடிக்கலையோஅவர பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு...அம்பது வருஷம் திரை உலகில்இருக்கிறது, நாலு தேசய விருது வாங்கினது, நெறைய படத்த ஆஸ்கருக்கு அனுப்பினது அப்படின்னு நெறைய பேருக்கு நெறைய விஷயம் தெரியும், இருந்தாலும் கமல் பத்தி எழுதனும்ன்ற ஆர்வம்...இத எழுததூண்டுச்சு...கூடுமான வரைக்கும் நீங்க கேள்வி பட்ட விஷயத்த எழுதாம, புதுசா இருக்குற மாதிரி பாத்துக்குறேன்...அவர் ரசிகன் அப்படின்றதால புடிச்ச விஷயம்தான் எழுதனும்னு இல்ல, பிடிக்காத விஷயமும் எழுதுவேன்..அபூர்வ ராகங்கள்படத்துல இருந்து ஆளவந்தான் வரை...சப்பாணி முதல் சப்புன்னு முத்தம்கொடுத்தது வரைன்னு ரொம்ப யோசிச்சு...அப்புறமா மேல இருக்குற பேறவெச்சேன்...
 
நினைவு தெரிஞ்சு, நான் முதல் முதலா தியேட்டர்ல போய் பார்த்த படம், சிகப்புரோஜாக்கள்...அதனால எனக்கு பரிச்சயமான முதல் நடிகர் கமல் தான்..சின்னவயசுல எல்லாருக்கும் புடிச்ச சார்லி சாப்ளின் வேஷத்துல வந்ததுனாலபுன்னகை மன்னன் படத்துல இருந்து பிடிச்ச நடிகரா ஆனார் கமல், பிற்பாடுஎல்லாருக்கும் புடிச்ச நாயகன்....ஹீரோன்னாலே எல்லாரையும் அடிச்சுபோட்டு வீரா வேசமா நடந்து வரத மட்டுமே நான் பாத்துருக்கேன்...ஆனாஜெயில்ல போலீஸ் கிட்ட அடி வாங்கி ரத்த களரியா பாத்ததும் ஏன் இந்தஹீரோ மட்டும் அடிவாங்கிட்டு வராரு அப்படின்னு என் பிஞ்சு மூளைக்குள்ளவந்த சந்தேகம் தான் என்ன அப்போ கமல் பின்னாடி ஓட வெச்சுது...தொடர்ந்துஇன்னொரு அதிர்சிகரமான ஜெயில பாத்தேன் மகாநதி படத்துல.. இப்படி தான்இருக்குமான்னு பாத்த எனக்கு அதிர்ச்சி...அப்படியே விடாம தொடர்ச்சியா அவர்படத்த பாத்து இந்தியன் படத்துல இருந்து கமல் வெறியனா ஆனேன்...இப்போவரைக்கும் அப்படி தான் ( ஆனா இந்த மன்மதன் அம்பு....என்னாலையே உக்காரமுடில)..
 
இப்படி சின்ன வயசுல இருந்து பாத்த சாப்ளின் செல்லப்பாவா, இந்தியன்சேனாபதியா, அப்புவா, ரங்கராஜ நம்பியா, ராகவனா, நல்ல சிவம்னு இப்படி பலரூபத்துல பாத்து அழுது இருக்கேன்...
இப்போ இருக்குற நடிகர்கள் நற்பணி மன்றம் அப்படின்ற பேர்ல ரசிகர்மன்றங்கள் நடத்தி தங்களோட அரசியல் ஆசைக்கு  உபயோகபடுத்திக்குறாங்க...ஆனா உச்சத்துல இருக்கும்போது ( 1986) தன்னோட ரசிகர்மன்றங்கள நற்பணி மன்றமா மாத்தி ...அரசியல் ஆசை இல்லாமஉண்மையிலேயே நற்பணி செய்யுறது இவர தான் இருக்கும். சினிமா தவிரமையம்` அப்படின்ற இலக்கிய பத்திரிகை நடத்தினது எத்தன பேருக்குதெரியும்னு தெரில..பரதம் கத்துகிட்டதால இயல்பா வந்த உடல் நளினத்தமாத்த கத்துகிட்ட கராத்தே,படத்துல பாடுறதுக்கு திரு.பால முரளி கிருஷ்ணா , குன்னகுடி வைத்தியநாதன் கிட்ட கத்துகிட்ட பாட்டும் வயலினும் இப்போவும்அவருக்கு உதவுது.. கடவுள பத்தின கொள்கைகள் எனக்கும் அவருக்கும்ஒன்னு அப்படீன்ற விஷயமும்..( இவரு இப்படி தான் எனக்கு தெரியருதுக்குமுன்னாடியே நான் அப்படி தான்...புரிஞ்சுதா....), பெரியார் பின்பற்றுதலும்பிடிக்க  காரணங்களுள் ஒன்று...ஆனால்........ 
`
பிடிக்காத பல விஷயங்களும் இருக்கு...  1974   19 வயசுல இவள தான் நான்கல்யானம பண்ணிக்க போரேன்னு அடம் பிடிச்சு, `இப்போ தான்டா நீசினிமாவுக்கு வந்துருக்க  உடனே கல்யாணம் வேணாம் டா` அப்படின்னுஅவங்கம்மா சொன்னதால அப்போ கல்யாணம் பண்ணாம 4 வருஷம் கழிச்சு 1978 திருமணம் செஞ்சுக்கிட்டாறு. அப்புறம் சரிகாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ சொல்றாரு திருமண உறவுல நம்பிக்கை இல்லைன்னு..இது மாதிரி இன்னும் நெறைய இருக்கு...தெளிவா பேசாதது, தமிழ் படத்துல ஒரு நாலஞ்சு மொழி பேச வெக்குறது, கட் பண்ணுவாங்கன்னு, எதிர்பாங்கான்னு தெரிஞ்சும் சர்ச்சைக்குரிய விஷயங்கள படத்துல வெக்குறது.. எந்தளவு இப்போ தமிழ்சினிமா முன்னாடி இருக்க அவர புகழ்ந்து   தள்ரோமோ, ஓரளவு தமிழ் சினிமா  குட்டி சுவர் ஆனதுக்கும் அவர காரணமா சொல்லலாம்..தமிழ் என் மூச்சு சொல்ற அவரால அவர் பொண்ணுங்களுக்கு தமிழ் உச்சறிப்ப சரியா  சொல்லி கொடுக்க முடியல, கேட்டா தனி மனித சுதந்திரத்துல தலையிட விரும்பலம்பாறு..
 
 உனக்குள்ள உலாத்திட்டு இருக்க  மிருகம் தான் எனக்குள்ள தூங்கிட்டுஇருக்குனு அவர் எழுதின வசனத்த எல்லா எடத்துலயும் எல்லாரும்உபயோகிக்க ஆரம்பிச்சுடாங்க..அவருக்குள இருக்குற அந்த மிருகம்முழிசுகிட்டா அவர் நடிக்கிற, இயக்குர படத்த தயாரிக்கிற தயாரிப்பாளர் ரொம்பபாடு படுவாங்க...தாணு ஒரு சிறந்த உதாரணம்..இந்தியால இருக்குற தலைசிறந்த நடிகர்கள் பட்டியல்ல இருக்குற ஒருத்தரோட படங்கள் வெளியிட சர்மாபடுவதும், ஆரம்ப நிலையிலேயே நின்னு போவாதும் கமல் ஒருத்தருக்கு தான் நடக்கும், அதுக்கும் கமலுக்குள்ள இருக்க அந்த மிருகம் தான் காரணம்...
 
எதையும் ஒளிவு மறைவில்லாம பேசுறது, தன மனசுக்கு பிடிச்சத செய்றதுஓரளவாவது தமிழ் சினிமாவ முன்னேதனும்னு நினைக்கிறது, சம்பாரிக்கிற காச சம்பாரிச்ச இடமான சினிமாவுலே போடறது, காப்பி அடிச்சாலும் வித்யாசத்த  விரும்புவது இப்படி இன்னும் நெறைய பிடிச்ச விஷயங்கள் இருக்கு, மேல சொன்னது பிடிக்காத விஷயங்கள் இன்னும் நிறையஇருந்தாலும்....
 
 உடல் ஆராய்ச்சிக்கு...உயிர் உலகநாயகனுக்கு..

No comments:

Post a Comment